யோவ்... வெவராமத்தான் பேசுறியா. தமிழ் நாட்டோட சனங்களைப் பத்தி நேசம்மா தெரிஞ்சிதான் பேசுறியா. எல்லா சினிமாக்காரனையும் தமிழ்நாட்டுல இருந்து வெரட்டிட்டா, ரசிகனுகளும் நடிகனுக பின்னாடி பொய் கோஷம் போடுறது, நடிகைகளுக்கு கோயிலு கட்டவும் ஆரம்பிச்சிருவானுக. அப்புறம், தமிழ்நாடு கிளிநொச்சி மாதிரி ஆளுக இல்லாத பூமி ஆயிரும். அப்புறம், நீயும் நானும் மட்டுந்தான் தனியா இருக்கோனும். ஒனக்கு ஏன்யா இந்த விபரீத ஆச.
ஏதோ ஒரு பழைய தமிழ் படத்துல, கவுண்டமணி எல்லா கொழந்தைகளுக்கும் பேரு வெச்சி இனாமா பணம் குடுக்குராருன்னு ஊரு முழுக்க ஒரே பரபரப்பா பெசிக்கிடுவாக. இதுதான் சாக்குன்னு, செந்தில் ஊர்ல இருக்குற எல்லா ஊட்லவும் போயி பொய் சின்னப் புள்ளைகளையெல்லாம் கூட்டியாந்துடுவாறு. அத்த பாத்து கவுண்டமணி பேஜாராப் போயிருவாரு. ஆனாக்க, அந்த க்யூ வரிசைல கடைசியா ஒரு ஆளு ஒரு வயசான தாத்தாவ தூக்கி வெச்சிருப்பாரு. இந்த கிழவருக்கும் இன்னும் பேரு வெக்கல. நீங்களே ஒரு பேரு வேச்சிருங்கன்னு அந்த ஆளு சொல்லவும், நம்ம கவுண்டரு அதிர்ச்சி ஆயிருவாறு. அப்புறமா, அந்த தாத்தாவுக்கு பிணம் அப்படீன்னு பேரு வெப்பாரு. அது மாதிரியில்ல இருக்கு நம்ம ஸ்டாலின் செய்யுறது.
தளபதி. மு.க. ஸ்டாலின் அவர்கள் எத்தனை வீடுகளுக்குச் சென்று எத்தனை குழந்தைகளுக்குப் பெயர் சூட்டி பணம் கொடுத்தார் என்பதையும் வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஒரு சமயம், அந்தப் பணம் அந்தக் குழந்தைக்குத் தேவையானவற்றை மட்டுமே வாங்குமலவுக்குத் தரப்பட்டதா அல்லது அந்த குடும்பத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்யுமளவுக்குத் தரப்பட்டதா என்றும் தெரிந்து விடும். திருமங்கலம் தொகுதியின் ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைப் பிறப்பு இருக்காது என்றே தமிழர்கள் நம்புகிறார்கள் என்பதால், அந்த நம்பிக்கையை தளபதியும் அம்மையாரும் தகர்க்க மாட்டார்கள் என்றே நம்புகிறார்கள் தமிழர்கள். ஆனால், எனக்கு விளங்காத ஒரே விஷயம் இதுவே. கடந்த இருதினங்களுக்கு முன்னர்தான், திமுகவின் பொதுச்செயலாளர் pEraasiriyar அன்பழகன் பேசுகையில், தமிழர்கள் சிறுபான்மையாக இருக்கும் எல்லாப் பிராந்தியத்திலும் கலாச்சாரத்தைச் சிறப்பாகக் கடைபிடிக்கிறார்கள் என்றும் அவர்கள் பெரும்பான்மையாக வாழும் தமிழகத்தில் கலாச்சாரம் கெட்டுப்போயும், விட்டும் வாழ்கிறார்கள் என்றும் வருத்தப்பட்டிருந்தார். இதுபோன்ற கலாச்சாரம் கெட்ட தமிழகத்தில் தளபதி அவர்கள் தமிழ்க் கலாச்சாரத்தை முழுமையாக அறிந்தும் கடைபிடித்தும், மற்றோருக்கு முன்னுதாரணமாக வாழ்வது உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது.
திருமங்கலம்: வாக்காளர்களுக்கு பணம் எதுவும் கொடுக்கவில்லை. ... [ Read Article ]