கோவை: கோவை மாவட்டத்தில் 7 பேரூராட்சிகளில் 22 கோடியே 51 இலட்சத்து 11 ஆயிரம் ரூபாய் செலவில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு..
கோவை மாவட்டத்தில் 7 பேரூராட்சிகளில் சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கான நகர்ப்பகுதி அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மொத்தம் 22 கோடியே 51 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய்ச் செலவில் குடிநீர் வழங்கும் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிர்வாக ஒப்புதல் அளித்து முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.