ஈழத் தமிழர்களுக்கு நிதி திரட்ட 'ஷூ பாலிஷ்' சனிக்கிழமை, நவம்பர் 1, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற
நெல்லை: நெல்லையைச் சேர்ந்த பாப்புராஜ் என்கிற போட்டோகிராபர், இலங்கைத் தமிழர்களுக்கு நிதி திரட்ட ஷூ பாலிஷ் போட்டு நிதி சேகரிக்கிறார்.
நெல்லை சாந்திநகரை சேர்ந்தவர் பாப்புராஜ். பட்டதாரி. போட்டோகிரபராக உள்ளார். ஆண்டுதோறும் ஏழை, ஊனமுற்ற குழந்தைகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.
இலங்கை தமிழர்களுக்கு நிவாரண உதவி அளிக்க வித்தியாசமான முறையில் யாரிடம் பணம் வசூலிக்காமல் நிதி திரட்ட பாப்புராஜ் முடிவு செய்தார்.
நெல்லை புதிய பஸ் ஸ்டாண்டில் மக்களுக்கு ஷூ பாலிஷ் போடும் பணியை அவர் துவக்கினார். இப்பணியை வரும் 5ம் தேதி வரை மேற்கொள்ள அவர் முடிவு செய்துள்ளார்.
தினமும் காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை ஷூ பாலிஷ் போடும் பணியை அவர் மேற்கொண்டுள்ளார். முதல்நாளான அவருக்கு ஷூ பாலிஷ் போட்டதில் ரூ.300 கிடைத்தது. 5ம் தேதிக்குள் எப்படியும் அதிக அளவு பணம் வசூலாகிவிடும் என்ற நம்பிக்கை பாப்புராஜூக்கு உள்ளது.
இதுகுறித்து பாப்புராஜ் கூறும்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதி திரட்டும் பணியை மேற்கொள்ள திட்டமிட்டு ஷூ பாலிஷ் போட்டு வருகிறேன்.
என் வழக்கமான பணி பாதிக்காத படி காலையில் மட்டும் ஷூ பாலிஷ் போடுகிறேன். ஷூ பாலிஷ்க்கு அவரவர் இஷ்டப்படி அளிக்கும் பணத்தை பெற்றுக் கொள்வேன். சிலர் 1 ரூபாய் தந்தனர். கண்பார்வையற்ற ஒருவர் 10 ரூபாய் தந்து ஊக்கப்படுத்தினார்.
5ம் தேதி வரை ஷூ பாலிஷ் போட்டு கிடைக்கும் பணத்தை கலெக்டர் அலுவலகத்தில் அளிக்க முடிவு செய்துள்ளேன். இலங்கை தமிழர்களுக்கு உதவுவதில் நான் பலருக்கு முன் மாதிரியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
குஜராத் பூகம்பத்திற்கும் இதே போல ஷீ பாலிஷ் போடும் பணியை மேற்கொண்டு 6 ஆயிரத்து 500 ரூபாய் சேகரித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பாப்புராஜ் அனுப்பினார். சுனாமி நிவாரண நிதிக்கும் ஷூ பாலிஷ் மூலம் 8 ஆயிரம் ரூபாய் சேகரித்து அளித்தார்.
குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெல்லை ஜங்ஷன் முதல் டவுன் வரை உள்ள கடைகளில் டெலிபோன் சுத்தம் செய்து 2 ஆயிரம் ரூபாய் சேகரித்து அனுப்பியுள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதியுதவி அளிக்க ஷூ பாலிஷ் போடும் பணியை மேற்கொண்டுள்ள பாப்புராஜ் நெல்லையில் பலர் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
பதிவு செய்தவர்: Raj
பதிவு செய்தது: 01 Nov 2008 09:32 pm
Really great,you are a example of kind hearted man God bless you.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Nightman
பதிவு செய்தது: 01 Nov 2008 08:26 pm
I am speechless. Great work...
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: வன்னி மரநிழல்
பதிவு செய்தது: 01 Nov 2008 05:40 pm
உன் தன்மான உண்ர்வே போதும் அய்யா எம்மக்கு.....
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: arun
பதிவு செய்தது: 01 Nov 2008 05:24 pm
மனிதநேயமும்..இரத்தபாசமும்...உள
்ள இந்த இளைஞர் உண்மையில் இதயத்த்pல் உயர்ந்து நிற்கிறார்.
பதிவு செய்தவர்: arun
பதிவு செய்தது: 01 Nov 2008 05:23 pm
இவ்வேலையில் யாழை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்தபோது, தமிழகத்தில் ஆதரவுக்கரங்கள் எல்லாம் அடக்கப்பட்டிருந்த வேளையில், ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள் என்ற ஆத்மார்த்த குரலுடன் எமக்காக தன் உயிரையே தியாகம் செயத "அப்துல் ரவூத்" என்ற இஸ்லாமிய சகோதரனையும் நினைவில் கொள்ளுவோம்.
பதிவு செய்தவர்: ahmed
பதிவு செய்தது: 01 Nov 2008 05:32 pm
abdul rauf ennudaiya mama
appoludu naan 5 aam vaguppu padithu kondirunthen. appoludu en endru puriyavillai. piragu purindukondane.antha naal marakka mudiaydadu.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: arun
பதிவு செய்தது: 01 Nov 2008 05:23 pm
ஈழத்தமிழர்கள் ஒன்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். உண்மையான தமிழகத் தமிழன்.. மற்றும் தமிழக உறவுகள் எம்மீது வைத்துள்ள பாசத்தைப் போன்று நாம் அவர்கள் மீது வைத்திருக்கிறமா என்பது கேள்விக்குறியே. ஏன் எம்மவர்கள் எம்மவர் மீது வைத்திருக்கிறார்களா என்பதே கேள்விக்குறி.
ஒரு காலத்தில் ஈழத்தமிழருக்காக தீக்குளித்து மாண்ட தமிழக உறவுகளும் இருக்கின்றனர். அவர்களை எல்லாம் மறக்கக் கூடாது. ஏனெனில்... போராளிகளைத் தவிர.. சாதாரண ஈழத்தமிழன் ஈழத்தமிழனுக்காக இவ்வளவு துன்பப்பட முன் வரமாட்டான். எப்போ எங்கோ ஓடிப்போய் தான் சொகுசாக வாழ்ந்து கொண்டு.. விடுப்புப் பேசலாம் என்று தான் நினைப்பானே தவிர.. இவர்கள் அளவுக்கு ஈழத்தமிழன் மீது பாசம் காட்டமாட்டான்.. ஈழத்தமிழனே.
அந்த வகையில் தாய் மண் உறவான தமிழக உறவுகளின் பாசத்துக்கு அதில் உள்ள உண்மைத்தன்மைக்கு தலை வணங்கித்தான் ஆக வேண்டும். அவர்கள் இன்றல்ல.. பல காலமாகவே எமக்கு கடமை செய்கின்றனர். ஆனால் நாம்.. எமது மக்களுக்கான கடமையை கூட செய்ய மறுக்கின்றோம்.
அண்மையில் தமிழக வைத்தியர்கள் வன்னி செல்ல அனுமதி கேட்டிருந்தார்கள். ஆனால் உலகம் பூரா பரந்து வாழ்ந்து கொலரை இழுத்துவிட்டுக் கொண்டு திரியும்.. ஈழத்தமிழர்களில் எத்தனை டாக்டர்கள் வன்னிக்குப் போக.. தயாராகி.. அனுமதி கேட்டு சர்வதேச ஸ்தாபனங்களோடு தொடர்பு கொண்டனர்..??!
ஆனால் சுனாமி காலத்தில் பலர் அள்ளுப்பட்டு போய் தென்னிலங்கையில் கூட சேவை செய்துவிட்டு வந்து.. புளுகி அடித்தித் திரிந்தனர். இவ்வாறான.. ஈனத்தனங்கள் ஈழத்தமிழனிடம் நிறைந்திருக்கின்றன. அவர்களோடு ஒப்பிடும் போது.. தமிழக உறவுகள் பல மடங்கு தமிழினப் பாசம் நிறைந்தவர்கள் என்று கூறலாம். அவர்களிடத்தில் இவை புதுமையல்ல.