clear
clear
clear
x

பெண் சாப்ட்வேர் என்ஜினியர் தற்கொலை-9வது மாடியிலிருந்து குதித்தார்

புதன்கிழமை, செப்டம்பர் 3, 2008, 12:44[IST]
சென்னை: சென்னையில் அலுவலகத்தின் 9வது மாடியிலிருந்து குதித்து பெண் சாப்ட்வேர் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை தியாகராய நகர் பார்த்தசாரதிபுரம் 2வது தெருவில் வசிக்கும் வெங்கடாசலத்தின் மகள் ஆச்சியம்மை (23). சாப்ட்வேர் என்ஜினியரான இவர் அடையாறி்ல் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இவரது விருப்பத்தை மீறி திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடுகளை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந் நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில் அலுவலகத்தில் சோகமாக இருந்த ஆச்சியம்மை, திடீரென்று கட்டிடத்தின் 9வது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்தார்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி ஆச்சியம்மை இறந்தார்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து கோர்ட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: amma
பதிவு செய்தது: 04 Sep 2008 4:51 pm
தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் முடிவல்ல. இதுமேலும் ஒரு பிரச்சனைத்தான் தோற்றுவிக்கும். ஒவ்வொருவரும் பெற்றோரை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். ஒரு குழைந்தையை உருவாக்கி, வளர்த்த பெற்றோருக்கு அந்த குழைந்தைக்கு நல்லதொரு வழியைக்கண்டிப்பாகக் காட்ட முடியும். நாம் பெற்றோரை நம்பித்தான் ஆகவேண்டும். ஒரு குழைந்தையை உருவாக்கி, வளர்ப்பதென்பது எவ்வளவு கடினமன செயலென்று? இதை தற்சமயம் படிக்கும்பொழுது புரிந்துகொள்வது கடினம். ஆனால் இந்த சூழலுக்கு வரும்பொழுது மிக நன்றாக புரிந்து கொள்ள முடியும். எவ்வளவு படித்தாலும் பிரச்சனையை எப்படி அனுகுவதென்பது மட்டும் நமக்குப்புரிவதில்லை. ஏட்டுச்சுரைக்காய் கரிக்குதவாது என்பதையாவது புரிந்துகொண்டால் சரி. காதல் எல்லாம் படிப்பதற்கும், சினிமா பார்ப்பதற்கு வேண்டுமானால் சுவராசியாக இருக்கும். ஏன் சினிமா படமெடுப்பவனை அதுபோல் நடந்துகொள்ள சொல்லுங்கள் பார்க்கலாம். அது முடியாதென்பது அவனுக்குத் தெரியும், ஆனால் நமக்குத்தான் தெரிவதில்லை.

பதிவு செய்தவர்: raj
பதிவு செய்தது: 03 Sep 2008 4:06 pm
THINGS ARE CHANGING.BUT IT IS VERY HARD TO CHANGE THE PARENTS OF SOUTH INDIAN ORIGIN. PARENT SHOULD CONSULT THEIR SON OR DAUGHTER BEFORE MARRIAGE.WE ALWAYS LIVE FOR OTHERS.WE ALWAYS THINK WHAT THE ORHERS SAY. I FEEL SORRY FOR THE GIRL AND FOR HER PARENTS.

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்