clear
clear
clear
முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » முழு விபரம்
ராமலிங்கராஜு வீட்டில் செபி அதிகாரிகள் ரெய்டு
வெள்ளிக்கிழமை, ஜனவரி 9, 2009, 15:43 [IST]

Ramalinga Raju
ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை போண்டி ஆக்கி, பெரும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜுவின் ஹைதராபாத் வீட்டில் இன்று செபி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

நேற்றே ராமலிங்கராஜுவின் வீட்டை ரெய்டு போட செபி அதிகாரிகள் குழு வந்து விட்டது. ஆனால் நேற்று செபி அதிகாரிகள் அங்கு சென்றபோது ராஜு வீட்டில் இல்லை. அவர் வெளிநாட்டுக்குத் தப்பி விட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ராஜு எங்கும் ஓடவில்லை. இந்தியாவில்தான் இருக்கிறார் என ராஜு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் இன்று ராஜுவின் ஹைதராபாத் வீட்டில் செபி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.


இந்த சோதனையின்போது பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அனேகமாக இன்றே ராமலிங்க ராஜு கைது செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது.

User Comments
[ Post comments ]


இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !

  மேலும் செய்திகள்
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்