Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம்
ஏர் இந்தியா விமானங்களுக்கு மிரட்டல்- விமான நிலையங்கள் உஷார்

Chennai Airport
சென்னை: ஏர் இந்தியா விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ள என்று கூறி மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டன. தீவிர சோதனையும் நடைபெற்றது.

மும்பையில் உள்ள ஏர்-இந்தியா அலுவலகத்திற்கு நேற்று ஒரு இ-மெயில் வந்தது. அதில், ஏர்-இந்தியா விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அவை வெடித்துச் சிதறும் என்று மிரட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டு வெடிகுண்டு சோதனை, கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.

டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், கொச்சி உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் விமான நிலைய அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் சோதனையை தீவிரப்படுத்தினர்.

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு முனையம், காமராஜர் உள்நாட்டு முனையம் ஆகியவற்றில் இருந்து புறப்பட்டு செல்லும் ஏர்-இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய விமானங்களில் பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

சென்னையில் இருந்து ஏர்-இந்தியா நிறுவனங்களில் இருந்து கொழும்பு, சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய், டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்பட பல்வேறு நகரங்களுக்கு செல்ல கூடிய 37 விமானங்களிலும் அதிகாரிகள் பலகட்ட சோதனை செய்து பயணிகளை அனுப்பி வைத்தனர்.

விமான பயணிகள் அனைத்து விதமான திரவ பொருட்களையும் எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டது. விமானங்களில் திரவ பொருட்களை எடுத்துச் செல்வதற்கு ஏற்கனவே தடை உள்ளது. திரவ வடிவில் குண்டுகளை எடுத்துச்சென்று வெடிக்கச் செய்ய முடியும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனஆல் இது சரியான முறையில் நடைமுறையில் இல்லை.

ஆனால் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவை அதிகாரிகள் தீவிரமாக அமல்படுத்தினர்.

நேற்று நாடு முழுவதும் நடந்த சோதனையில் எங்கும் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் தொடர்ந்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: ravi
பதிவு செய்தது: 03 Nov 2009 9:52 am
religion is going to be the reason for next world war

பதிவு செய்தவர்: ரவி
பதிவு செய்தது: 03 Nov 2009 9:39 am
ரேளிகின் இஸ் கோயன் டு பே தி ரூட் காஸ் ஒப் நெக்ஸ்ட் வேர்ல்ட் war

[ Post Comments ]
 
 
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India