ஐரோப்பிய யூனியன் தலைவரான பெல்ஜியம் பிரதமர்பிரஸ்ஸல்ஸ்: ஐரோப்பிய யூனியன் அமைப்பின் முழு நேரத் தலைவராக பெல்ஜியம் பிரதமர் ஹெர்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெளியுறவுக் கொள்கைத் தலைவராக கேத்தரின் ஆஷடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.27 உறுப்பினர்களைக் கொண்ட யூனியன் கூட்டத்தில் ஒரு மனதாக ஹெர்மன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டிசம்பர் 1ம் தேதி தனது பொறுப்பை அவர் ஏற்கவுள்ளார்.62 வயதாகும் ஹெரமன், இளைஞராக இருந்தது முதல் தீவிர அரசியலில்...
2வது முறையாக ஆப்கன் அதிபரானார் கர்சாய்காபூல்: ஆப்கன் அதிபராக ஹமீத் கர்சாய் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.காபூலில் உள்ள அதிபர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கர்சாய்க்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல் சலாம் ஆஸ்மி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.கர்சாய் பதவியேற்பு நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் உட்பட 800 சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.தலிபான்கள்..
அமெரிக்கர் ஹெட்லி ஒரு பாகிஸ்தானியர்!-தொடர்புகள் அம்பலம்வாஷிங்டன்: டேவிட் கோல்ட்மேன் ஹெட்லி உண்மையில் ஒரு பாகிஸ்தானியர் என்ற உண்மை தெரிய வந்துள்ளது. அவரும், அவருடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டவருமான ராணாவும், பாகிஸ்தானைச் சேர்ந்த மிகப் பெரிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. ராணாவின் உறவினர்கள் பாகிஸ்தான் ராணுவத்தில் அதிகாரிகளாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.ஹெட்லி மற்றும் பாகிஸ்தானில் பிறந்த அமெரிக்கரான தஹவூர் ஹூசேன் ராணா..
இந்தியாவை விட்டுவிட்டு சீனாவுடன் உறவு கிடையாது- அமெரிக்காவாஷிங்டன்: இந்தியாவை விட்டு விட்டு சீனா உள்பட எந்த நாட்டுடனும் அமெரிக்கா உறவு வைத்துக் கொள்ள முன்வராது என்று அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது.இதுகுறித்து அமெரிக்க அரசியல் விவகாரத்துறை இணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் கூறுகையில், சீனாவுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள அமெரிக்கா முனைந்துள்ளது. அதேசமயம், இந்தியாவை விட்டு விட்டு சீனாவுடன் உறவு என்று அதற்கு அர்த்தம் எடுத்துக் கொள்ளக்..
ஆஸ்திரேலியாவில் இந்தியத் தம்பதி மீது இனவெறித் தாக்குதல்மெல்போர்ன்: மெல்போர்ன் நகரில் வசித்து வரும் இந்தியத் தம்பதி சிலரால் தாக்கப்பட்டது. இவர்கள் மீதான தாக்குதல் இனவெறித் தாக்குதலாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.இரண்டு பெண்கள் உள்ளிட்ட 3 பேர் கொண்ட கும்பல், இரும்புக் கம்பி, ஸ்டீல் சேர் உள்ளிட்டவற்றால் இந்தியத் தம்பதியைத் தாக்கியுள்ளனர்.தாக்குதலுக்குள்ளான அவர்களின் பெயர் ரோட்னி ராஜ், அவரது மனைவி ரத்னா. புந்தூரா என்ற இடத்தில்..
இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிக அணு ஆயுதங்கள்!- யுஎஸ்வாஷிங்டன்: இந்தியாவைவிட பாகிஸ்தானிடம் அதிக அளவு அணு ஆயுதங்கள் உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.புல்லடின் ஆப் அடாமிக் சயின்ஸ் என்ற இதழில், ராபர்ட் எஸ் நாரிஸ் மற்றும் ஹனஸ் எம் கிரிஸ்டின்சன் ஆகிய இரு அமெரிக்க விஞ்ஞானிகளும் எழுதியுள்ள கட்டுரையில்,சீனா, பாகிஸ்தான், இந்தியா ஆகியவை போட்டிபோட்டுக் கொண்டு அணு ஆயுதங்களை பெருக்கி வருகின்றன. பாகிஸ்தான் 70 முதல்..
தீவிரவாதி ராணாவின் ஜாமீன் கோரிக்கை- அமெரிக்க கோர்ட்டில் ஒத்திவைப்புசிகாகோ: இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத சதித் திட்டத்தில் ஈடுபட்டு கைதான பாகிஸ்தானில் பிறந்த கனடியரான தஹவூர் ஹூசேன் ராணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு அமெரிக்க கோர்ட் ஒத்திவைத்துள்ளது.சிகாகோவில் உள்ள கோர்ட்டில், ராணா ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதி நான் நோலன், டிசம்பர் 2ம் தேதிக்கு இந்த..
ஜான்சி ராணி எழுதிய கடிதம் பிரிட்டன் நூலகத்தில் கண்டெடுப்புலண்டன்: லார்டு டல்ஹவுசீக்கு ஜான்சி ராணி எழுதிய கடிதம் ஒன்று லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஜான்சி ராணி லட்சுமிபாய் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் நம்மிடம் சிறிதளவே இருப்பதால் இந்த கடிதத்தை முக்கியமானதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.பிரிட்டிஷ் நூலகத்தின் ஆவணப் பிரிவில் காணப்பட்ட இந்த கடிதம், பாரசீக மொழியில் எழுதப்பட்டுள்ளது. 1897ம் ஆண்டுக்கு சற்று முந்தைய காலகட்டத்தில் அப்போதைய..
