செய்திகள்    வர்த்தகம்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    வீடியோ    கோப்புகள்    Font Help
 தமிழகம்    இந்தியா    உலகம்    இலங்கை    விளையாட்டு    வர்த்தகம்
 முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம்

கருணாநிதியின் 'அவாள்' கவிதையால் சலசலப்பு
புதன்கிழமை, ஆகஸ்ட் 20, 2008   இலவச நியூஸ் லெட்டர் பெற     
    

சென்னை: முதல்வர் கருணாநிதி பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் குறித்து பூடகமாக எழுதியுள்ள கவிதை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதி தனது கவிதையில் சாடியிருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வரதராஜனைத்தான் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

முதல்வர் கருணாநிதியின் கவிதைகள் அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்துவதுண்டு. ஆனால் நேற்று அவர் வெளியிட்டுள்ள கவிதை ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரணம், அந்தக் கவிதையில் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் குறித்து கருணாநிதி பூடகமாக சாடியுள்ளார். யார் அந்தத் தலைவர் என்பது யாருக்குமே புரியவில்லை. இதனால் இந்தக் கவிதை பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

முதல்வரின் அந்தக் கவிதை இதோ...

அரசியலில் பொதுவாழ்வில்; ஏன், தனி வாழ்வில் கூட;
அனைவரையும் நம்பிவிடும் "அறியாமை'' என்றைக்கும் அடியேனுக்கு உண்டு!

அடடா; அவர்கள் காரியமாகும் வரையில் நம் கரத்தைக் குலுக்குவதென்ன.....
அம்மவோ; காலைப்பிடிப்பது தான் என்ன? என்ன? என்ன?

அடிச்சது "சான்ஸ்'' கிடைச்சது "வாய்ப்பு'' என்றதும்
"ஆத்துக்காராள்'' காட்டிய அன்பும் நன்றியும் கூட
ஆலாய்ப்பறந்துவிடும்; ஆவியாகி மறைந்து விடும்.

ஆயிரத்தில் ஒருவன் இவர்-ஆயுள் மட்டும் மறக்க மாட்டார்! அனுபவிக்கும் பதவி, அதிர்ஷ்டத்தால் வந்ததல்ல;
"அவன் போட்ட பிச்சை'' யென்று அன்றாடம் நினைத்திருப்பார்;

அப்படியொரு அழுத்தமான எண்ணங்கொண்டு அசைத்துப் பார்த்தேன்
அடிமரம் ஒட்டிய கிளையொன்றை!

அடடா-கொடிய பூச்சிகளும் கொட்டும் தேள் கூட்டமும்
படிப்படியாய் அளந்து போட்டது போல் பாவி மனிதன் தலையிலிருந்து
படபடவென உதிர்ந்தென்னைத் தாக்கியதைக்கண்ட பின்பே
உணர்ந்து கொண்டேன்;
"அவாள்'' நமக்கு எப்போதும் "சவால்'' தான் என்ற உண்மை!

உம்மையும் ஏமாற்ற உச்சி முதல் உள்ளங்கால் வரையில் கடும் விஷம் மொண்டு-
கலகலப்பு சிரிப்பு காட்டி வருகின்ற கயவர்களின்
நன்றியில்லா உள்ளம் கண்டு நாய்கள் கூட சிரிக்குமய்யா!

இதுதான் முதல்வரின் கவிதை.

இந்தக் கவிதை முதல்வர் அவாள் என்று கூறியிருப்பது யாரை என்பதுதான் இப்போது யாருக்குமே புரியாத புதிராக மாறியுள்ளது. பலருடைய பெயர்களை இணைத்து அனைவரும் யோசித்துப் பார்க்கும் நிலைக்கு முதல்வரின் கவிதை தள்ளி விட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வரதராஜனை சொல்கிறாரா (வரதராஜன் பிராமணர் என்பது பலருக்கும் தெரியாது) அல்லது தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதியை சொல்கிறாரா அல்லது தயாநிதி மாறனின் மனைவி பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களை தாக்கியுள்ளாரா என்பது குறித்து பெரும் விவாதமே நடந்து வருகிறது.

சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களிலும் கருணாநிதியின் கவிதைதான் இன்று விவாதப் பொருளாகியுள்ளதாம். யாருடைய பெயரை இப்படி மறைமுகமாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார் என்று டீயை விட படு சூடாக இருக்கிறதாம் விவாதம்.

ஆனால் முதல்வரின் கவிதையைப் படித்தால் அது ஒன்று திரிபாதியாக இருக்க வேண்டும் அல்லது வரதராஜனாக இருக்க வேண்டும் என்றுதான் பலரும் கூறுகிறார்கள். திரிபாதி சமீபத்தில் முதல்வரின் கோபத்திற்கு ஆளானார். அவருக்கு இணையாக புதிதாக உருவாக்கப்பட்ட கூடுதல் தலைமைச் செயலாளர் பொறுப்பில் ஸ்ரீபதி நியமிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

அதேபோல தமிழகத்தில் காங்கிரஸுக்கு அடுத்த எதிரி திமுகதான் என்று சமீபத்தில் இடதுசாரிகள் தெரிவித்திருந்தனர். இதனால் கோபம் கொண்டு வரதராஜனைத்தான் முதல்வர் தனது கவிதையில் மறைமுகமாக சாடியிருப்பாரோ என்றும் அசை போடப்படுகிறது.

மொத்தத்தில் முதல்வரின் கவிதை அத்தனை பேரையும் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டு விட்டது என்பது மட்டும் நிச்சயம். முதல்வரே முன்வந்து விளக்கினால்தான் உண்டு.


 User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: உண்மை பாப்பான்    பதிவு செய்தது: 21 Aug 2008 03:23 am

இட ஒதுக்கீடு என்ற பெயரில் ஒத்து வாழும் பாடுகளே...பாப்பானை உங்களால் ஒரு மயிரும் புடுங்க முடியாது. பாப்பான் எங்கும் இருப்பான்...எந்த துறையிலும் இருப்பான். அவன் புத்திக்கு உங்களால பக்கத்துல கூட வரமுடியாது. அதுவரை இப்படியே கவிதை பாடிக்கிட்டே இருக்க வேண்டியது தான். போய் வேலைய பாருங்கடா பொழப்பத்த முட்டாக் கூக்களெ

பதிவு செய்தவர்: பகுத்தறிவாளர்களின் நிலை அய்யகோ    பதிவு செய்தது: 20 Aug 2008 11:38 pm

போலி பகுத்தறிவளர்களுக்கு பளார் பளார்...
தீண்டாமை திராவிடம்...
நாத்தம் எடுக்கும் நாத்திகம்...
பல் இளிக்கும் பகுத்தறிவு...
இன்னும்....
இங்கே... ONLINEPJ.COM

பதிவு செய்தவர்: paarppan    பதிவு செய்தது: 20 Aug 2008 11:14 pm

வெளிப்படையாகச் சொன்னால், புத்தர், சங்கரர் (ஆதி), விவேகானந்தர் போல பெரியாரும் ஒரு இந்து மத அறிங்கர் தான்!யார் எல்லாம் கடவுள் இருக்கிறாரா என்ற ஆராய்ச்சியில் யீடுபடுகிறானோ அவர் எல்லாம் இந்து மத அறிங்கர் தான்- என் என்றல் மத்த மதங்களில் கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வி கேட்பது- த ண்டனைக்கு உரிய குற்றம். அதே நேரம் இந்து, புத்த,ஜைன மதங்களின் அடிப்படை நோக்கம் ஒன்றுதான்- விடுதலை பெறுவது தான். ஏதோ ஒன்று அல்லது இரண்டு சைவ, வைணவ, புத்த, ஜைன துறவிகள் துன்புறுத்தப் பட்டு இருக்கலாம். ஆனால் அவை மிகவும் அரிதாக நடை பெற்றவை. எணவே பேரிய அளவில் நடந்தௌ போல எங்கள் பெரியார் கொஞ்சம் அவ்வப் போது"அளந்து விடுவார்".

பதிவு செய்தவர்: பெரியார்    பதிவு செய்தது: 20 Aug 2008 10:05 pm

கடவுள் நம்பிக்கைக்காரர்கள் பற்றி தந்தை பெரியார்

ஒரு தேவதாசியை விபச்சாரி என்று சொன்னதற்காக அவள் கோபித்துக் கொள்ளுவது போலவும், ஒரு வக்கீலை அவர் காசுக்குப் பேசுகிறவரே ஒழிய நேர்மைக்காகப் பேசுகிறவர் அல்ல என்று சொன்னால் அவர் கோபித்துக் கொள்வது போலவும், ஒரு வியாபாரியை பொய் பேசுகிறவர் என்று சொன்னால் அவர் கோபித்துக் கொள்வது போலவும், கடவுள் நம்பிக்கைக்காரர்களை முட்டாள், அயோக்கியன், காட்டுமிராண்டி என்று சொன்னால் அவர்கள் கோபித்துக் கொள்கிறார்கள்! இதற்குக் காரணம் பெருவாரியான மக்கள் இந்த நிலைக்கு ஆளாகி இருப்பது தானாகும்.

இவ்விஷயத்தில் வாயை வைத்துக் கண்டபடி உளறினால், கண்டபடி எழுதினால் கடவுள் நம்பிக்கைக்காரர்கள் என்பவர்கள் யோக்கியர்களாக, அறிவாளிகளாக ஆகிவிடுகிறார்களா? சில காரியங்களில் மக்கள் பொய்ச் சொல்லியாக வேண்டும், சில காரியங்களில் மக்கள் அயோக்கியர்களாக ஆகித் தீர வேண்டும்.

கடவுள் பிரச்சாரகர்கள் அயோக்கியர்களும், மடையர்களுமானதால் காலித்தனமான - பலாத்காரமான காரியங்களிலும் ஈடுபட்டு பல கொடுமையான - கொலை பாதகமான காரியங்களிலும் ஈடுபட்டு மக்களைக் கொன்று குவித்து இருக்கின்றார்கள். இதற்கு உதாரணம் ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்கின்ற பல அயோக்கியர்களும், இவர்களால் சமணர்களை, பவுத்தர்களை கழுவேற்றியும் கொன்று குவித்ததுமான அயோக்கிய கொலை பாதகச் செயல்களும், தேவாரம், பிரபந்தம் முதலாகிய நூல்களுமே போதிய சான்றாகும். தொண்டரடிப் பொடியாழ்வார் என்கின்ற ஒரு வைணவப் பார்ப்பன அயோக்கியன், சமணர்களும், பவுத்தர்களும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஆனதால் அவர்களது தலையை அறுப்பதே (வெட்டுவதே) அவசியமாகும் என்று பாடியிருக்கின்றான். அந்தப்படி ஏராளமான பவுத்தர்களின் தலையை வெட்டியும் இருக்கின்றார்கள். இவை இன்று காஞ்சி, செய்யாறு முதலிய இடங்களில் கற்சிலையாகவுமிருக்கின்றன.

இதுபோலவே சம்பந்தன் என்னும் ஒரு அயோக்கிய சைவ பார்ப்பான் ``சமணர்-பவுத்தர்களின் பெண்களைக் கற்பழிக்க வேண்டும்'' என்றும், பல அயோக்கியத்தனமாகவும் கொலை பாதகமாகவும் பாடியிருக்கிறான். இன்றும் சீர்காழி, மதுரை முதலிய இடங்களில் சமணரைக் கழுவேற்றும் நிகழ்ச்சி பண்டிகையாக, உற்சவமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடவுள் நம்பிக்கைக்காரர்களைப்பற்றி சொல்லப்படும் கருத்துகள் - அதுவும் உண்மையான கருத்துகள் எப்படி தவறானவையாகக் கருதப்பட முடியும் என்று கேட்கின்றேன்.

பதிவு செய்தவர்: தந்தைபெரியார்    பதிவு செய்தது: 20 Aug 2008 09:45 pm

இந்துக்கள் என்பவர்களுடைய கடவுள்கள் எல்லாம் ஆரியர்களால் அல்லது பார்ப்பனர்களால் ஏற்பட்டது என்பதற்கு, அவர்கள் தங்களுக்குள்ள பெருமையை, அக்கடவுள்களுக்கு ஏற்றியிருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் என்னவென்றால், இன்றைய தினம் எல்லாச் சாமிக்கும் பூணூல் போடப்பட்டிருப்பதேயாகும்."

தந்தைபெரியார்--- 11.5.1943







Opinion Poll

Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India