ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவின் வீடு அருகே நடமாடிய 45 வயது மதிக்கத்தக்க மர்ம நபரை ராணுவம் சுட்டுக் கொன்றது.
சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் பெயர் அப்துல் ரேஷி. பஹல்காம் பகுதியைச் சேர்ந்தவர். உமர் அப்துல்லாவின் வீடு உள்ள குப்கார் பகுதியில், நேற்று இரவு 10 மணியளவில் இவர் நடமாடிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து அவரை தடுத்து நிறுத்தியது ராணுவம். ஆனால் ராணுவ வீரர்களிடமிருந்து அவர் தப்பி ஓட முயற்சிக்கவே, சந்தேகமடைந்த ராணுவத்தினர் ரேஷியை சுட்டு வீழ்த்தினர். இதில் அவர் உயிரிழந்தார்.
|
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !