கதறியழும் பதுங்குகுழிகள் ..-வசீகரன் நிலங்களை விழுங்கும்சிங்கத்தின் திறந்த வாய்க்குள்எறும்புகள் போல் நுழைந்துபோர்முகங்கள்தற்கொலை செய்கிறதுஒருவேளை கஞ்சிக்காய்உயிர் சுமக்கும் கோப்பையில்உச்ச துன்பங்களை அணைத்தபடிஉறங்கும் எலும்புக் கூடுகள்தொண்டு நிறுவனங்களும்எட்டாத தூரத்தில்தொலைந்து போனதுஎலும்புக் கூடுகளில்பட்டினிப் பதாகைகள்ஏந்தியபடி காலில்லாதகைகள் அசைகிறதுஅழித்து அழித்துஆனா எழுதிய மண்ணில்உயிர்எழுத்தும் மெய்யெழுத்தும்உயிர் இழந்து கிடக்கிறதுகண்ணீர் வெடித்துச் சிதறியபடி”ஐயோ அறுவான்கள்பல்குழல் அடிக்கிறாங்கள்”மௌனக் குரல்கள் கொதிக்கிறதுவல்லினம் மெல்லினம்இடையினம்எல்லாம் வேடிக்கை பார்க்கபீரங்கிகள் வாய்திறந்துபிசாசுகள் போலவேகுண்டுகளைத் துப்புகிறதுநீலக்
உன்னை நான் உணர்ந்ததால்..-காயத்ரிதேவி ராமச்சந்திரன்கார்மேகம் சூழ்ந்திருக்கமயிலுக்கு மட்டுமா கொண்டாட்டம்வான் பார்த்த பூமிக்கும் கூடசிறு தூரலில்,தவளைக்கு மட்டுமா கொண்டாட்டம்துளிர்விடும் செடிகளுக்கும் கூடஎன்னை துன்புறுத்தியதில்,உனக்கு மட்டுமா கொண்டாட்டம்எனக்கும் கூட,உன்னை நான் உணர்ந்ததால்!!!..
இனம் தின்னும் ராஜபக்சே!-கவிஞர் வைரமுத்துசொந்த நாய்களுக்குச்சொத்தெழுதி வைக்கும் தேசங்களே!ஓர் இனமேநிலமிழந்து நிற்கிறதேநிலம் மீட்டுத்தாருங்கள்பூனையொன்று காய்ச்சல் கண்டால்மெர்சிடீஸ் கார் ஏற்றிமருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே!ஈழத்து உப்பங்கழியில்மரணத்தை தொட்டுமனித குலம் நிற்கிறதே!மனம் இரங்கி வாருங்கள்!வற்றிய குளத்தில் செத்துக் கிடக்கும்வாளை மீனைப்போல்உமிழ்நீர் வற்றிய வாயில்ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடுரொட்டி ரொட்டியென்றுகைநீட்டிம் சிறுவர்க்குக்கை கொடுக்க வாருங்கள்!தமிழச்சிகளின் மானக்குழிகளில்துப்பாக்கி ஊன்றித் துளைக்கும்சிங்கள வெறிக் கூத்துக்களைநிரந்தரமாய் நிறுத்துங்கள்!வாய்வழி புகட்டிய தாய்ப்பால்காதுவழி..
இரட்டை வேடம் போடும் கம்யூனிஸ்ட்-கருணாநிதி கவிதைசென்னை: இலங்கை விவகாரத்தில் கம்யூனிஸ்ட்டுகள் இரட்டை வேடம் போடுவதாக முதல்வர் கருணாநிதி கவிதை எழுதியுள்ளார்.இதுதொடர்பாக கருணாநிதி எழுதியுள்ள கவிதை..களங்களிலே போரில் பிணம் குவியும்! ஈழத்திலோகண்ட கண்ட இடங்களிலே தமிழர்கள் பிணங்களாய்க் குவிகின்றார்இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும்இரத்தம் கொட்டும் இந்தப் போரை நிறுத்து என்றுஇடித்துக் காட்டியும் இறைஞ்சிக் கேட்டும் குரல் கொடுக்கின்றனகண் கலங்கிடக் கண்டனங்கள் பொழிகின்றனஐநா சபையும் அப்படியொரு..
ஒன்றாய் கூடுவோம்..வென்றே தீருவோம் - கருணாநிதி கவிதைசென்னை: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக திமுக நடத்திய போராட்டத்தை விமர்சித்த எதிர்க்கட்சிகளை கண்டித்து முதலவர் கருணாநிதி இயற்றியுள்ள கவிதை...உணர்ச்சியுள்ள தமிழரெல்லாம் ஒன்று கூடினோம்!உயிர்ப் பலியாகும் ஈழத் தமிழர்க்காக என்றும் வாடினோம்!செல்வா காலம் முதல் சிங்களர் ஆதிக்கம் வீழ்த்த பரணி பாடினோம்!சிறைச்சாலை, சிம்மாசனம் இழப்பு என்று சித்ரவதை கண்டு வாடினோம்!ஈழ விடுதலை போருக்கு இந்திரா காந்தியும் ராஜீவும் இணக்கம்..
