சென்னை:
தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தது திமுக தான் என்று சுகாதாரத்துறை அமைச்சர்செம்மலை கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த திமுக ஆட்சியின்போது, தனியார் மருத்துவக் கல்லூ ரிகள்தொடங்குவது தொடர்பான நெறிமுறைகளை வகுக்க குழு அமைக்கப்பட்டது. எனவே, தனியார் கல்லூரிகளுக்குஅனுமதி அளிக்கும் திட்டத்துக்கு உயிர் தந்ததே கருணாநிதிதான்.
அன்று தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி தரும் நெறிமுறைகளை வகுத்துவிட்டு இன்று எதிர்ப்பது ஏன் என்றுதெரியவில்லை. அன்று உத்தரவு பிறப்பித்து விட்டு இப்போது ஒன்றும் தெரியாதது மாதரி அறிக்கை விடுவது கடும்கண்டனத்துக்குரியது மட்டுமல்ல, ஆத்திரத்தையும் தூண்டுகிறது என்று கூறியுள்ளார் செம்மலை.
|
|
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !