Thats tamil

clear
clear
clear
  BSE  13,757.46 -11.69   NSE  4080.95 +2.05   RS/$ 48.92 -0.70  at:16:10 Hrs (IST) Jul 9
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » முழு விபரம்
போர் நிறுத்தம்: பிரதமருடன் கருணாநிதி சந்திப்பு-பிரணாப் இலங்கை பயணம்
வியாழக்கிழமை, டிசம்பர் 4, 2008, 16:16

Pranab mukarjee
டெல்லி: இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புவுக்கு அனுப்புவதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அனைத்துக் கட்சி குழு இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை விடுத்தது.

இந்தக் குழுவில் அமைச்சர் அன்பழகன், மத்திய அமைச்சர் பாலு, காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, சுதர்சனம், பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், ஜி.கே.மணி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன், முஸ்லிம் லீக் சார்பில் காதர் மொய்தீன், அப்துல் பாசீத், விடுதலை சிறுத்தைகள் சார்பில் திருமாவளவன், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ராதிகா சரத்குமார், போட்டி மதிமுக சார்பி்ல் எல்.கணேசன் மற்றும் விஜய டி.ராஜேந்தர், ஆர்.எம்.வீரப்பன், பேராயர் எஸ்றா சற்குணம் உள்ளிட்டோர் இடம் பெற்றனர்.

அப்போது இலங்கை தமிழர்கள் படும் துன்பம் குறித்தும், இலங்கை ராணுவ தாக்குதலால் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவது பற்றியும், இலங்கை போரை நிறுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் குறித்தும் பிரதமரிடம் விளக்கமாக இந்தத் தலைவர்கள் விளக்கினர்.


அப்போது வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இந்த பிரச்சனையில் இந்தியா உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளும் என்று உறுதியளித்த பிரதமர் தனது தூதராக பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவதாகவும் கூறினார்.

அவர் அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சேவிடம் போர் நிறுத்தத்தை வலியுறுத்துவார் என்றார்.

வழக்கம் போல அதிமுக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் இக்குழுவில் இடம் பெறவில்லை.

இதையடுத்து முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். அவரிடமும் இலங்கை போர் நிறுத்தத்தை வற்புறுத்தினார்.

பின்னர் கருணாநிதியை மின்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ப.சிதம்பரம் ஆகியோரும் சந்தித்தனர்.

போர் நிறுத்தமே முக்கியம்-கருணாநிதி:

முன்னதாக டெல்லி வந்த கருணாநிதி சாணக்கியாபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சனையில் வைக்கப்படப் போகும் முக்கியமான கோரிக்கை எது?

கருணாநிதி: முக்கியமான கோரிக்கை போர் நிறுத்தம்தான்.

கேள்வி: கடந்த 3 மாதமாக அந்த கோரிக்கையைத் தானே வைத்துக் கொண்டிருக்கிறோம்?

கருணாநிதி: அதற்காக அந்தக் கோரிக்கையை மாற்றிக் கொள்ள முடியுமா?

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக அவசரம் கருதி மத்திய அரசுக்கு திமுக அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற முடியாதா?

கருணாநிதி: திமுக மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெற வேண்டும், மத்திய அரசு கவிழ வேண்டும் என்பதுதான் உங்கள் விருப்பமா? திமுக மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெற்று விட்டால், இலங்கை தமிழர்களின் பிரச்சனை தீர்ந்து விடுமா?

கேள்வி: மத்திய அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் உங்களுக்கு திருப்தியாக உள்ளதா?

கருணாநிதி: இது தலைவலி மருந்து மாதிரி. மொத்தமாக போர் நிறுத்தம் ஏற்பட்டு, அங்கே தமிழர்கள் அமைதியாக வாழ்ந்தால்தான் எங்கள் திருப்திக்கு அர்த்தம் இருக்க முடியும்.

கேள்வி: இலங்கை தமிழர் போன்ற முக்கிய பிரச்சனையில் தமிழக கட்சிகளில் அதிமுக, மதிமுக, தேமுதிக, சிபிஎம் போன்ற கட்சிகள் பிரதமரை சந்திக்க உங்களுடன் வரவில்லையே?

கருணாநிதி: அதைப்பற்றி நான் ஏற்கனவே சொல்லி விட்டேன். எந்த அளவிற்கு தாழ்ந்து போய் வேண்டுகோள் விடுக்க முடியுமோ அந்த அளவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன். ஆனால் அவர்கள் அதை ஏற்பதாக இல்லை.

கேள்வி: பிரதமரிடம் வெள்ள நிவாரண உதவி கேட்பீர்களா?

கருணாநிதி: நிச்சயமாக கேட்கவிருக்கிறேன். பிரதமரிடமும், அமைச்சர் ப.சிதம்பரத்திடமும் தமிழக வெள்ள நிவாரணத்திற்காக உதவி நிதி கோரிக்கை வைக்கவுள்ளேன். எவ்வளவு என்பதை கேட்ட பிறகு சொல்கிறேன் என்றார்.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: Jex
பதிவு செய்தது: 05 Dec 2008 10:10 am
போரை நிறுத்த வேண்டுமென்று ஒரு போதும் இந்தியாவால் சொல்ல முடியாது. ஒரு நாட்டின் தீவிரவாத ஒழிப்பை நிறுத்துமாறு இன்னொரு நாடு எப்படி சொல்ல முடியும். போரை நிறுத்திய பின்பு விடுதலை புலிகள் எதாவது நாச வேலை செய்தால் இந்தியா அதற்கு பொறுப்பு ஏற்குமா? அதிகபட்சமாக அப்பாவி தமிழர்களின் பாதுகாப்பை மேலும் பலப்பெடுத்த கோரலாம். ஆனால் அதற்கு விடுதலை புலிகள் ஒத்துழைக்க வேண்டும். அப்பாவி தமிழர்களை கேடயமாக பயன்படுத்தி போர் செய்யும் முறையை அவர்கள் கை விட வேண்டும். டெல்லி சென்ற தலைவர்கள் இதையும் வலியுறுத்த வேண்டும். இல்லையென்றால் இவர்களின் முயற்சி சந்தேகத்திற்கு உரியதாகி விடும்.

பதிவு செய்தவர்: karikaalan
பதிவு செய்தது: 05 Dec 2008 8:22 am
எல்லாம் முடிந்த பின்பு எதற்கு நீங்கள்? youtube -ல் showtopic=47900 சென்று பாருங்கள் கொள்ளி வைக்கவா போகின்றீர்கள்? போர் நிறுத்தத்தை தாமதப் படுத்தும் உங்களுக்கு கல்லைவிட கடினமான நெஞ்சமா? ஆரியன் திராவிடன் என்று மார்த்தட்டுவதைவிட மனிதனாக முதலில் மாறுங்கள் பகுத்தறிவு பாசறையில் பயின்றிறுந்தால் மட்டும் போதாது செயலிலும் பகுத்தறிவு வேண்டும் அது உங்களிடம் இல்லை கருணாநிதி அவர்களே முதுமையின் முதுமையில் நிற்கும் நீங்கள் இனிமேல் புதிதாக எதை சாதிக்க டெல்லி சென்றீர்கள்? இங்கு தேவையற்ற கருத்துகளை கூறும் அனைவருக்கும் ஒர் வேண்டுகோள், நம் இனத்திற்கு நாம் அனைவரும் தலைவனாக இருக்க முடியாது நீங்கள் உங்கள் கருத்துதான் சிறந்தது என்று நினைக்கின்றீர்கள் சமகால நிகழ்வுகளை சீர்தூக்கி பார்க்க கற்றுக்கொள்ளுங்கள் தோல்வியென துவழ நாம் பூனைகள் அல்ல தோல்வியை வெற்றியாக மாற்றும் புலிகள் எமது சோழ சாம்ராஜிய புலிகள். சிங்களன் வீழ்வதும் வன்னியிலே புலிக்கொடி பறப்பதும் வன்னியிலே! ஓவ்வொரு மாவீரரும் மரணத்தை தழுவவில்லை எங்களுக்கு வீரம் எனும் உள மருந்தை தந்துவிட்டு சென்றுள்ளனர். இதை அறியாத தமிழர் யாரும் இல்லை அப்படி இருப்பின் உங்களை நீங்களே ஏமாற்றுவதுமில்லாமல் மற்றவரையும் குழப்புகின்றீர்கள்.

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
 
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Barbara Mori, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India