அங்கே வெட்டு..இங்கே குத்து.. 'விளங்க முடியா' தேர்தல் இது!
திருமஙகலம்: திருமங்கலம் தொகுதியில் அதிமுகவுக்குக் கிடைக்கும் வெற்றி வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோடியாக அமையும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். ... [ Read Article ]
ஏதோ அதிமுக ஜனநாயகத்தின் கோட்டை போலவும் அதிமுக கூட்டணியில் உள்ள அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் பேசியிருப்பது நல்ல நகைச்சுவை. எந்த வெட்கமோ துக்கமோ இல்லாது திருமங்கலம் தொகுதியை அதிமுகவுக்கு விட்டுக் கொடுத்த வைகோ " எம்ஜிஆரின் எஃகு கோட்டையான திருமங்கலம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கம் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. ஆனால் இதைத் தடுக்க கடைசி நேரத்தில் அங்கே வெட்டு, இங்கே குத்து என்று நம்மை திசை திருப்பப் பார்ப்பார்கள். நாம் மிக கவனமாக இருக்க வேண்டும்" எனப் பேசியிருப்பது இன்னொரு நகைச்சுவை. முந்தைய ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அனுமதிக்கப்பட்ட வரம்புகளை மீறி கொடைக்கானலில் 7 தளங்கள் கொண்ட கட்டிடத்துக்கு அனுமதி வழங்கியதை அடுத்து தொடரப்பட்ட ப்ளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் நீதிபதி ஓராண்டு கடுங்காவல் தண்டனை அளித்து தீர்ப்பளித்ததை அடுத்து அதிமுக குண்டர்கள் குடிவெறியில் தமிழகம் முழுதும் வீதி மறியல் அரசு பேருந்துகள் எரிப்பில் குதிக்கிறார்கள். அப்போது சுற்றுலா முடிந்து கோவை திரும்பிக்கொண்டிருந்த வேளாண் பல்கலைக்கழக மாணவ மாணவியர் பயணம் செய்த பேருந்துகள் தர்மபுரி வந்த போது அதிமுக குண்டர்களால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்படுகிறது. அதில் சென்னையை சேர்ந்த ஹேமலதா, விருத்தாசலத்தை சேர்ந்த காயத்ரி, நாமக்கல்லை சேர்ந்த கோகிலவாணி மூவரையும் தீ காவு கொள்கிறது. இந்த நிகழ்ச்சியை ஆயிரம் மேடைகளில் சொல்லி ஜெயலலிதாவுக்கு எதிராகப் பரப்புரை செய்த வைகோ இன்று அதே ஜெயலலிதாவையும் அதிமுகவையும் ஆதரித்து எந்த முகத்துடன் பரப்புரை செய்கிறாரோ தெரியிவில்லை.
சேராத இடம் சேர்ந்ததால் வைகோவின் அரசியல் நேர்மை, நாணயம், நம்பிக்கை பலத்த அடிவாங்கி வருகிறது. அதை அவர் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.
திருமஙகலம்: திருமங்கலம் தொகுதியில் அதிமுகவுக்குக் கிடைக்கும் வெற்றி வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோடியாக அமையும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். ... [ Read Article ]