யாஹூ, கூகுள், ஈபேயில் ஆயிரக்கணக்கானோர் வேலையிழப்பு! திங்கள்கிழமை, அக்டோபர் 20, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற
லாஸ் ஏஞ்சல்ஸ்: இன்டர்நெட் சேவை வழங்குவதில் உலகின் முன்னணி நிறுவனங்களாகத் திகழும் யாஹூ, கூகுள் மற்றும் ஆன்லைன் ஏல நிறுவனம் ஈபே ஆகியவை கணிசமான பணியாளர்களை வேலை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளன.
சர்வதேச பொருளாதார நெருக்கடி மற்றும் நிதி நிறுவனங்களின் வீழ்ச்சியின் காரணமாக அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளவர்கள் ஐடி நிறுவன பணியாளர்கள்தான்.
யாஹூ நிறுவனத்தில் 14300 பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் 1000 பேரை ஏற்கெனவே நீக்கிவிட்ட இந்நிறுவனம், இப்போது மேலும் பலரை அடுத்த வாரம் பணி நீக்கம் செய்ய உள்ளது.
ஆன்லைன் ஏல நிறுவனமான ஈபேயில் 16000 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் 10 சதவிகிதம் அதாவது 1600 பேரை அந்நிறுவனம் நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
கூகுள் நிறுவனம் 30 ஆயிரம் பணியாளர்களுடன் இயங்குகிறது. இவர்களில் 10 ஆயிரம் பேர் காண்ட்ராக்ட் அடிப்படையில் பணியில் உள்ளவர்கள். தனது மொத்த பணியாளர்களில் கணிசமான ஊழியர்களுக்கு பணிநீக்க உத்தரவு தயார் செய்து வைத்துள்ள கூகுள், இன்னும் ஓரிரு நாட்களில் இதுகுறித்து அறிவிக்க உள்ளது.
பதிவு செய்தவர்: Guru
பதிவு செய்தது: 21 Oct 2008 08:10 am
This is very very old news. Yahoo and ebay removed people three weeks back.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: anbu
பதிவு செய்தது: 21 Oct 2008 07:14 am
நம் நாட்டில் இன்னும் அமெரிக்க மாயை அகலாமல் இருக்கும் போலி அறிவு ஜீவிகள் அதிகம். பொதுத் துறை நிறுவனங்களை அழிப்பது, பங்குச்சந்தைதான் நாட்டின் பொருளாதாரம் என்பது போல் பேசுவது, அமெரிக்காவில் நடப்பதை அப்படியே காப்பி அடிப்பது. இன்னும் இது போன்ற பலபல மோசடிகளை அரங்கேத்ற்றுவது இப்போதைய fashion. The concept of simple living and high thinking is lost due to westernized thinking. The one who consumes most by keeping the fanciest of gadgets is the coolest by American definitions. Those who blindly follow America will sure fall. The recent happenings are just a sample. Pakistan is an excellent example of of what will happen to a country that aligns with America. America Talks about Democracy but promotes Dictatorship. It suits them a lot. The world will be better place if America gets sobered down.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: வட்டியை உண்ணாதீர்கள்
பதிவு செய்தது: 21 Oct 2008 05:06 am
பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய பிரான்சை அமெரிக்காவின் நிலைமை நினைவூட்டுகின்றது என்கிறார் ஒரு பத்திரிகையாளர். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ஃபான்னி மே, ஃபிரட்டி மாக் என்ற இரு வீட்டு அடமான வங்கிகள் திவாலாவதைத் தடுக்க அவற்றை அரசுடைமையாக்கியது புஷ் அரசு. அரசுடைமையாக்கப் படும்போது அவற்றின் சொத்து மதிப்பு 5500 கோடி டாலர்கள்.
அவற்றின் கடனோ 5,00,000 கோடி டாலர்கள். அடுத்து உலகின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் என்று கூறப்படும் அமெரிக்கன் இன்டர்நேசனல் குரூப் நிறுவனம் திவாலின் விளிம்பில்; இந்தியாவில் காப்பீட்டத் துறையைத் தனியார்மயமாக்க தீவிரமாக முயன்று வரும் இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற 8500 கோடி டாலர்களை வழங்கி அதன் 80% பங்குகளை வாங்கியிருக்கின்றது அமெரிக்க அரசின் ஃபெடரல் ரிசர்வ்.
லேமன் பிரதர்ஸ், மெரில் லின்ச், கோல்டுமேன் சாக்ஸ், மார்கன் ஸ்டான்லி, வாக்கோவியா, வாஷிங்டன் மியூச்சுவல்… என உலக நிதிச் சந்தையின் சர்வவல்லமை பொருந்திய தேவதைகளாகக் கருதப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் நாளுக்கொன்றாகக் கவிழ்ந்து கொண்டிருக்கின்றன.
அமெரிக்காவின் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி, ஆலைகள், ஐ.டி துறைகளிலும் திடீரென்று ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுகின்றார்கள்.
கடனை அடைக்க முடியாததால் வெளியேற்றப்பட்ட இலட்சக் கணக்கான மக்களின் வீடுகள் அமெரிக்காவில் வாங்குவாரின்றிப் பூட்டிக் கிடக்கின்றன. ஐ.டி. தொழிலின் மையமான கலிபோர்னியா மாநிலமே திவால் மாநிலமாகி விட்டது. பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் என்ற பிரபல நிறுவனத்தின் நிதி ஆலோசகரான கார்த்திக் ராஜாராம் என்ற என்.ஆர்.ஐ இந்தியர், தனது மனைவி, மூன்று குழந்தைகள், மாமியார் அனைவரையும் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ரியல் எஸ்டேட் சூதாட்டத்தில் அவர் குவித்த கோடிகள் ஒரே நாளில் காணாமல் போயின.
தவணை கட்டாததால் பறிமுதல் செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 50 இலட்சம் என்று அறிவித்திருக்கின்றார் அமெரிக்க நிதியமைச்சர் பால்சன். அதாவது, அரசின் கணக்குப்படியே சுமார் 3 கோடி மக்கள், அமெரிக்க மக்கள் தொகையில் 10% பேர் புதிதாக வீடற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். வாங்குவாரின்றிப் பூட்டிக் கிடக்கும் வீடுகள் சூறையாடப்படுகின்றன.
ஆட்டோமொபைல் தொழிலில் உலகின் தலைநகரம் என்றழைக்கப்பட்ட டெட்ராய்ட், அமெரிக்காவின் திவால் நகரமாகி விட்டது. அங்கே வீட்டின் விலை உசிலம்பட்டியைக் காட்டிலும் மலிந்து விட்டது. இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டின் விலை ரூ. 75,000.
அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நிலநடுக்கம், உலகெங்கும் பரவுகின்றது. ஒரு ஊழியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம் என்று அலறுகிறார் பிரெஞ்சுப் பிரதமர்.
எந்த நாட்டில் எந்த வங்கி எப்போது திவாலாகும் என்று யாருக்கும் தெரியவில்லை. வங்கிகளின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். “ஐரோப்பிய வங்கிகள் திவாலானால் 50,000 யூரோக்கள் வரையிலான டெபாசிட் தொகையைக் கொடுக்க ஐரோப்பிய அரசுகள் பொறுப்பேற்பதாக” ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கின்றது. இந்தியா உள்ளிட்டு உலகெங்கும் பங்குச்சந்தைகள் கவிழ்ந்து பாதாளத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கின்றன.
உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி என்றும், உலக முதலாளித்துவத்தின் காவலன் என்றும் பீற்றிக் கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திய முதலாளி வர்க்கத்தின் முகத்தில் உலகமே காறி உமிழ்கின்றது
பதிவு செய்தவர்: TRUTH
பதிவு செய்தது: 21 Oct 2008 01:28 pm
ungal meethu saanthiyum,samaathaanamum undaahattum.very very very appreciatable comment,really worth than original news,what u ahve told is 100000% real one,VATTIYAI UNAATHEERGAL.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: KaradiBommai
பதிவு செய்தது: 21 Oct 2008 12:53 pm
Excellent. One of the most appreciable comments in thatstamil
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Wow
பதிவு செய்தது: 21 Oct 2008 12:11 pm
Hey... nice comment man... worth reading than the actual news
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Tamilan
பதிவு செய்தது: 21 Oct 2008 10:00 am
நெத்தி அடி அருமையான விளக்கம்
பதில் | அவதூறு குறித்து தகவல் தர