லண்டன்: இந்திய பெண் கொடூர கொலை-கணவர் கைதுலண்டன்: கைகளைத் துண்டித்து தனது மனைவியைக் கொலை செய்த இந்தியரை லண்டன் போலீஸார் கைது செய்துள்ளனர்.கொல்லப்பட்ட 28 வயதான அந்த இளம் பெண்ணின் பெயர் கீதா அலாக். லண்டனில் உள்ள மிகப் பெரிய ஆசிய ரேடியோ நிறுவனமான சன்ரைஸ் ரேடியோவில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார்.திங்கள்கிழமை மாலை இவர் லண்டனுக்கு வெளியே கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் மிகக் கொடூரமான..
78 தமிழர்களும் இந்தோனேசியாவில் தங்க அனுமதிஜகார்த்தா: இலங்கையிலிருந்து படகில் வந்து தற்போது எங்கு கொண்டு செல்லப்படப் போகிறோம் என்று தெரியாமல் அலை பாய்ந்து கொண்டிருக்கும் 78 தமிழர்களையும் தங்களது நாட்டிலேயே தங்க வைக்க இந்தோனேசியா முடிவு செய்துள்ளது.அதன்படி முதல் கட்டமாக இந்த 78 பேரும் ஆறு மாதங்களுக்கு இந்தோனேசியாவில் தங்க வைக்கப்படுவர். அதற்கான செலவுகளைத் தர ஆஸ்திரேலிய அரசு சம்மதித்ததைத் தொடர்ந்து இந்த..
பிரிட்டிஷ் கொலம்பியா-ஜாவாவில் நிலநடுக்கம்வான்கூவர்: கனடா அருகே பசிபிக் கடலில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா தீவை நிலநடுக்கம் தாக்கியது.இங்குள்ள குயீன் சார்லெட் தீவின் பிரின்ஸ் ருபெர்ட் என்ற இடத்துக்கு அருகே கடலுக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் நேற்று காலை 7.30 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.6 புள்ளிகளாகப் பதிவானது. இதனால் சுனாமி அலைகள் ஏதும் ஏற்படவில்லை.இந்த நிலநடுக்கத்தையடுத்து..
ஆஸி கப்பலிலிருந்து மீதமுள்ள 56 தமிழர்களும் நாளை தரையிறங்க சம்மதம்பிரன்டன் தீவு (இந்தோனேசியா): இந்தோனேசியாவின் பிரன்டன் தீவில் நின்று கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ஓசியானிக் வைகிங் கப்பலிலிருந்து மீதுமுள்ள 56 தமிழர்களும் நாளை தரையிறங்க சம்மதித்துள்ளனர். இதன் மூலம் இந்தப் பிரச்சினை இப்போதைக்கு முடிவுக்கு வருகிறது.இலங்கையிலிருந்து படகில் வந்த 78 தமிழர்களை மடக்கிப் பிடித்த ஆஸ்திரேலியப் படையினர் தங்கள் நாட்டு சுங்கத்துறை ரோந்துக் கப்பலில் ஏற்றி அவர்களை..
திபெத் சீனாவின் ஒரு பகுதி - ஒபாமா திடீர் அங்கீகாரம்பெய்ஜிங்: திபெத் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா திடீரென அங்கீகாரம் அளித்துள்ளார்.சீனாவில் விஜயம் செய்து வரும் ஒபாமா பெய்ஜிங்கில் சீன அதிபர் ஹூ ஜின்டாவோவை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி திபெத் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அதேசமயம், சீனாவுக்கும், திபெத்த்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு விரைவில்..
6 தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பிய ஆஸி.சிட்னி: கடந்த ஏப்ரல் மாதம் அகதிகளாக ஆஸ்திரேலியாவுக்கு வந்த 50 இலங்கைத் தமிழர்களில் 6 பேரை ஆஸ்திரேலிய அரசு, மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பியது.கடந்த ஏப்ரல் மாதம் 50 தமிழர்கள் ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் அரசியல் புகலிடம் கோரி வந்தனர். இவர்களை காப்பாற்றி மீட்ட ஆஸ்திரேலிய அரசு அவர்களின் அகதிகள் கோரிக்கையை பரிசிலீத்து வந்தது. இருப்பினும் அவர்களில்..
ராப் டான்ஸில் கலக்கிய விளாடிமீர் புடின்!மாஸ்கோ: ரஷ்ய பிரதமர் விளாடிமீர் புடின் சகலகலாவல்லவானாக மாறி வருகிறார். சமீபத்தில் மீன் பிடித்து கலக்கினார். இப்போது ராப் டான்ஸ் ஆடி அசத்தியுள்ளார். கூடவே பிரேக் டான்ஸையும் போட்டு பின்னியுள்ளார்.மாஸ்கோவில் நடந்த இசை சானல் ஒன்றின் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட புடின் திடீரென ராப் டான்ஸும், பிரேக் டான்ஸும் ஆடி கூட்டத்தினரை குஷிப்படுத்தினார்.புடின் திடீரென..