கிருஷ்ணகிரி: பாஜக ஆட்சிக்கு வந்தால் பொடா சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள் வந்த பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய, மகாராஷ்டிரா ஆட்சிகளின் அலட்சிய போக்கு காரணமாகவே மும்பை தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் - இ- தொய்பா அமைப்பே காரணம். மும்பை தாக்குதல் சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினர், கமாண்டோ படையினர், ராணுவவீரர்கள் ஆகியோருக்கு உரிய முறையில் மக்கள் மரியாதை செலுத்துகின்றனர்.
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !