கன்னடத்துக்குப் போய்விட்டார் 'காதல்' சந்தியா.
ராஜ்குமாரின் மகனான சிவராஜ் குமாருடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
தமிழில் காதல் கொடுத்த புகழ்தான் இன்னும் சந்தியாவிடம் மிச்சம் உள்ளது. அதற்குப் பிறகு அவரது பெயர் சொல்லக் கூடிய அளவுக்கு எந்தப் படமும் அமையவில்லை.
தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும் தலையைக் காட்டி வருகிறார் சந்தியா. இந்த நிலையில் சிவராஜ் குமாருடன் இணைந்து நடிக்கவுள்ளார் சந்தியா.
ஒரு சிறிய அறுவைச் சிகிச்சை மூலம் தனது பெரிய மூக்கை சுருக்கி அழகாக்கியுள்ளார் சந்தியா. அந்த அழகு மூக்குடன் அவர் நடிக்கப் போகும் முதல் படம் இந்த கன்னடப் படம்தான்.
இப்படம் தனக்கு தமிழிலும் நல்ல பிரேக்கைத் தரும் என எதிர்பார்க்கிறாராம் சந்தியா.
என்னைத் தேடி நிறையப் படங்கள் வரத்தான் செய்கின்றன. நான்தான் எனக்குப் பிடித்த படமாக தேர்வு செய்து நடித்து வருகிறேன். எல்லாப் படங்களிலும் நடித்து பெயரைக் கெடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை என்கிறார் சந்தியா.
இந்தக் கன்னடப் படத்தில் சந்தியாவுக்கு சவாலான வேடமாம். நடிக்க நிறைய வாய்ப்பாம்.