clear
clear
clear
x
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்

நரேந்திர மோடியை சந்தித்தார் அசோக் சிங்கால்

ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 29, 2009, 16:09[IST]
Vote this article
Up  
Down  


அகமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை விஷ்வ இந்து பரிஷத் சர்வதேச தலைவர் அசோக் சிங்கால் இன்று சந்தித்து பேசினார்.

காந்திநகரில் உள்ள மோடியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக லிபரான் கமிஷன் அளி்த்துள்ள அறிக்கையி்ன் அடிப்படையில் வி.எச்.பி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வினர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த சிங்கால், ராமர் ஜென்ம பூமி இயக்கத்தில் வாஜ்பாயும் தொடர்பு கொண்டிருந்தார் என கூறியது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையி்ல், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்துள்ள சிங்கால், மத்திய அரசு அடுத்தகட்டமாக மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கை குறித்தும், அதை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசித்ததாக தெரிகிறது.

இந்த சந்திப்பு குறித்து மூத்த வி.எச்.பி தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, 'சிங்கால், மரியாதை நிமித்தமாகவே முதல்வர் மோடியை சந்தித்தார். நாட்டு நடப்புகளைப் பற்றி இருவரும் ஆலோசித்தனர்' என்றார்.



User Comments
[ Post comments ]


இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்