ஹைதராபாத்: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக அத்வானி விருப்பம் தெரிவித்துள்ளார். இப்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உள்ள சுஷ்மா ஸ்வராஜ் இந்தப் பொறுப்பை ஏற்கலாம் என்று தெரிகிறது.ஹைதராபாத்தில் நிருபர்களிடம் பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு,பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கின் பதவி காலம் முடிவுறுவதையொட்டி அடுத்த தலைவராக மகாராஷ்டிர பாஜக தலைவர் நிதின் கட்காரி தேர்வு
விஜயவாடா: நான் வருங்கால பிரதமர் அல்ல என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார்.விஜயவாடாவில் கல்லூரி விழாவில் பங்கேற்ற ராகுல், அங்கு மாணவர்களிடம் கலந்துரையாடினார்.அப்போது நாட்டின் வருங்கால பிரதமர் என்ற தொனியில் சில மாணவர்கள் அவரை சுட்டிக் காட்டிப் பேசியபோது இடைமறித்த ராகுல்,பிரதமராக யார் வேண்டுமானாலும் வரலாம். தயவுசெய்து என்னை எதிர்கால பிரதமராக நினைக்க வேண்டாம்.
கொழும்பு: இலங்கையில் ராணுவப் புரட்சியை மேற்கொள்ள நான் திட்டமிட்டு்ள்ளதாகக் கூறி அதை சமாளிக்க இந்திய ராணுவத்தின் உதவியை அதிபர் ராஜபக்சே கோரியுள்ளார். இதைவிட அசிங்கமான செயல் எதுவும் இருக்க முடியாது என்பதால் தான் நான் எனது பதவியை ராஜினாமா செய்தேன் என்று அந் நாட்டு முப்படைகளின் கூட்டுப் படைத் தலைவர் பதவியிலிருந்து விலகிய சரத் பொன்சேகா கூறியுள்ளார்.நேற்று
மும்பை: மகாராஷ்டிரத்தில் அமைச்சர்கள், துறைகளை பங்கிட்டுக் கொள்வதில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடையே மோதல் முடிவுக்கு வராததால் தேர்தல் முடிவுகள் வெளியாகி 14 நாட்கள் கடந்துவிட்ட பின்னரும் இன்னும் ஆட்சி அமையவில்லை.இதையடுத்து மகாராஷ்டிரத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமலாக்குமாறு பாஜக, சிவசேனா கூட்டணி கோரியுள்ளது.இன்று ஆளுநர் ஜமீரை சந்தித்த பாஜக, சிவசேனா எம்எல்ஏக்கள் இது தொடர்பாக மனுவும் கொடுத்தனர்.முதல்வராகத் தேர்வு
டேராடூன்: மத்திய தகவல் ஆணையத்தின் தலைவர் பதவிக்கு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடியை நியமிக்க வேண்டுமென யோகா குரு ராம்தேவ் மற்றும் சமூக போராளி அன்னா ஹசாரே ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தியுள்ளனர்.ஊழல் தடுப்பு முயற்சிகளுக்கு பெரிதும் உதவக்கூடிய தகவல் ஆணையத்தின் தலைமை பதவிக்கு துடிப்பும், நேர்மையும் கொண்ட அதிகாரியை நியமிக்க வேண்டும்
டெல்லி: கர்நாடகத்தில் முதல்வர் எதியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ரெட்டி சகோதரர்கள் தலைமையிலான அதிருப்தியாளர்கள் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சியின் உதவியை நாடியுள்ளனர்.ஆனால், கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த புதிதி்ல் எதியூரப்பாவுக்கு மெஜாரிட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காக பல காங்கிரஸ் எம்எல்ஏக்களையே விலைக்கு வாங்கி, பாஜகவுக்கு கட்சி தாவ வைத்த ரெட்டிகளுடன் கைகோர்க்க காங்கிரஸ் விரும்பவில்லை. இதனால் வேறு
டெல்லி: ராஜஸ்தான் எதிர்க் கட்சித் தலைவர் பதவியிலிருந்து பெரும் நெருக்கடி, இழுத்தடிப்புக்குப் பின் ராஜினாமா செய்துள்ள பாஜக தலைவர் வசுந்தரா ராஜே, தோல்விக்கு மற்ற தலைவர்கள் எல்லாம் ஏன் பொறுப்பேற்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.தனது ராஜினாமா கடிதத்தை தனது உதவியாளர்கள் மூலம் அத்வானிக்கும் அதன் நகலை கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு கொடுத்தனுப்பியுள்ள வசுந்தரா அதில், பல
ஹைதராபாத்: எதிர்காலத்தில் மக்கள் ஆதரவோடு நான் முதல்வராவேன் என்று மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.ஹெலிகாப்டர் விபத்தில் ராஜசேகர ரெட்டி மரணமடைந்ததையடுத்து ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக முயன்று வருகிறார்.ஆனால், அவருக்கு முதல்வர் பதவியைத் தர காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மறுத்து வருகிறார். முதல்வராக்கப்பட்ட ரோசையாவுக்கு ஜெகன் மோகனும்
டெல்லி: ராஜஸ்தான் மாநில எதிர்க் கட்சித் தலைவர் பதவியிலிருந்து வசுந்தரா ராஜே ஒருவழியாக இன்று ராஜினாமா செய்தார்.கடந்த மக்களவைத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் ராஜஸ்தானில் பாஜக படுதோல்வி அடைந்தது. இதையடுத்து ராஜஸ்தான் சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராக பொறுப்பேற்றார் வசுந்தாரா.ஆனால், தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று அவரை பதவி விலகுமாறு கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார்.அதே நேரத்தில்
திண்டுக்கல்: எம்எல்ஏ, எம்பி மற்றும் உள்ளாட்சி அமைப்பு பதவிகள் போன்றவற்றுக்கு இளைஞர், இளம் பெண்கள் பாசறை உறுப்பினர்களுக்கு மட்டும்தான் தேர்தலின்போதுதான் வழங்கப்படும் என இந்த அதிமுக இளைஞர்கள், இளம் பெண்கள் பாசறைகளின் செயலாளர் டாக்டர். வெங்கடேஷ் கூறியுள்ளார்.சசிகலாவி்ன் அண்ணன் மகனான இவர் தான் இப்போது போயஸ் தோட்டத்தில் கொடி கட்டிப் பறந்து வருகிறார்.திண்டுக்கல்லில் நடந்த அதிமுக பாசறை