சென்னை:
12ஆவது சட்டசபையின் முதல் நாள் கூட்டம் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்புடன் முடிவடைந்தது.
12ஆவது சட்டசபை செவ்வாய்க்கிழமை கூடியது. முதல் நாளன்று புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள்பதவி ஏற்றுக் கொண்டனர்.
தற்காலிக சபாநாயகர் அப்துல் லத்தீப், புது எம்.எல்.ஏ.க்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.செவ்வாய்க்கிழமை பதவி ஏற்காத எம்.எல்.ஏ.க்கள், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் பதவி ஏற்பார்கள்.
புதன்கிழமை சபை கூடாது. பதிலாக, சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல்பெறப்படும். 24ஆம் தேதி சபாநாயகர் தேர்தல் நடைபெறும்.
சபாநாயகராக டாக்டர் கா. காளிமுத்து தேர்வு செய்யப்படுவார். வரகூர் அருணாசலம் துணை சபாநாயகராகதேர்ந்தெடுக்கப்படுவார்.
25ஆம் தேதியில் ஆளுநர் பாத்திமா பீவி சட்டசபையில் உரையாற்றுவார்.