clear
clear
clear
x

பண மோசடி செய்த்வரைக் கைது செய்யக் கோரி தீக்குளிக்க முயன்ற பெண்

திங்கள்கிழமை, பிப்ரவரி 8, 2010, 15:32[IST]
Vote this article
Up  
Down  


மதுரை: வங்கிக் கடன் வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்தவரைக் கைது செய்யக் கோரி மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஒரு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் எஸ்.மகேஸ்வரி. இவர் அதே பகுதியில் உள்ள கே.மகேஸ்வரி, லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோருடன் சேர்ந்து சுய உதவிக் குழு நடத்தி வருகிறார்.

குழுவில் இணைந்த 230 பேருக்கும் தலா 50,000 ரூபாய் கடன் வாங்கித் தருவதாக, தலா 6000 ரூபாய் வசூலித்துள்ளனர். தாங்கள் வசூலித்த பணத்தை ஆறுமுகம் என்பவரிடம் கொடுத்துள்ளார்கள்.

இந்த ஆறுமுகம் கடன் வாங்கித் தரவில்லை. வாங்கிய பணத்தையும் தரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த எஸ்.மகேஸ்வரி, கே.மகேஸ்வரி, லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோர் மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர்.

அப்போது எஸ்.மகேஸ்வரி திடீரென தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து போலீசார் அந்தப் பெண்ணை தடுத்து நிறத்தியதோடு, 4 பேரையும் கைது செய்தனர்.

இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

நகராட்சி முன்பு பெண் தீக்குளி்க்க முயற்சி:

இதற்கிடையே, கடையநல்லூர் நகராட்சி முன்பு இன்று காலை ஒரு பெண் தீக்குளிக்க முயன்றார்.

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் 2வது வார்டு பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி அமுதா. இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அமுதா கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று தனது வீட்டிற்கு மின் இணைப்புக்கு கொடுப்பது சம்பந்தமாக வீட்டு தீர்வை கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுவரை வீட்டு தீர்வை கட்டாதவர் மின் இணைப்பு பெறுவதற்காக வீட்டு தீர்வை கட்ட முன்வந்ததை அறிந்த நகராட்சி நிர்வாகத்தினர் கடந்த 3 மாதங்களாக அமுதாவை அலைக்கழித்துள்ளனர்.

இதனால மனமுடைந்த அமுதா இன்று காலை நகராட்சி அலுவலகம் முன்பு உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து அந்த பெண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் அங்கிருந்த கவுன்சிலர் ராமகிருஷ்ணன் வீட்டு வரி செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து அந்த பெண் அங்கிருந்து சென்றார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அமுதா கூறுகையில், எனது வீட்டிற்கு தீர்வை கட்ட வேண்டுமென்றால் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என கேட்டனர். என்னிடம் அவ்வளவு பணவசதி இல்லை என்றேன்.

இதனாலேயே வரி விதிக்காமல் இழுத்தடிப்பு செய்தனர். மனமுடைந்த நிலையில்தான் இன்று தீக்குளிக்க முயற்சித்தேன்' என்றார்.




User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: டவுட் தனபால்
பதிவு செய்தது: 09 Feb 2010 6:46 am
பணம் இல்லைன்னு தான கடன் வாங்குறீங்க.. லஞ்சம் கொடுக்க மட்டும் ஆறாயிரம் ரூபா எப்படி வந்தது ?

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!