ஜாம்நகர்: ஆளில்லாத ரயில்வே கேட்டில் ஆட்டோ மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர்.
குஜராத் மாநிலம், ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஜலியா ரயில் நிலையத்துக்கு அருகே ஆளில்லாத லெவல் கிராஸிங் ஒன்று உள்ளது. இன்று மதியம் சுமார் இரண்டரை மணியளவில் இந்த ரயில்வே கேட்டை ஆட்டோ ஒன்று கடக்க முயன்றது.
மொத்தம் 10 பேரை ஏற்றி வந்த ஆட்டோ ரயில் பாதையை கடக்க முயன்ற போது, மும்பையில் இருந்து வந்த சவுராஷ்டிர ஜனதா எக்ஸ்பிரஸ் ரயி்ல் மோதி விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆட்டோவில் இருந்த 10 பேரும் அதே இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகியுள்ளனர். எனினும் ஆட்டோவின் டிரைவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.