மும்பை: ஐபிஎன் லோக்மாத் அலுவலகத்தை சூறையாடிய சிவசேனாமும்பை: சிவசேனா தொண்டர்கள் மும்பையில் உள்ள ஐபிஎன் லோக்மாத் மராத்தி டிவி அலுவலகத்தை தாக்கி சூறையாடினர்.பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்த குண்டர்கள், பத்திரிக்கையாளர்களையும் தாக்கிக் காயப்படுத்தினர்.லோக்மாத் அலுவலகம் மட்டுமல்லாது, ஐபிஎன்7 சானல் அலுவலகத்தையும் தாக்கி சூறையாடினர். இது இந்தி சானலாகும். இந்த இரு சானல்களும் ஐபிஎன் குழுமத்தைச் சேர்ந்தவையாகும்.உள்ளே நுழைந்த அக்கும்பல் பத்திரிக்கையாளர்களையும், ஊழியர்களையும் கண்மூடித்தனமாக தாக்கினர். உடைகளையும்
தேசபக்தியை காட்டியதற்கு பரிசா இது?-மகேஷ் பட்மும்பை: எனது மகன் ராகுல் பட் உண்மையான தேசபக்தியுடன், ஹெட்லியுடனான தனது தொடர்புகளை தானே வலியச் சென்று தெரிவித்ததற்காக இப்படித்தான் எங்களை நடத்துவதா என்று வேதனையுடன் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார் தயாரிப்பாளர் மகேஷ் பட்.மகேஷ் பட்டின் மகன் ராகுல் பட்டுக்கும், இந்தியாவுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டிய ஹெட்லிக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து தெரிய..
விமான கதவு தயாரிக்கும் இந்தியா!: விமானமே தயாரிக்கும் சீனா!!டெல்லி: இந்தியாவின் பாதுகாப்பு விஷயத்தில் அரசியல்வாதிகள் விளையாடி வருவதாக விமானப் படைத் துணைத் தலைவர் பி.கே.பர்போரா குற்றம் சாட்டியுள்ளார்.இந்திய விமானப் படையின் நம்பர் டூ நிலையில் உள்ள பிரணாப் குமார் பர்போரா, இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பின் (சிஐஐ) மாநாட்டில் பேசுகையில்,நம் முப்படைகளின் பலத்தை அதிகரித்தாக வேண்டும். இதைச் செய்ய வேண்டியது அரசும் அதிகாரவர்க்கமும் தான். ஆனால், அரசியல்வாதிகளின்..
ஜார்க்கண்ட் தேர்தல்: ரூ.1க்கு 1 கிலோ அரிசி- பாஜகராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைத்தால் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது.ஜார்க்கண்டில் வரும் 25ம் தேதி முதல் 5 கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர் ரகுவார்..
ராஜ்யசபா எம்பிக்களாக துவா-ஏ.கே.கங்குலி நியமனம்டெல்லி: ராஜ்யசபா உறுப்பினர்களாக மூத்த பத்திரிகையாளர் ஹெச்.கே.துவா, தொழிலதிபர் ஏ.கே.கங்குலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.மாநிலங்களவையில் 2 நியமன உறுப்பினர்கள் ஓய்வு பெற்றதையடுத்து துவா, கங்குலி ஆகியோரை மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நியமித்துள்ளார்.பத்மபூஷண் விருது பெற்றுள்ள துவா தற்போது டிரிப்யூன் பத்திரிகையின் ஆசிரியராக உள்ளார். முன்னாள் பிரதமர் தேவெ கெளடாவின் பத்திரிக்கை ஆலோசகராக இருந்த..
அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்புடெல்லி: குளிர்கால கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று மக்களவை தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது.கரும்பு விலை நிர்ணய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாடி கட்சி எம்பி்க்கள் அவையின் மையத்தில் கூடி அமளி செய்தனர்.அவர்களுடன் பிற எதிர் கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டதால் அவையை சபாநாயகர் மீரா குமார் ஒத்திவைத்தார்.அதே போல மாநிலங்களவையும் அமளியால் ஒத்தி வைக்கப்பட்டது.ராகுல்..
ரயிலை குண்டு வைத்துத் தகர்த்தனர் மாவோயிஸ்டுகள் - 2 பேர் பலிகொல்கத்தா: ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் மாவோயிஸ்டுகள் வைத்த குண்டு வெடித்ததில், ரயில் தடம் புரண்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 47 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அந்தப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.டாடா - பிலாஸ்பூர் பாசஞ்சர் ரயில் நேற்று இரவு மனோஹர் - பசோய்டா ரயில் நிலையங்களுக்கு இடையில் வந்து கொண்டிருந்தது.அப்போது..
