அனைத்துக் கூட்டமா அல்லது அரசியல் அணிவகுப்பா? சிபிஎம் கேள்வி புதன்கிழமை, நவம்பர் 26, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் அரசியல் அணி வகுப்பு போல தோன்றுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கோடு தமிழக அரசு அக்டோபர் 14, 2008 அன்று கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கலந்து கொண்டது. அக்கூட்டத்தில் கீழ்க்கண்ட அம்சங்களைக் கொண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்திய அரசு ராஜீயரீதியாக தலையிட்டு, போர் நிறுத்தத்தை வலியுறுத்தி - பேச்சு வார்த்தை மூலம் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண முயல வேண்டும்.
பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு மற்றும் சர்வதேச செஞ் சிலுவை சங்கம் போன்ற அமைப்புகள் மூலமாக உணவு - மருந்து உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை செய்திட வேண்டும்.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்:
போன்ற பல அம்சங்களை வலியுறுத்தி நடத்தப்பட்ட மனித சங்கிலி இயக்கத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்றது.
மேலும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் தனது பங்களிப்பை செலுத்தியது. மாநிலம் முழுவதும் அம்மக்களுக்கான உணவு மற்றும் மருந்து உதவிக்கான நிதி வசூலுக்கு மக்கள் பேராதரவு அளித்தனர்.
உணவு மற்றும் மருந்து பொருட்கள் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பகுதி மக்களாலும் வரவேற்கப்பட்ட இத்தகைய பணிகளை மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.
இதற்கு மாறாக, ஒரு சில அரசியல் இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக பல்வேறு இயக்கங்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், 25.11.2008 அன்று தமிழக முதல்வர் தலைமையில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டம் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் துயர் துடைக்க ஒன்றுபட்டு குரலெழுப்புவதற்கு பதிலாக, அரசியல் அணிவகுப்பை உருவாக்குவதற்கான ஒரு வடிவமாக திசை திரும்பி போகிறதோ என்ற கேள்வியை எழுப்புகிறது.
எனவே, இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கலந்து கொள்ளவில்லை.
எனவே, இலங்கையில் நடைபெறும் இருதரப்பு ஆயுத மோதல்களும் நிபந்தனையின்றி நிறுத்தப்பட வேண்டும் என்றும், போர் நிறுத்தம் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் துவங்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவா ரண நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும் என்றும் இதற்கு இந்திய அரசு ராஜீயரீதியில் தலையிட வேண் டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.
மேலும், தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள இலங் கைத் தமிழ் அகதிகள் கடும் துன்பத்திற்கு உள்ளாகியிருப்பதையும் காண முடிகி றது. அகதிகள் வாழ்ந்து வரும் முகாம்களில் குறைந்த பட்ச அடிப்படை வசதிகள் கூட இல்லை என்ற தகவல்கள் வருகின்றன.
எனவே அவர்களது வாழ்க்கைக்கான பாதுகாப்பு, சுகாதாரம், குடியிருப்பு உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திட மத்திய - மாநில அரசுகள் முன்வரவேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது என்று கூறியுள்ளார்.
பதிவு செய்தவர்: Raja Raja Cholan
பதிவு செய்தது: 29 Nov 2008 04:59 pm
Breakingnews:
Sri Lanka Air Force (SLAF) Kfir bombers attacked a refugee camp with Internally Displaced People in Naathankudiyiruppu in Kallaa'ru, Ki'linochchi in the early hours of 29.11.08 Saturday around 1:35 a.m. Medical authorities at Tharmapuram said three persons were killed. Two, a 5-year-old child and an 80-year-old man died at the hospital. At least 18 wounded civilians, including seven children below 10 years and 7 females, were admitted at the hospital following the indiscriminate bombardment on IDP settlement. Medical authorities described the bombardment as "terrible mid-night aerial attack on refugee camp".
The 5-year-old child killed was identified as Sutharsan Sivakumar and the elderly male was identified as Raman Ramasamy. Another person, killed on the spot, was yet to be identified. There could be further dead bodies. Rescue operation was still going on, the sources further said.
The wounded were:
5-year-old girl Thayananthan Pavithra
7-year-old girl Rasenthiran Logini
9-year-old girl Aananthan Chithra
10-year-old girl Rasendran Jasintha
10-year-old male Nalliyah Jasinthan
15-year-old male Selvam
16-year-old girl Rasenthran Thavachelvi
18-year-old male Ananthan Velavan
27-year-old female Sivakumar Rajakumary
28-year-old male Rasenthiran
28-year-old female Nalliyah Pusspavalli
33-year-old male Rajendran
35-year-old female Murugesu Rugunudevi
38-year-old female Ananthan Kamaladevi
40-year-old female Kannathas Amirthavalli
55-year-old male Sangarapillai
55-year-old male Nagarajah
75-year-old female Pallaniammah
பதிவு செய்தவர்: Raja Raja Cholan
பதிவு செய்தது: 29 Nov 2008 04:59 pm
Breakingnews:
Sri Lanka Air Force (SLAF) Kfir bombers attacked a refugee camp with Internally Displaced People in Naathankudiyiruppu in Kallaa'ru, Ki'linochchi in the early hours of 29.11.08 Saturday around 1:35 a.m. Medical authorities at Tharmapuram said three persons were killed. Two, a 5-year-old child and an 80-year-old man died at the hospital. At least 18 wounded civilians, including seven children below 10 years and 7 females, were admitted at the hospital following the indiscriminate bombardment on IDP settlement. Medical authorities described the bombardment as "terrible mid-night aerial attack on refugee camp".
