மனோக்வாரி (இந்தோனேசியா): இந்தோனேசியாவின் பாபுவா மாகாணத்தில் உள்ள மனோக்வாரி பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இதே பகுதியில்தான் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கானோர் தற்காலிக குடியிருப்புகளுக்கு மாற்றப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், மனோக்வாரி பகுதியில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. இதன் அளவு 6.1 ரிக்டராக பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 7.48 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் வசித்து வருபவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இந்த நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக கிழக்கு நுசா டெங்கரா மாகாணம் மற்றும் வடக்கு மலுகு மாகாணத்தில் சிறு சிறு நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. இவை 5 ரிக்டராக பதிவாகியுள்ளன.