வழி கிடைக்குமா?-சேது ராமலிங்கம்கதறி கொண்டு வந்தான் - அம்புலன்ஸ்அவசர சிகிச்சைக்காக - அலாரம் அடித்து கொண்டேமுன்னும், பின்னும் மக்கள் நெரிசல்வழி கொடுக்க மனம் இல்லை மக்களுக்கு.வந்தான் - மாநகரின் மாண்புமிகு குப்பை லாரி5 நாள் குப்பைகளுடன், 5 கிலோமீட்டருக்கு நாற்றம் வீசஆரவாரமே இல்லாமல் வந்த அவனுக்கு,அலறி கொண்டு வழிவிட்டார்கள் மக்கள்முன்னும், பின்னும் நெரிசல் இல்லை 2 கிலோமீட்டருக்கு..
நீ வருவாய் என..,-மதுக்கூர். முஹம்மது ரூமிதிசைமாறி சென்ற படகை போல...வாழ்க்கை யெனும் தடத்திற்கு செல்ல திசையறியாமல் தடுமாறினேன்...திருப்புமுனை குரல் ஒன்று என் செவிகளுக்கு கேட்கவே...திரும்பிபார்த்தேன்?!?!?.. என் அருகில் நீ!!!ஈர்ப்புவிசை கொண்ட உன் கரங்களோடு... என் கரங்களும் இணைய....நம் பயணத்தை தொடர்ந்தோம்...மகிழ்ச்சி யெனும் மறு உருவத்தை அப்பயணத்தின் பொழுது தான் கண்டேன்... நாம் கடந்துக் கொண்டிருக்கும் பாதையில்!!!காழ்ப்புணர்ச்சி கொண்ட காளான்கள் செய்த..
திருப்பூர் மக்கள் மாமன்ற கவிதைப் போட்டி - படைப்புகள் வரவேற்புதிருப்பூர்: திருப்பூர் மக்கள் மாமன்றம் கவிதைப் போட்டியை நடத்தவுள்ளது. இதில் பங்கேற்போர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கோடை காலத்தையொட்டி திருப்பூர் மக்கள் மாமன்றம் சார்பில் கவிதைப் போட்டி நடத்தப்படவுள்ளது.கோடையில் வீசிய தென்றல் என்ற தலைப்பில் கவிதையை 1 பக்கம், 24 வரிகளுக்கு மிகாமல் 3 நகல்கள் அனுப்ப வேண்டும். ஒருவர் எத்தனை கவிதைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம். கவிதையுடன் 2..
தலைவர் பதவிக்கு குறி வைத்த தம்பி - கருணாநிதி கவிதைசென்னை: திமுகவில் இருந்தபோது, எனது பதவிக்கு குறி வைத்தார் அந்தத் தம்பி. அதேபோல நான் நீண்ட காலம் உயிரோடு இருந்தால் தலைவர் பதவியை அடைய முடியாதே என்றும் கவலைப்பட்டார் என்று கவிதை எழுதியுள்ளார் முதல்வர் கருணாநிதி.கருணாநிதியின் அந்த கவிதை:(முன்னுரை:- கழகக் குடும்பத்தின் உடன்பிறப்புகள் -பாசமிகு தம்பிமார்கள் எல்.ஜி., செஞ்சி - அவர்களைத் தொடர்ந்து தம்பிகள் மு.கண்ணப்பன், கம்பம்..
ஜாதியிரண்டொழிய...-ரிஷி சேதுகாற்றில் சிதறும் வெண்பஞ்சு மேகமெனமுன்னும்பின்னுமாய் அலைகிறதென்எண்ணவோட்டங்கள்.....என்னை மிதித்தேறிப் போகிறதுன்ஜாதிய முகம்...வக்காளத்துக்கு வந்த கட்சிகளும்என்னை அவர்கள் ஜாதிய முகம் கொண்டே பார்த்தன....சில ஆயிரம் வாக்குகளும்பல நோட்டுகளும் கைமாறியபின்மரணித்தன கரைவேட்டிகளின்ஜாதிய முற்போக்கு சிந்தனைகள்...உண்மையைச் சொன்னால்இன்னும் வெளிச்சத்திற்கு வாராநந்தன் வித்தைகிறான்அறுக்கிறான் படைக்கிறான்மறக்காமல் பதில் மரியாதைமலம்திண்ண....இரட்டைக் குவளை வைத்தவனைவாழ்த்தியபடி செல்கிறது ஜாதிய கட்சிகள்...அவர்களுக்கு மீண்டும் உதவலாம்ஓட்டுவங்கியென இவைகள்....பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...ஜாதிகள் இல்லையடி...ஜாதியிரண்டொழிய...எல்லாம்..
உறங்கிடு என் தோழியே!- ஷார்ஜா ஷேக் இப்ராகிம்இறைவன் நிலவினில் அழகினை கொடுத்தன் காரணம்தன் துணை அதைவிட அழகென்றுதெரியத்தான்;நட்சத்திரத்தில் ஒளியினை கொடுத்ததன் காரணம்செயற்கைத்துணைக் கொண்டவரை இயற்கையின் வெளிச்சம் காட்டத் தான்;உலகாசை அதிகம் கொண்ட மனிதர்க்குபாடம் புகட்டத்தான் மேகம் நிலவினை மறைக்கிறது அதன் காரணம்எதுவும் நிலையல்லவே!கனவினில் நிஜங்களை உணர்வதனால்நிஜங்களை கனவாக மாற்ற முடியாதுகாரணம்இது நிழல்படமில்லாத நிஜப்படம்;உறங்கும் நேரம் மரணத்தை உணர்ந்துகொள்அதன் பயம் உன்னிடமிருந்து குறையும்;இரவுகள் கற்றுக்கொடுக்கும் ஓரே பாடம்உலகத்தில் மாற்றங்கள் அனைத்தும் பொதுவானது;ஒய்வெடுக்கும் நேரத்தில் இந்த கவிதோழன் தாலாட்டஉறங்கிடு என் தோழியே! - ஷார்ஜா ஷேக் இப்ராகிம் (shaikamjath0012@gmail...
காதலில் ஓர் பக்குவம்!- ஷார்ஜா ஷேக் இப்ராஹிம்சூரியனும் நிலவும் ஒரு நாளில் ஒரு நிமிடம்மட்டும் நேரெதிர் பக்கமாய் சந்திப்பதற்குகாத்திருப்பது போல காதலில் பொறுமைஅவசியம்;செடியில் பூப்பதை எல்லாம் தான் விரும்பினாலும்பூக்களை ரசித்து விரும்புபவர்க்குசெடி விட்டு கொடுப்பது போலகாதலில் விட்டு கொடுத்தல் அவசியம்;இறுதியில்காதல் என்பது காமம் திறக்கும் சாவியாகாமல் மனம் திறக்கும் புத்தகமாக இருக்க வேண்டும்அதை படித்து இன்பம் பெறுவதை விடநம் பக்குவம் அதிகமாகும்...
ஒரு சின்னத்திரியின் அஞ்சலி...- புதுவை இரத்தினதுரைசோதிப்பெரு வெளிச்சத்திற்கு ஒரு சின்னத்திரியின் அஞ்சலி முத்துக்குமரா!முகம் தெரியாப்போதினிலும்செத்துக்கிடக்கின்றாய் எமக்காக,எனவறிந்துதேகம் பதறுகிறதே திருமகனே! உந்தனது, ஈகம் அறிந்து எம்மிற்தீ பற்றுகுதேநீட்டிக்கிடக்கின்றாயாம் நீஉனக்கு அஞ்சலியெழுதும் என்னைச்சுற்றி நூறு உடலங்கள் கிடக்கின்றன வரிசையில் அத்தனையும் எம் உறவுகளின் உயிரிழந்த கூடுகள்...
~~திருமங்கலத்து யானை~~திருமங்கலம் வெற்றி தொடர்பாக முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள கவிதை: உன் துதிக்கையை உலக்கை என்றார்; உன் தூய வெள்ளைத் தந்தம்; கூர் தீட்டிய ஈட்டி என்றார்;உரல் என்றார் - உன் கால்கள் நான்கு கண்டவர்கள்;கனமான காதுகளை முறங்கள் எனக் கேலி செய்தார்!இவ்வாறுகண்ணிருந்தும் குருடர்களாய்க்கற்பனை பல செய்து, கதைகள் கட்டி-பயனுள்ள பொருள்களையும்; படைக்குதவும்பயமிகு கருவிகளையும் உவமையாக்கி; உனைபழித்தும், புகழ்ந்தும்-குபைல சொல்லிப் பேசும் கும்பலை - வேடிக்கைபார்த்துக் கொண்டேயிருந்தாய்; பாவம் நீ;பாழும் அந்தக் கும்பல் பதறிக் குலைந்து சிதற,கொம்புகளால் குத்தியும்;கால்களால் மிதித்தும் - உன்னால்பழி தீர்க்க முடியுமெனினும்பதிலுக்குப் பதில் என்றில்லாமல்;திருமங்கலத்து யானையாம் நீ;திருக்குறள் வழி நிற்பதால்இன்னா செய்தாரை ஒறுத்திட அவர் நாணநன்னயஞ் செய்து விடுவாய்!என்று எழுதியுள்ளார் கருணாநிதி...