வீட்டு வசதி வாரிய இடம்... விஜய் மீது தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!சென்னை: செனனையில் வீட்டு வசதி வாரிய நிலம் ஒதுக்கீடு தொடர்பாக நடிகர் விஜய் மீது தொடரப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சென்னை ஷெனாய் நகரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் நடிகர் விஜய்க்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கொரட்டூரில்...
அதிமுக நடிகை சி.ஆர்.சரஸ்வதிக்கு ஆபாச மிரட்டல் -போலீஸில் புகார்சென்னை: நடிகையும், அதிமுக பேச்சாளருமான சி.ஆர்.சரஸ்வதிக்கு தொலைபேசியில் ஆபாச மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்துப் புகார் கொடுத்துள்ளார்.கே.பாக்யராஜ் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் சி.ஆர்.சரஸ்வதி. தற்போது அதிமுகவில் மேடைப் பேச்சாளராக உள்ளார். இவர் சென்னை போலீஸ் ஆணையர் ராஜேந்திரனை சந்தித்து ஒரு புகார் கொடுத்துள்ளார்.அதில், சில தினங்களாக மர்ம நபர்..
பிரகாஷ்ராஜ்-லலிதாகுமாரிக்கு விவாகரத்து!சென்னை: நடிகர் பிரகாஷ்ராஜ் - லலிதாகுமாரிக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.தென்னிந்தியாவின் மிகப் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு, நடிகை லலிதகுமாரியை காதலித்து மணம் புரிந்தார். முன்னாள் நடிகர் ஆனந்தனின் மகள்தான் லலிதகுமாரி. இருவருக்கும் கடந்த 25.12.94-ல் சென்னை வடபழனி முருகன் கோவிலில் இருவரும் திருமணம்..
திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் தேர்தல்: கலைப்புலி ஜி சேகரன் வெற்றி!திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் தேர்தல்: கலைப்புலி ஜி சேகரன் வெற்றி!திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் தேர்தலில் கலைப்புலி ஜி சேகரன் 91 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கே ராஜன் தோல்வியடைந்தார். சென்னை- காஞ்சீபுரம்- திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம் தமிழ்த் திரையுலகில் பலம் வாய்ந்த அமைப்புகளில் ஒன்று. 2..
பேராண்மை.. இடஒதுக்கீடு.. ஜனநாதனுக்கு பாராட்டுபேராண்மை படம் பார்த்த முதல்வர் கருணாநிதி, படம் முடிந்த பிறகு அதன் இயக்குநர் ஜனநாதனிடம், இட ஒதுக்கீடு பற்றி சிறிது நேரம் பேசிவிட்டுச் சென்றார்.எஸ்.பி.ஜனநாதன் இயக்க, ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ள படம் பேராண்மை. அய்ங்கரன் தயாரிப்பில் தீபாவளிக்கு வெளியான இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்தப் படத்தை சில தினங்களுக்கு முன் வழக்கமாக தான் படம்..
ரஜினி பட ஷூட்டிங்கால் போக்குவரத்து பாதிப்பு - மக்கள் அவதிரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் படப்பிடிப்புக்கு பெருமளவில் ரசிகர்கள் திரண்டு வந்ததால் போக்குவரத்து பாதித்து மக்கள் பெரும் அவதி அடைந்தனர்.சென்னை அருகே உள்ள மதுரவாயல் பகுதியில் பிரமாண்ட உள்வட்டச் சாலை மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்தப் பாலத்தில் வைத்து படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைப் படமாக்க விரும்பியுள்ளார் எந்திரன் பட இயக்குநர் ஷங்கர்.இதையடுத்து கடந்த 3 நாட்களாக..
சூர்யா-ஜோதிகா கட்டடம் கட்ட தடை கோரி வழக்குசென்னை தி.நகரில் நடிகர் சூர்யாவும், அவரது மனைவி ஜோதிகாவும வாங்கியுள்ள நிலத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளத் தடை விதிக்கக் கோரி அமெரிக்காவைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.சமீபத்தில் நடிகர் விஜய்க்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அவர் வாங்கிய நிலம் முறைகேடாக விற்கப்பட்டதாக கூறி இந்த வழக்கு தொடரப்பட்டது.இந்த நிலையில், நடிகர் சூர்யாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது...
விஜய் வழக்கு ஒத்திவைப்பு!வீட்டு வசதி வாரிய இடத்தை நடிகர் விஜய் வாங்கியதில் நடந்துள்ள முறைகேடு விவகாரத்தில் விஜய்க்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த கார்வண்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், தங்களது நிலம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் நடிகர் விஜய்க்கு முறைகேடாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதை மீட்டு தருமாறும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு..
இலங்கை திரைப்பட விழா தள்ளிவைப்பு!டெல்லி: இலங்கை காலேயில் நடைபெறவிருந்த சர்வதேச திரைப்பட விழா அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.'நிதி நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு காலே திரைப்பட விழாவை நடத்த முடியவில்லை' என விழாவின் ஒருங்கிணைப்பாளர் மெனிகா வான் டெர் பூர்டன் அறிவித்துள்ளார். ஆனால் அரசுத் தரப்பில் பாதுகாப்புக்காக இந்த விழாவுக்கு கிரீன் சிக்னல் கிடைக்காததாலேயே தள்ளிப் போனதாகவும் கூறப்படுகிறது. இலங்கை..
காங்கிரசுக்கு சல்மான் கான் பிரச்சாரம்உத்தரப் பிரதேசமாநிலம் பைரோசாபாத் எம்பி தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜ் பப்பருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் குதித்துள்ளார் நடிகர் சல்மான்கான். இந்த தொகுதியில் முலாயம்சிங் யாதவின் மருமகள் டிம்பிள் யாதவ் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. ராஜ் பப்பர் ஏற்கனவே சமாஜ்வாடி கட்சியில் முலாயம் சிங் யாதவுக்கு நெருக்கமான எம்பியாக இருந்தவர். ஆனால் அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக..
புவனேஸ்வரி கையெழுத்து போட்டாக வேண்டும்- நீதிமன்றம் உத்தரவுசென்னை: விபச்சார வழக்கில் கைதாகி, தினசரி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்ட சினிமா நடிகை புவனேஸ்வரியின் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த முடியாது என்று சென்னை சைதாப்பேட்டை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.அடையாறில் உள்ள தனது வீட்டில் ஆட்களை வைத்து விபச்சாரம் செய்து பிடிபட்டார் புவனேஸ்வரி. அவர் உள்பட 3 பேரை கையும் களவுமாக பிடித்த போலீஸார்,..
ஆபாச பேச்சு: சூர்யா,சத்யராஜ்,சரத்குமார்,விவேக் ஆஜராக சிவகங்கை கோர்ட் உத்தரவு!அடுத்த சில தினங்களில் தமிழகம் முழுக்க கோர்ட்டுகளில் ஆபாசப் பேச்சு புகழ் நடிகர் நடிகைகளை தொடர்ந்து பார்க்கலாம், மக்கள். குற்றவாளிக் கூண்டில் அவர்கள் ஏறி பதில் சொல்லும் காட்சியை, கட்டணமின்றி நிஜத்திலேயே பொதுமக்கள் பார்க்கலாம். பாஸ்டர்ட்ஸ், ஈனப்பிறவிகள், ராஸ்கல்ஸ் என்று அனைத்துப் பத்திரிகையாளர்களையும் மேடை போட்டு திட்டித் தீர்த்துவிட்டு, பின்னர் 'எங்களுக்குள் பேசிக் கொண்டோம்' என்று பம்மித்..
பழஸிராஜா பார்த்த கருணாநிதி!மம்முட்டி- சரத்குமார் நடிப்பில், மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்றுள்ள பழஸிராஜா படத்தின் சிறப்புக் காட்சி தமிழக முதல்வர் கருணாநிதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.பழஸிராஜாவின் தமிழ்ப் பதிப்பு விரைவில் தமிழகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த தமிழ்ப் பதிப்பைத்தான் நேற்று முதல்வருக்கு திரையிட்டுக் காட்டினார்கள் தயாரிப்பாளர் கோகுலம் பிரவீண்.படம் பார்த்த கருணாநிதி, "மிகச் சிறப்பாக இந்தக் கதையைக் கையாண்டுள்ளதாகவும், இயக்குநர்..
சரத்-சூர்யா-விவேக் உள்ளிட்ட 8 நடிகர்களுக்கு சம்மன்!பழநி: பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய நடிகர், நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பழநி, சிவகங்கை நீதிமன்றங்களில் நேற்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. டிச. 2ல் பழனி கோர்ட்டில் நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உட்பட 8 பேர் ஆஜராக வேண்டும் என, மாஜிஸ்திரேட் சரத்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.திண்டுக்கல் பிரஸ் கிளப் உறுப்பினர் எம்.மதிவாணன் சார்பாக வக்கீல்கள் பி.எஸ்.கோபிநாத், எஸ்.கார்த்திக்குமார்,..
'கைதிகளின்' ரேம்ப் வாக்!மதுர் பண்டர்கரின் ஜெயில் படத்தின் கலைஞர்கள் டெல்லியில் நடந்த பேஷன் ஷோவில் கைதி உடையில் நடை போட்டனர். ரேய்னு டாண்டனின் டிசைனில் உருவான உடைகளைப் பிரபலப்படுத்தும் நிகழ்ச்சி வில்ஸ் இந்தியா பேஷன் வாரத்தில் நடந்தது. இதில் மதுர் பண்டர்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயில் படத்தில் நடித்துள்ள கலைஞர்கள் கைதி உடையி்ல நடை போட்டனர். ஒரு சிறையில் நடக்கும்..