clear
clear
clear
x

ஸ்ரீரங்கத்தில் ராமர் படத்திற்கு தீ வைப்பு

புதன்கிழமை, டிசம்பர் 13, 2006, 5:30[IST]
திருச்சி:பெரியார் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து திருச்சி ஸ்ரீரங்கத்தில் மக்கள் கலை இலக்கியக்கழகம் அமைப்பைச் சேர்ந்தவர் ராமர் படத்திற்கு தீ வைத்து எரித்துப் போராட்டம்நடத்தினர்.

Periyar Stature
உடைக்கப்பட்ட பெரியார் சிலை

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் ராஜகோபுரம் உள்ள பகுதியில்கோவிலுக்கு அருகே முழு உருவப் பெரியார் சிலை நிறுவப்பட்டிருந்தது. இதற்குஇந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புவந்தன. இந்த சிலை நாளை திறக்கப்படுவதாக இருந்தது.

இந்த நிலையில், நேற்று அதிகாலை பெரியார் சிலையின் சிலையின் கழுத்து பகுதி துண்டானது.இதையடுத்து இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த ஐந்து பேரை போலீஸார் கைதுசெய்தனர். பெரியார் சிலையின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் ஸ்ரீரங்கம் மற்றும்திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில், நேற்று இரவு மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த சுமார் 50பேர் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அருகே கூடினர். கையில் ராமர் படத்தை எடுத்துக்கொண்டு வந்த அவர்கள், அப்படங்களுக்கு தீவைத்து எரித்துப் போராட்டம்நடத்தினர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த போலீஸார்ராமர் படத்தை எரித்தவர்களை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.பெரியார் சிலை துண்டிப்பு, ராமர் படம் எரிப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால்ஸ்ரீரங்கம் பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

இதற்கிடையே துண்டிக்கப்பட்ட பெரியார் சிலைக்குப் பதிலாக ஐந்தரை அடி உயரம்கொண்ட வெண்கலச் சிலையை அதே இடத்தில் நிறுவ திராவிடர் கழகம் முடிவுசெய்துள்ளது. இந்த சிலையை வருகிற 16ம் தேதி தி.க. பொதுச் செயலாளர் கி.வீரமணிதிறந்து வைப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



User Comments
[ Post comments ]


இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்