கோவி்ல்பட்டி: சென்னையில் வரும் 21ம் தேதி மாநில அளவிலான கோரிக்கை மாநாடு நடக்க இருப்பதாக தமிழ்நாடு நாடார் பேரவை மாநில தலைவர் தனபாலன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'தமிழகத்தில் பனையேறும் தொழிலாளர்கள் கள் இறக்க அனுமதி கேட்டு கடந்த 12 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அதே போல், நாடார் சமுதாய மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும், சாதிவாரியாக கணக்கெடுத்து இதன் அடிப்படையில் இட ஓதுக்கீடு வழங்கவும், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றவும் வலியுறுத்தி சென்னையில் டிசம்பர் 21ம் தேதி மாநில அளவிலான கோரிக்கை மாநாடு நடக்கிறது.
இம்மாநாட்டில் பங்கேற்குமாறு முதல்வர் மற்றும அனைத்து கட்சியினரை அழைக்க உள்ளோம்' என்றார்.