The 5-year-old child killed was identified as Sutharsan Sivakumar and the elderly male was identified as Raman Ramasamy. Another person, killed on the spot, was yet to be identified. There could be further dead bodies. Rescue operation was still going on, the sources further said.
The wounded were:
5-year-old girl Thayananthan Pavithra
7-year-old girl Rasenthiran Logini
9-year-old girl Aananthan Chithra
10-year-old girl Rasendran Jasintha
10-year-old male Nalliyah Jasinthan
15-year-old male Selvam
16-year-old girl Rasenthran Thavachelvi
18-year-old male Ananthan Velavan
27-year-old female Sivakumar Rajakumary
28-year-old male Rasenthiran
28-year-old female Nalliyah Pusspavalli
33-year-old male Rajendran
35-year-old female Murugesu Rugunudevi
38-year-old female Ananthan Kamaladevi
40-year-old female Kannathas Amirthavalli
55-year-old male Sangarapillai
55-year-old male Nagarajah
75-year-old female Pallaniammah
பதிவு செய்தவர்: பட்டினியில் வன்னித்தமிழர்
பதிவு செய்தது: 26 Nov 2008 08:52 pm
பட்டினியில் வன்னித்தமிழர் தமிழகமக்களின் உதவி இதுவரை வன்னித்தமிழர் பசிபோக்கவில்லை.
இந்தியாவினால் வழங்கப்பட்ட இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரணப் பொதிகளின் முதல் தொகுதி வவுனியாவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது
வீரகேசரி இணையம் 11/26/2008 6:04:33 PM - வன்னிப்பிரதேசத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்கென கடந்த வாரம் இந்தியாவினால் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்களின் முதல் தொகுதி இன்று கொழும்பிலிருந்து 15 லொறிகளில் வவுனியாவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
உணவு மற்றும் அவசர சுகாதாரத் தேவைக்கான அடிப்படை வசதிகளுக்கான பொருட்கள் அடங்கிய இந்தப் பொதிகள் வவுனியா அரசாங்க அதிபரிடம் வைபவரீதியாகக் கையளிக்கப்பட்டு, வவுனியாவில் உள்ள அரச களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இருபது லொறிகள் அடங்கிய மேலும் ஒரு தொகுதி நிவாரணப் பொதிகள் அடங்கிய வாகனத் தொடரணி நாளை வவுனியாவை வந்தடையும் என்று சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் தகவல் அதிகாரி சரசி விஜேரட்ண தெரிவித்தார்
பதிவு செய்தவர்: தமிழ்
பதிவு செய்தது: 26 Nov 2008 08:16 pm
Relief supplies from Tamil Nadu still not reached Vanni
[TamilNet, Wednesday, 26 November 2008, 05:25 GMT]
Emergency relief supplies, sent by the efforts of Tamil Nadu people and their government, received in 100 containers in Colombo 11 days ago, have not reached Vanni due to the sabotage by the Sri Lankan military, a top government official, who did not wished to be named, told TamilNet. Severe flooding has cut off Vanni on Wednesday. However, contradicting to the ground reports, the Chief Minister of Tamil Nadu Kalaignar M. Karunanidhi was made to believe that the supplies were reaching the affected civilians unhindered.
பதிவு செய்தவர்: kesavan
பதிவு செய்தது: 26 Nov 2008 02:43 pm
Hello Marxisit Communist brother Mr.Varadarajan,I want to clear you one thing.Chief Minister Mr.M.Karunanidhi invited all the party for the meeting,but you didnot joined in the meeting but now you blaming the meeting seems to be for Political Alliance..What's this? I can't get you?
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: பைந்தமிழ்
பதிவு செய்தது: 26 Nov 2008 10:43 am
இலங்கை தமிழர்கள் போரினால் தஞ்சமடைந்து தொப்புள்கொடி உறவுதேடி மிக அருகில் இருக்கும் தமிழகம் வருகிறார்கள்...அவர்களை நம் விருந்தினர் போல் நடத்த வேண்டும்....தமிழகம் வந்தவர்கள் மட்டும் அகதிகளாய் இன்னும்...மற்ற நாடுகளில் தஞ்சமடைந்தவர்கள் இன்று மன்னாதி மன்னர்கள்........
அரசு விழாக்கள் மற்றும் சாதித்தலைவர்களுக்காய் அரசு செலவில் நடத்தப்படும் விழாக்களையெல்லாம் குறைத்து ...நம் உறவினர்களை கெளவரமாக அனைத்து வசதிகளும் செய்துகொடுத்து நடத்தவேண்டும்.....
