Thats tamil

clear
clear
clear
  BSE  13,777.26 +19.80   NSE  4091.95 +11.00   RS/$ 48.92 -0.70  at:10:50 Hrs (IST) Jul 10
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம்
'அம்மா' பேச்சை கேட்கும் இளங்கோவன்- திருமா!
வியாழக்கிழமை, டிசம்பர் 4, 2008, 11:49

சென்னை: மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அம்மா (ஜெயலலிதா) பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.

சென்னையில் நேற்று நிருபர்களிடம் அவர் பேசுகையி்ல்,

முதல்வர் கருணாநிதி தலைமையில், டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கும் செல்லும் குழுவில் நான் செல்ல இருக்கிறேன். ஆனால், நான் இந்தக் குழுவில் இடம் பெறக் கூடாது என்று என்னைப் பற்றி மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

நான் கலந்து கொள்ள கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலுவோ, அகில இந்திய தலைவர் சோனியா காந்தியோ கூறவில்லை. இளங்கோவனின் பேச்சு, திமுக கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இருக்கிறது.



அவரது தலைவர் சோனியா காந்தியின் பேச்சை கேட்டு அவர் கருத்து தெரிவித்த மாதிரி தெரியவில்லை. இங்கே உள்ள 'அம்மா'வின் பேச்சை கேட்டு கருத்து தெரிவித்த மாதிரி இருக்கிறது.

முதல்வர் கருணாநிதி தலைமையில் செல்லும் குழுவில் அதிமுக, மதிமுக பங்கேற்காதது வேதனையாக இருக்கிறது. அவர்களின் நிலைப்பாடு தி.மு.க.வுக்கு எதிராக அமையாது. ஈழத் தமிழர்களுக்கு எதிராக தான் அமையும்.

இலங்கை தமிழர்களுக்காக திரட்டப்பட்ட நிவாரண நிதி ஈழத் தமிழர்களை சென்று சேரவில்லை என்று தகவல்கள் வருகிறது. இந்திய அரசு தனது பிடிவாத போக்கை விட்டு விட்டு, சிங்கள ராணுவத்திற்கு உதவிகளை செய்வதை விட்டு, விட்டு தமிழர்களை காக்க வர வேண்டும்.

தங்கள் அமைப்பு மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என்று பிரபாகரன் கோரிக்கை விடுத்துள்ளார். அவரின் வேண்டுகோளை இந்திய அரசு கருணையுடன் பரிசீலனை செய்ய வேண்டும்.

நாட்டில் நிலவி வரும் மோசமான நிகழ்வுகளை கருத்தில் கொண்டு எங்களது அயோத்தி பயணத்தை அடுத்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளோம். விடுதலைச் சிறுத்தைகளின் இளஞ் சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் தொடக்க விழா மற்றும் தமிழீழ அங்கீகார மாநாடு 26ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது என்றார்.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: Jex
பதிவு செய்தது: 05 Dec 2008 9:04 am
திருமாவளவா, விடுதலை புலிகளை நீ ஆதரித்து விட்டு, இல்லை என்கிறாய். பிரபாகரனுக்கு கேக்கு வெட்டி விட்டு, இல்லை என்கிறாய். ஏன் இப்படி ஒரு ஈன வாழ்க்கை உனக்கு?

பதிவு செய்தவர்: Jeyan
பதிவு செய்தது: 04 Dec 2008 10:35 pm
sub samy is a political broker. do not take his jokes as serious.

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
 
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Barbara Mori, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India