ஆட்டோ மீது ரயில் மோதி 10 பேர் பலிஜாம்நகர்: ஆளில்லாத ரயில்வே கேட்டில் ஆட்டோ மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர். குஜராத் மாநிலம், ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஜலியா ரயில் நிலையத்துக்கு அருகே ஆளில்லாத லெவல் கிராஸிங் ஒன்று உள்ளது. இன்று மதியம் சுமார் இரண்டரை மணியளவில் இந்த ரயில்வே கேட்டை ஆட்டோ ஒன்று கடக்க..
மனைவியை வைத்து சூதாடிய கணவர்!ஹைதராபாத்: மனைவியை ரூ. 35,000க்கு சூது வைத்து ஆடி தோற்றார் கணவர். இதையடுத்து வென்ற நபர், தோற்றவரின் மனைவியை இழுத்துச் சென்றார். அந்தப் பெண்ணோ, இனிமேல் கணவருடன் வாழ மாட்டேன் என்று கூறி அழைத்துச் சென்றவருடனேயே வாழ விருப்பம் தெரிவித்துள்ளார்.மகாபாரத்தில் தனது மனைவி திரவுபதியை வைத்து சூதாடுவான் தர்மன். அதில் தர்மன் தோற்று விடுவான். இதையடுத்து துரியோதனன்,..
விலை நிர்ணயம்-டெல்லியை உலுக்கிய கரும்பு விவசாயிகள்டெல்லி: மத்திய அரசின் புதிய கரும்பு விலை மற்றும் கொள்முதல் விலைக் கொள்கையை வாபஸ் பெறக் கோரி உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.கரும்புகளுடன் குவிந்த அவர்கள் ராம்லீலா மைதானத்திலிருந்து ஜந்தர் மந்தர் வரை பேரணியாகச் சென்றனர். பின்னர் அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.அஜீத் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம், மகேந்திர சிங்..
இந்தியாவின் டாப் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி!டெல்லி: இந்தியாவின் டாப் கோடீஸ்வரர் என்ற பெருமையை மீண்டும் பெற்றுள்ளார் ரிலையன் இன்டஸ்ட்ரீஸ் சேர்மன் முகேஷ் அம்பானி. 32 பில்லியன் டாலர் அதாவது ரூ 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி சொத்துக்களுடன் அவர் முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க பொருளாதார - வர்த்தக பத்திரிகையான போர்பஸ் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த..
கரும்பு விலை நிர்ணயம்-மத்திய அரசுக்கு திமுக எதி்ர்ப்பு!டெல்லி: கரும்பு விலை நிர்ணயம் தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய கலந்து ஆலோசிக்கவில்லை. இதுதொடர்பாக ஆக்கப்பூர்வமான முறையில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டால் அதில் கலந்து கொண்டு திமுக தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்த கூட்டத் தொடரில் ஸ்பெக்ட்ரம் பிரச்சினை பெரிய..
ஹெட்லியுடன் தொடர்பில்லை: கங்கணா-ஆர்த்திடெல்லி: இந்தியாவுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டி கைதான அமெரிக்கர் டேவிட் கோல்ட்மேன் ஹெட்லியுடன் எனக்கு எந்த அறிமுகமும், நட்பும், தொடர்பும் கிடையாது என்று பாலிவுட் நடிகை கங்கணா ரணவத் கூறியுள்ளார்.கங்கணா ரணவத் உள்ளிட்ட இரு நடிகைகளை, ராகுல் பட், ஹெட்லிக்கு அறிமுகப்படுத்தி வைத்ததாக கூறப்படுகிறது. இந்தத் தகவலை ராகுல் பட்டே, தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளிடம்..
துபாய்: 15 மணி நேரம் பயணிகளை பரிதவிக்கவிட்ட ஏர் இந்தியா!துபாய்: துபாயிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்ல வேண்டிய 150க்கும் மேற்பட்ட பயணிகள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகத்தின் மோசமான நடத்தை காரணமாக நள்ளிரவில் குழந்தைகளுடன் அவதிப்பட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.துபாயிலிருந்து புதன்கிழமை மாலை 6.15 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் தாமதமாக புறப்பட்டது. புறப்பட்டு ரன்வேயில் விமானி விமானத்தை செலுத்திய சில நிமிடங்களில் திடீரென பிரேக்..
எவ்வளவு பேர் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறீர்கள்?-ராகுல்விஜயவாடா: நான் வருங்கால பிரதமர் அல்ல என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார்.விஜயவாடாவில் கல்லூரி விழாவில் பங்கேற்ற ராகுல், அங்கு மாணவர்களிடம் கலந்துரையாடினார்.அப்போது நாட்டின் வருங்கால பிரதமர் என்ற தொனியில் சில மாணவர்கள் அவரை சுட்டிக் காட்டிப் பேசியபோது இடைமறித்த ராகுல்,பிரதமராக யார் வேண்டுமானாலும் வரலாம். தயவுசெய்து என்னை எதிர்கால பிரதமராக நினைக்க வேண்டாம்...