1973ம் ஆண்டு சாஹித்ய அகாதமி விருது பெற்ற மாபெரும் எழுத்தாளர் அந்தப் பெண்மணி. ஆனால் இன்று ஆதரவுக்கு ஆளின்றி ஒரு முதியோர் இல்லத்தில் தன் மிச்ச நாளைக் கழித்துக் கொண்டிருக்கிறார்.
அவர்... ராஜம் கிருஷணன். தமிழின் மிகச் சிறந்த பெண் எழுத்தாளர்களில் ஒருவர். இடதுசாரி சிந்தனைகளுடன், அதே நேரம் மக்களின் யதார்த்த வாழ்க்கையை முற்போக்கான 50க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் நூறுக்கும் அதிகமான சிறுகதைகள், கட்டுரைகளைத் தமிழுக்குத் தந்தவர்.
1950-லேயே புகழ்பெற்ற நியூயார்க் ஹெரால்ட் டிரிபியூனின் சர்வதேச விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் இவராகத்தான் இருக்கும்.
உப்பள மக்களின் வாழ்க்கையின் அடிப்படையில் இவர் எழுதிய வேருக்கு நீர்தான் இவருக்கு சாஹித்ய அகாதமி விருதைப் பெற்றுத் தந்தது. இவரது மண்ணகத்துப் பூந்துளிகளையும், குறிஞ்சித் தேனையும், கரிப்பு மணிகளையும் தமிழறிந்த எந்த வாசகரும் மறந்திருக்க முடியாது.
இந்தளவு புகழின் உச்சியிலிருந்த ஒரு மிகப் பிரபல எழுத்தாளருக்கு ஏனிந்த பாதுகாப்பற்ற நிலை?
திருச்சி மாவட்டம் முசிறியில் 1925-ம் ஆண்டு பிறந்தவர் ராஜம் கிருஷ்ணன். 2002-ம் ஆண்டு தன் கணவர் கிருஷ்ணனை இழந்தார். பிள்ளைகள் கிடையாது. அதன் பிறகு தனது உறவுக்காரர்கள் சிலரை நம்பி தன்னிடமிருந்த பணத்தையும், சொத்துக்களையும் விட்டு வைத்தாராம்.
ஆனால் அவர்களோ இவரை ஏமாற்றிவிட்டு மொத்தமாக ஏப்பம் விட்டுவிட, 83 வயதில் நடுத் தெருவில் நிர்க்கதியாய் நிற்க, சில நண்பர்களும் அவரது ஒரு சகோதரரும் கை கொடுத்துள்ளனர்.
அவர்கள்தான் ராஜம் கிருஷ்ணனை விச்ராந்தி என்ற இந்த முதியார் இல்லத்தில் சேர்த்திருக்கிறார்கள்.
ஆனால் யாரும் தன்னைப் பார்த்து இரக்கப்படுவதை இந்த நிலையிலும் விரும்பாத ராஜம் கிருஷ்ணன், இப்போதும் அதே உற்சாகத்துடன் எழுத்துப் பணியைத் தொடர்கிறார். இவரது கடைசி புத்தகம் 'உயிர் விளையும் நிலங்கள்'.
குடும்பக் கட்டுப்பாடு மற்றும் அதை பெண்கள் எதிர்நோக்கும் விதங்கள் குறித்து 25க்கும் மேற்பட்ட கட்டுரைகளோடு கூடிய இந்தப் புத்தகம் பெண்களுக்கு புதிய விழிப்பை உண்டாக்கும் முயற்சி.
இப்போதும் கட்டுரைகள் மற்றும் கதைகளை எழுதிக் கொண்டிருக்கும் ராஜம், தமிழ் இலக்கிய உலகப் போக்கு குறித்த தனது அதிருப்தியை இப்படி வெளிப்படுத்துகிறார்:
உப்பளங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையைப் பதிவு செய்ய தூத்துக்குடி உப்பளத்தில் 6 மாதங்கள் தங்கியிருந்தேன். காரணம் எதையும் மேம்போக்காக்கப் பதிவதில் எனக்கு விருப்பமில்லை. மக்களின் வாழ்க்கையை அதன் வலிகளோடும், இயல்புகளோடும் பதிவு செய்ய வேண்டும்.
இன்றைக்கு பெரும்பாலான எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் கதையின் களத்தைப் பற்றிய அறிவு கூட இல்லாமல்தான் எழுதுகிறார்கள். எல்லாம் வறட்டுக் கற்பனை. இவர்களுக்கு சினிமா, சினிமா பாடல்கள்தான் வாழ்க்கை, இலக்கியம் என்றாகிவிட்டது.
யாருக்கும் மக்களைப் பற்றிய அக்கறையோ, குறைந்தபட்சம் அவர்களின் உலகத்தை எட்டிப் பார்க்கும் ஆவலோ கூட கிடையாது.
எழுத்து பெரிய வியாரமாகிவிட்டதன் விளைவாகக் கூட இது இருக்கலாம்...' என்கிறார் ராஜம் கிருஷ்ணன்.
நெஞ்சைச் சுடும் நிஜம்!
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களது ஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
பதிவு செய்தவர்: பாலமுருகன்
பதிவு செய்தது: 21 Nov 2008 10:12 am
உண்மைதான். வேருக்கு நீர் நான் படித்ததில்லை.. ஆனால், குறிஞ்சித் தேன் படித்து முடிக்கையில் அப்படி ஒரு ஆச்சரியம்.. அந்த மலைவாழ் மக்களின் வாழ்க்கையும் சோகமும் இயல்பும் மனதைப் பிசையும்.. அவர் இன்று முதியோர் இல்லத்திலா..தமிழ் இன்னும் தமிழ்நாட்டில் வாழ்கிறதா
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: வதனா
பதிவு செய்தது: 21 Nov 2008 06:01 pm
பாலமுருகன் அவர்களுக்கு,
இத்தனை பெரிய எழுத்தாளப் பெண்மணிக்கே அல்வா கொடுக்கும் அதி திறமை வாய்ந்த மனித நேயக்கூட்டம் இன்னும் தமிழ் நாட்டில் வாழ்கிறதை நினைத்து வெட்கப்படுங்கள். தமிழின் மற்றும் தமிழரின் விலாசம் அற்றுப்போவதற்கு இன்னும் அதிக காலம் இல்லை. தமிழ்நாடு என்பது பெயரளவில் மட்டும்தான் இருக்கப்போகிறது. இதற்கான முன் முயற்சிகளில்தான் சில மத்திய அரச கட்சிகள் களமிறங்கி இருக்கின்றன.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: பொதுசனம்
பதிவு செய்தது: 21 Nov 2008 04:56 am
இந்த அரசு ராஜம் கிருஷ்ணம் அவர்களின் படைப்புக்களை நாட்டுடைமையாக்க வேண்டும். இந்த அரசு கண்டிப்பாக செய்யும் என்றே நம்புகிண்றேன்.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: தம்பிதுறை
பதிவு செய்தது: 21 Nov 2008 12:18 am
பிள்ளைகளை பெற்ற தாய் தந்தையே முதியோர் இல்லத்தில் தங்கவைக்கும் காலம் இது. ரஜம் கிதுஷ்ணனை நினைக்கும் போது மணம் வேதனை அடைகிறது.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Mani
பதிவு செய்தது: 20 Nov 2008 07:45 pm
What a treacherous world of utter selfishness ? All her writings of moral has fallen on deaf ears. May her reaminig days last in peace. retirement.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: ஈழமகள்
பதிவு செய்தது: 20 Nov 2008 03:48 pm
ராஜம் கிருஸ்ணன் உலகத்தமிழர் நன்குணர்ந்த தரமான தமிழ் எழுத்தாளர் இன்றும் என்றும் மதிக்கப்பட வேண்டிய பெண் எழுத்தாளர் இவர் இன்றைய நிலையிலும் தன்நிலை தளராது இருப்பது அவரது லட்சியப்பற்றை காட்டுகிறது.தமிழ் உலகம் அவருக்கு கௌரவத்தையும் மதிப்பையும் கொடுத்து பேணி காக்க வேண்டும் என்பதே ஆசை
பதிவு செய்தவர்: Suresh Barathy TANSWA
பதிவு செய்தது: 20 Nov 2008 01:59 am
Dear our beloved Rajam Krishnan,
The age brings you to the old age house. But your work to tamil literature has been ever living spirit of art. You are so affectionate to me / us! because your Karippu Manigal and other so many novels and stories and articles made a change in tamil working class book readers. You got "Saagithya Acadamy Award" but not a child. But we all your childrens. Oh mum! You are so loveable by all tamil writers and readers. Long live RAJAM KRISHNAN. Your lovely..Suresh Barathy, Tamilnadu Social Welfare Association-TANSWA, Dammam, Saudi Arabia
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: அறிவு நிலையத் துறை
பதிவு செய்தது: 19 Nov 2008 08:17 pm
ஒரு சிறந்த எழுத்தாளர் என்பது
1. வாழும் வரை போராட்டம்
2. வாழ்வை முடித்த பின்னர் அவர்கள் பெயரில் விருது, சிலை, பல்கலைக் கழகம்
குப்பை வசனங்களையும் குடி-வன்முறை-ஆபாசம் கொண்ட படங்களுக்கு யதார்த்தம் என்கிற பெயரில் விருது கொடுக்க வெட்கப் படவில்லை.
கோவில்களைக் காக்க அற நிலையத்துறை
இந்த பொக்கிஷங்களை காக்க ஒரு துறையும் கிடையாதா
தமிழா என்று உன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ளப் போகிறாய்
பதிவு செய்தவர்: பிணம்
பதிவு செய்தது: 19 Nov 2008 08:12 pm
வணக்கம் அம்மா உங்கள் கருத்துக்கு நன்றீ
இஙகு அரஸு எந்திரம் அரஸியல்வாதிகலுக்காக மட்டுமெ வுள்ளது? பாமர மக்கள் ஸாவதைத் தவிர வேருவழி இல்லை.
பதிவு செய்தவர்: rajam krishnan
பதிவு செய்தது: 19 Nov 2008 08:05 pm
Respected Writer No mercy on you as you desired.
Prayaing for your happy and healthy life.
You said there is no one to think about this nation and the writers also became commercial.
If any one think about this nation please note, they will be sent to jail by the state government if not by Central Government. For which they have so many administrative staffs called as police,CBCID,CBI and so on..
You have crossed 83 no problem for you. You have enjoyed your life. At vishranthi they provide you a nice food. But for the youngsters if they come forward to think and write some good things to bring the nation to uplift, please note they will be sentnced to death by the INDIANS.
பதிவு செய்தவர்: Alaudeen Saudi Arabia
பதிவு செய்தது: 19 Nov 2008 06:44 pm
oru writerrke intha nilamai endral.. satharana pennai pattri ninaithu parungal...??? tragedy???
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Rasigan
பதிவு செய்தது: 19 Nov 2008 04:25 pm
Arputhamana ezhuthalar avar innum nalla padaipukkalai tamizh ulagukku vazanga vavathu neenda auludanum arokiyathudanum irukka vendum.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர