Thats tamil

clear
clear
clear
  BSE  16,158.28 +94.38   NSE  4796.15 +30.60   RS/$ 46.96 0.24  at:16:10 Hrs (IST) Nov 6
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம்
திமுக-அதிமுகவுக்கு பாடம் புகட்டுங்கள்: கேப்டன்
வியாழக்கிழமை, ஜனவரி 8, 2009, 15:27 [IST]

திருமங்கலம்: வைக்கோலை போட்டால் மேய்ந்துவிட்டுப் போவதற்கு மாட்டுக் கூட்டம் என்று மக்களை திமுகவும் அதிமுகவும் நினைத்து விட்டார்களா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

திருமங்கலம் தேவர் சிலை அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் நேற்று அவர் பேசியதாவது:

ஓட்டுக்காக மற்ற கட்சிக்காரர்கள் பணம் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். நோட்டை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். ஓட்டை எனக்குப் போடுங்கள்.

அது இவர்கள் வயல்காட்டில் உழுது சம்பாதித்து கொண்டு வந்த பணம் அல்ல. இப்படி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கு பதிலாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யலாம். இல்லையென்றால் 5 வருடத்திற்கான செலவை கொடுக்கலாம்.



வைக்கோலை போட்டால் மேய்ந்துவிட்டுப் போவதற்கு மாட்டுக் கூட்டம் என்று உங்களை நினைத்து விட்டார்களா?.

அந்தக் கட்சிகளுக்கு பாடம் புகட்டுங்கள். இனி எந்த தேர்தலிலும் அவர்கள் பணம் தரக்கூடாது. இந்த மக்கள் புரட்சி வந்தால் இரு கட்சிகளும் ஓடி விடுவார்கள் என்றார் விஜய்காந்த்.

வென்ற பின் வருவோம்-சரத்குமார்:

அதே போல அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் பத்மநாபனை ஆதரித்து அதன் கட்சி தலைவர் சரத்குமார், துணைத் தலைவர் ராதிகா ஆகியோர் இறுதியாக கணபதி நகரில் உள்ள வெங்கடேசுவர பெருமாள் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு பிரசாரம் செய்தனர்.

சரத்குமார் பேசுகையில், கடந்த ஒரு வார காலமாக நாங்கள் வீதி, வீதியாக, வீடு வீடாக சென்று பிரசாரம் செய்தோம். வெற்றி பெற்றவுடன் நன்றி கூற மீண்டும் உங்கள் வீடு தேடி வருவோம்.

எங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள். நாங்கள் தமிழகத்தை ஒளிமயமாக மாற்றுவோம் என்றார்.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: சின்னு மும்பை
பதிவு செய்தது: 12 Jan 2009 7:00 am
தட் இஸ் க்ரேட் தள

பதிவு செய்தவர்: திராவிடன்
பதிவு செய்தது: 08 Jan 2009 7:48 pm
பிரசாரத்தில் தமிழர்களை பன்றி மேய்க்க சொன்ன அகம்பாவம பிடித்த கேவலமான ஒரு பிறவிதான் விஜய காந்த் (படிக்க இவ்வார நக்கீரன் )கொட்டும் மழை யில் திரண்ட தமிழ் மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியது எந்த ஒரு அரசியல் சுய லாபத்திற்கும் அல்ல ! நடிகைகளுடன் மழை காட்சிகளில் நடிக்க போன கேப்டன் எங்கே? அனைத்து கட்சி கூட்டத்தில் தான் ஒரு ப்ரோயஜனமுமில்லை சரி ! உணர்வுகளை வெளிப்படுத்த தமிழ் மக்களுடன் வெளிப்படுத்த தெலுங்கு , நடிகர் சங்கம் நடத்திய பேருக்கு உ ண்ணா விரதம் கூட்டத்தில் மாட்டும் வால் காட்டி வீரம் பேசும் கேப்டன் உணர்வு தடுக்கிறதோ கனிமொழி துவக்கிய வேலைவாய்ப்பு முகாமை நகல் எடுத்து விட்டு விளம்பரம் தேடும் ஒரு மலிவான அரசியல் வாதி ! கனிமொழியின் முகாமில் அரசியல் இல்லை ! தி மு க கட்சியில் சேர உறுப்பினர் அட்டை கொடுக்கபட வும் இல்லை ! கனிமொழி விளம்பரம் தேடவும் இல்லை !

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India