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: துரை
பதிவு செய்தது: 29 Nov 2008 08:35 pm
அகதிகளாய் வாழ்ந்தாலும் ஆடம்பரமாக வாழ்பவர்களே ஈழத்தமிழர். பிறந்தநாட்டையும் மதியார், வந்தநாட்டையும்
மதியார், வாழும்நாட்டையும் மதியார்.
பதிவு செய்தவர்: அதானே
பதிவு செய்தது: 26 Nov 2008 05:09 pm
அப்ப மத்த நாடுகளுக்கு போக வேண்டியது தானே? எதுக்காகடா இங்க வர்ரீங்க? இங்கயே நெறய பேருக்கு ஒரு வேளை சோத்துக்கில்லாம திரியராங்க. இதுல அழையா விருந்தாளிக்கு வடை பாயாசமா தரமுடியும்? அதான் திரும்பி போக தடையே இல்லையே. அப்புறமென்ன இது நொட்டை, இது நொள்ளைனு குறை. விருந்தாளிகளா வந்தா விருந்தாளிங்க மாதிரியே இருங்க. மற்ற நாடுகளில் உங்களுக்கு தஞ்சம் கொடுத்தால் உரிமை கேட்டு போராடும் உங்களை ராஜ வாழ்க்கை வாழச்செய்யும் நாடுகள் தான் ரொம்ப பாவம்; அதை விட அதற்கும் சேர்த்து வரி கட்டும் அந்நாட்டு மக்கள் மிகவும் பாவம். (எ.கா. தங்கும் உரிமை, அகதி உதவித்தொகை, வாழ இருப்பிடம் என கொடுத்த பின்னும், இந்த "விருந்தாளிகள்" பிரிட்டன் பாராளுமன்றத்தின் முன் செய்யும் ஆர்ப்பாட்டம்)
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: ஐனநாயகம்
பதிவு செய்தது: 26 Nov 2008 08:14 pm
ஐநாவிற்கான அகதிகளிற்கான அமைப்பு பலதடவை இந்தியாவிடம் கேட்டுவிட்டது. உங்களால் ஈழத்தமிழ் கெளரவமாய் அகதிகளை பாரமரிக்க முடியாவிடில் தம்மிடம் தரச்சொல்லி வல்லரசுகனவு வரட்டு கெளரவம் சம்மதிக்கவிடுகுதில்லை. 1980 களில் ஆப்கான் அகதிகளை ஐநாவிற்கான அகதிகளிற்கான அமைப்பு தமிழகத்திலஇ வைத்து எவ்வளவு கெளரவமாய் கவனித்தது. இந்தியாவால் முடியாவிட்டால் பொறுப்பை ஐநாவிற்கான அகதிகளிற்கான அமைப்பிடம் ஒப்படைப்பதுதான் முறை அதைவிடுத்து ஈனத்தனமாய் பெசுவது காட்டுமிராண்டித்தனம்.
முதலில் ஐனநாயகம் மனிதவுரிமை இப்படியான விடயங்களை தெரிந்து விட்டு இங்கே கமெண்ட் எழுது இல்லாவிடில் டாஸ்க் மார்க்கில் போய் குவாட்டரை அடிச்சுகிட்டு குதர்க்கம் பேசு.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: விழித்துக் கொண்டால் ந்ல்லது
பதிவு செய்தது: 26 Nov 2008 10:25 am
இராமதாஸ், திருமாவளவன், தா.பாண்டியன், பண்ருட்டியார்,சரத்குமார் போன்ற பச்சைத்தமிழர்கள் ஈழத்தமிழர் பிரச்சனையில் விழிப்புடன் விரைவாக செயல்பட்டால் ஈழமக்களுக்கு நிம்மதி பெருமூச்சுவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை.....
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: ஆத்துல எல்லாரும் நன்னா இருக்ளா
பதிவு செய்தது: 26 Nov 2008 10:15 am
அவாள் இலங்கை பிரச்சனை சம்பந்தமாக இயக்கம் அல்லது இயக்காம நடத்தினா உமக்கு என்னவோய்...கூட்டத்தில நீரு கலந்துக்கலனா விட்டுடுவோய்....ஆனா ஒன்னு மட்டும் உண்மை ஈழத்தமிழரை வைத்து அரசியல் லாபம் தேடுறவா...ஈழத்தமிழருக்கு எதிர்ப்பா அரசியல் நடத்துறவா எல்லாரும் தேர்தலில் மண்னை கவ்வப்போறா...அது மட்டும் உறுதி.....
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: சேஷன்
பதிவு செய்தது: 26 Nov 2008 02:08 pm
தேர்தல் தமிழ் நாட்டிலா அல்லது இலங்கையிலா ஒய்?
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: தமிழ்
பதிவு செய்தது: 26 Nov 2008 11:40 am
எந்த ஊரு தமிழ் டா இது. ஒலுங்கா தமிழ் ல பேச தெரியாதாடா நாயே...........
பதில் | அவதூறு குறித்து தகவல் தர