சென்னை: இந்தியாவில் உள்ள முக்கிய அணு சக்தி மையங்களைத் தகர்க்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து கல்பாக்கம் அணு மின் நிலையப் பாதுகாப்பு குறித்து சென்னையில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது.பாகிஸ்தான் தீவிரவாதிகள், இந்தியாவில் உள்ள முக்கிய அணு சக்தி மையங்களைத் தாக்கித் தகர்க்க சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை மாநில அரசுகளையும், மத்திய
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு காரணமாக வீடுகளை இழந்த 1,869 குடும்பங்களுக்கு தற்காலிக குடியிருப்புகள் 15 நாட்களுக்குள் கட்டித் தரப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு ஏராளமான வீடுகள் புதையுண்டன. சுமார் 53 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந் நிலையில் மழைச்
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் ஆயிரம் வீடுகளுக்கு மேல் இடிந்துள்ளன, மக்கள் உண்ண உணவின்றி கையில் பணமும் இன்றி அத்தியாவசியப் பொருட்களை கூட வாங்க முடியாத நிலையில் திண்டாடி வருகின்றனர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா பகுதிகளில் ஆயிரம் வீடுகளுக்கு மேல் இடிந்துள்ளன. சுமார் 1,400 ஏக்கர் விளைபயிர் சேதமடைந்துள்ளது.
சென்னை: 2008ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வென்று உத்தரகண்ட் மாநிலம் முசெளரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி நிர்வாக பயிற்சிக் கழகத்தில் ஓராண்டு பயிற்சி முடித்த தமிழகத்தைச் சேர்ந்த 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.இதில் 5 பேர் பெண்கள் ஆவர். இவர்களில் மரியம் பர்ஸானா சாதிக், லலிதா லட்சுமி ஆகியோருக்கு தமிழ்நாடு கேடர் பதவியே
சென்னை: மழை, வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக முதல்வர் கருணாநிதி 2வது நாளாக இன்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.தமிழகம் முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளப் பெருக்கைத் தடுப்பது, வெள்ள நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக அதிகாரிகளுடன் நேற்று முதல்வர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.ஆறு, குளம், ஏரிகள் உடைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும்,
ராமநாதபுரம்: உதவித் தொகை கேட்டு ஆண்டுக்கணக்கில் அரசு அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர் பார்வையற்ற அக்காளும் தம்பியும்.அவர்களுக்கு உதவ எந்த அதிகாரியும் முன் வரவில்லை.தொண்டி அருகே புதுக்குடியை சேர்ந்த தம்பதிகள் முனியரசு, வாசுகி. இருவரும் கூலித் தொழிலாளிகள். இவர்களது மகள் ரோஜா(15), மகன் ஈஸ்வரன் (12).பிறவியில் இருந்தே கண் பார்வை அற்ற இவர்கள் ஊனமுற்றவர்களுக்கான அடையாள அட்டை பெற்றும்
சென்னை: இலங்கை அகதிகள் முகாம்களில் உள்ள அவல நிலை குறித்து முதல்வர் கருணாநிதிக்கே தெரியாமல் இருட்டடிப்பு செய்துள்ளனர் அதிகாரிகள் என்று சர்ச்சை எழுந்துள்ளது. இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் படு மோசமான நிலை நிலவுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்த
குமுளி: முல்லைப் பெரியாறு அணையில் வழக்கமான பணிகளை மேற்கொள்ள விடாமல் தமிழக பொறியாளர்களை கேரள வனத்துறையினர் மீண்டும் தடுத்துள்ளனர்.முல்லைப் பெரியாறு அணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் 999 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.அணையின் நீர்மட்டத்தை அறியவும், பரமாரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் தமிழக பொதுப்பணித்துறை- நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் தினமும் பெரியாறு
சென்னை: வருமான வரித்துறை அதிகாரிகள் போல நடித்து பணம், நகைளை சுருட்டி வந்த கும்பல் பிடிபட்டுள்ளது.சென்னையில் கடந்த சில மாதங்களாக போலி அடையாள அட்டைகளைக் காட்டி, வருமான வரித்துறை, சிபிஐ அதிகாரிகள் என்று கூறிகொண்டு நிறுவனங்கள், வீடுகளில் ஒரு கும்பல் கொள்ளையடித்து வந்தது.சமீபத்தில் பூக்கடை மூர் தெருவில் ஏ.சி விற்கும் கடையிலும் இதே போல 'ரெய்ட்' போன
சென்னை: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் எனக்கு முன்பு இருந்த அமைச்சர்கள் என்ன நடைமுறையைப் பின்பற்றினார்களோ அதையேதான் நானும் பின்பற்றினேன். எந்த விதி மீறலிலும் நான் ஈடுபடவில்லை. ஒரு வேளை கீழ் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் மீறியிருந்தால் அதுகுறித்து விசாரிக்கப்படும் என மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராஜா கூறியுள்ளார்.சென்னை வந்த ராஜா அங்கு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர்