டெல்லி: அக்டோபர் 10ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 1 சதவீதமாக உயர்ந்துள்ள பண வீக்கம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 10 சதவீதமாக உயரும் என அசோசெம் தெரிவித்துள்ளது.
உணவுப் பொருட்கள் விலை உயர்வு, உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக பண வீக்கம் கிடுகிடுவென அதிகரிக்கும் எனவும் அசோசெம் தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டின் பண வீக்கம் விகிதம் மீண்டும் உயர்வு நிலைக்குப் போய் விட்டது. தொடர்ந்து பண வீக்கம் அதிகரித்தபடி உள்ளது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பண வீக்க விகிதம் 10 சதவீதமாக உயரும் என அசோசெம் எச்சரித்துள்ளது. இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் எனவும் அது தெரிவித்துள்ளது.