மும்பை: துபாயிலிருந்து மும்பை வந்து கொண்டிருந்த விமானத்தில் பணியில் இருந்த ஏர் ஹோஸ்டஸை கட்டிப்பிடித்து தவறாக நடக்க முயன்ற 51 வயது பயணியை மும்பையில் விமானம் தரையிறங்கியதும் போலீஸார் கைது செய்தனர்.
துபாயிலிருந்து நேற்று மும்பைக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. அதில் செல்வராஜ் பிள்ளை என்பவர் பயணித்தார். இவர் துபாயில் உள்ள மின்சார நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசாரகப் பணியாற்றி வருகிறார்.
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸ் ஒருவரிடம் செல்வராஜ் பிள்ளை தவறாக நடக்க முயன்றார். அவரைக் கட்டிப்பிடித்து ரகளை செய்துள்ளார்.
அவரை சக ஏர் ஹோஸ்டஸ்கள், பயணிகள் தடுத்த அசம்பாவிதம் நடக்காமல் தவிர்த்துள்ளனர்.
பின்னர் விமானம் மும்பை வந்து சேர்ந்ததும், அவரை விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் செல்வராஜ் பிள்ளையைக் கைது செய்தனர்.
இதுகுறித்து சாஹர் விமான நிலைய முதுநிலை இன்ஸ்பெக்டர் திலீப் பாட்டீல் கூறுகையில், செல்வராஜ் பிள்ளை குடிபோதையில் இருந்துள்ளார். ஏர் ஹோஸ்டஸை கட்டிப்பிடித்து தகாத விதத்தில் நடக்க முயற்சித்துள்ளார்.
விமானம் தரையிறங்கியதும் அவரை எங்களிடம் ஒப்படைத்தனர். நாங்கள் அவரைக் கைது செய்துள்ளோம் என்றார்.