clear
clear
clear
x
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்

முதியோர் இல்லத்தில் மனைவியுடன் தங்கியுள்ள டி.என்.சேஷன்

திங்கள்கிழமை, ஜூலை 13, 2009, 10:02[IST]
TN Seshan with wife
Vote this article
Up  
Down  


சென்னை: முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், தனது மனைவியுடன் முதியோர் இல்லத்தில் தங்கியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் மீது சாதாரண பொதுமக்களின் கவனத்தையும் திரும்ப வைத்த பெருமைக்குரியவர் டி.என்.சேஷன். அரசியல்வாதிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர்.

மிகக் கடுமையாக தேர்தல் ஆணைய விதிகளை அமல்படுத்தியவர். இதனால் இவர் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் எதிரியானார்.

சென்னை வந்தபோது அதிமுகவினரால் ஓட ஓட விரட்டப்பட்டவர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் சேஷன்.

இந்த நிலையில் சேஷனும், அவரது மனைவியும் ஒரு முதியோர் இல்லத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர். இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

சென்னை அருகே பெருங்களத்தூரில் உள்ள குருகுலம் ஒன்றில் இவர்கள் தங்கியுள்ளனர்.

சேஷனுக்கு தனியாக வீடு உள்ள போதிலும், தன் வயதையொத்தவர்களுடன் சேர்ந்து வாழ் விரும்பியே முதியோர் இல்லத்திற்கு இடம் பெயர்ந்துள்ளாராம் சேஷன்.



User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: மானங்கெட்ட தமிழன்
பதிவு செய்தது: 29 Jan 2010 5:26 am
Sir, you are awesome, as great as ever.. I really feel proud that I too hail from the same place as you are, the place that you carry in your name.. I also heard that you are a distant relative of mine.. LONG LIVE sir... have a wonderful life ahead..

பதிவு செய்தவர்: நல்ல தம்பி
பதிவு செய்தது: 28 Jan 2010 10:08 pm
இப்போ மீண்டும் ஒரு செஷன் பொறக்க வேண்டும் இல்லை என்றல் பணனயகத்தை ஒழிக்கமுடியாது, இது தான் நிதர்சனம்

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்