செய்திகள்    வர்த்தகம்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    வீடியோ    கோப்புகள்    Font Help
 தமிழகம்    இந்தியா    உலகம்    இலங்கை    விளையாட்டு    வர்த்தகம்
 முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம்

அணு வல்லரசாக இந்தியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது: மாதவன் நாயர்
ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 7, 2008   இலவச நியூஸ் லெட்டர் பெற     
    

சென்னை: என்.எஸ்.ஜி இந்தியாவுக்கு வழங்கியுள்ள அணு வர்த்தக அனுமதியின் மூலம், இந்தியா உலகின் முக்கியமான அணு வல்லரசாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

சென்னை வந்த மாதவன் நாயர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவின் அணு வர்த்தக தடையை என்.எஸ்.ஜி. நீக்கியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது. உலகின் முக்கியமான அணு வல்லரசாக நம்மை என்.எஸ்.ஜி. அங்கீகரித்துள்ளது.

உலக சமுதாயத்தில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய அங்கீகாரம் இது. அணு தொழில்நுட்பத்தில் இந்தியா வெகுவாக முன்னேறியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்திக் கொள்ளவும், வளரவும் இந்த அனுமதி நமக்கு பெரும் உதவியாக இருக்கும்.

நமது சாதனைக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் இது. உயர் தொழில்நுட்பத்தில் நாம் மேலும் வளர இது உதவும் என்றார் மாதவன் நாயர்.


 User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: வல்லரசு    பதிவு செய்தது: 08 Sep 2008 11:06 am

உலகில் கல்வியறிவு அற்றவர்களில் 98 சதவீதமானவர்கள் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலேயே வாழ்கிறார்கள். இதில் 52 சதவீதமானவர்கள் இந்தியாவிலும் சீனாவிலும் இருக்கிறார்கள்






Opinion Poll

Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India