ராமநாதபுரம்: சுனாமி திட்டத்தில், 4,050 சிமென்ட் மூட்டையை கடத்தி வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்த மாவட்ட திட்ட அலுவலக இளநிலை செயற்பொறியாளர் சுப்பிரமணியனை போலீசார் தேடி வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில், திட்ட செயலாக்க அலுவலகத்தின் கீழ், கடலோர பகுதிகளில் மீனவர்களுக்கு சுனாமி வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.மண்டபம் சுனாமி வீடுகள் கட்டும் பணிக்காக, என்மனங்கொண்டான் பகுதியில்
ஜகார்தா: இந்தேனேஷியாவின் சுலவேசி பகுதியி்ல் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.அந் நாட்டு நேரப்படி காலை 7.14 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.6 புள்ளிகளாகப் பதிவானது.இப் பகுதியி்ல் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,000 பேர் வரை பலியானது நினைவுகூறத்தக்கது.ஜப்பானிலும்இதற்கிடையே நேற்று மாலை 4.20 மணியளவில் ஜப்பானிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமாமி ஒஷிமா
சென்னை: சுனாமி நிவாரண நிதியில் மோசடி செய்த மகளிர் மீனவர் சங்கத் தலைவி சிவகாமி கைது செய்யப்பட்டார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஸ்சார்ம் என்ற தொண்டு நிறுவனம் கடந்த 2005ம் ஆண்டில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக ரூ. 1 கோடி நிதி உதவியை கலைச்செல்வி கருணாலயா என்ற சமூக சேவை நிறுவனத்திடம் வழங்கியது. இதையறிந்த நெட்டுக்குப்பம் மகளிர்
சிட்னி: இன்று தென் பசிபிக் கடலில் 6 நிமிடங்களில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஆனால், சுனாமி அலைகள் ஏதும் ஏற்படவில்லை.முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.2 புள்ளிகளாகவும், இரண்டாவது நிலநடுக்கம் 6.1 புள்ளிகளாகவும் பதிவானதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.இரு நிலநடுக்கங்களும் நிலத்துக்கு அடியில் 35 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டன.
ஜகார்த்தா: இந்தோனேசியா அருகே கடலுக்கடியில் 6.2 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமி எதுவும் உண்டாகவில்லை.இந்தோனேசியாவின் சுலவெசி தீவுக்கு அருகே கடல் பகுதியில் நேற்று மாலை சுமார் 6.38 மணிக்கு தீடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் லேசான குலுங்கின. மக்கள் அலறியடித்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினர்.இந்த நிலநடுக்கம் சுலவெசி தீவுக்கும், தெற்கு பிலிப்பைன்ஸ்
சென்னை: சுனாமி நிவாரணப் பணிகளில் கோடி கணக்கில் பண மோசடி நடந்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமி தமிழகத்தில் பேரழிவை உண்டாக்கியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு
சென்னை: தென்னிந்திய திருச்சபையின் சுனாமி நிவாரண பணிகளில் ரூ.7.5 கோடி மோசடி செய்த சென்னை பெண் டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடிக்கு முக்கிய காரணமான இவரது பெற்றோரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தென்னிந்திய சி.எஸ்.ஐ. திருச்சபையின் பொதுச் செயலாளர் மோசஸ் ஜெயக்குமார் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில்,தென்னிந்திய திருச்சபையின்
சமாவோ: சமாவோ தீவுக்கு அருகே இருக்கும் டோங்கா தீவு பகுதியில் இன்று மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது. நேற்று முன்தினம் ஏற்பட்ட சுனாமிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 189 ஆக உயர்ந்துள்ளது.நியூசிலாந்துக்கு கிழக்கே பசிபிக் பெருங்கடல் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் சுனாமி ஏற்பட்டது. இதில் சமாவோ தீவு
சிட்னி: பசிபிக் பெருங்கடல் தீவான சமாவோவில் ஏற்பட்ட சுனாமிக்கு 100க்கும் அதிகமானோர் பலியாகினர். பல கிராமங்கள் முற்றிலும் நாசமாகின. மேலும், நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.பசிபிக் பெருங்கடலில் நியூசிலாந்துக்கு வட கிழக்கே இருக்கும் இந்த குட்டி தீவின் தென் கிழக்கே 120 கிமீ. தொலைவில் கடலுக்கடியில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவில் மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோளில் 8.3
டோக்கியோ: ஜப்பானின் ருயூகியூ தீவுக்கு அருகே எரிமலைக்கு அருகே அடுத்தடுத்து 6 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இவோ டோரி ஷிமா என்ற இந்த எரிமலைக்கு அருகே அதிகபட்சம் 5.9 ரிக்டர் அளவு கொண்ட 6 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.கடலுக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் சுனாமி அலைகள் ஏதும் ஏற்படவி்ல்லை என்றாலும் அப் பகுதியில்