டெல்லி: வழக்கமாக அரிசியை ஏற்றுமதி செய்தே பழக்கப்பட்ட இந்தியா கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு, முதல் முறையாக அரிசியை இறக்குமதி செய்யவுள்ளது.தொடர் வறட்சி, வெள்ளம் இயற்கையின் சீற்றத்தால் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டு பற்றாக்குறையை ஏற்படுத்தி விட்டதே இதற்குக் காரணம் என மத்திய அரசு கூறுகிறது.இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், 2009, அக்டோபர் மாதம் முதல்
சென்னை: தீபாவளி காலம் என்பதால் காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு என்று முன்னர் கூறப்பட்டு வந்தது. இப்போது தீபாவளி முடிந்தும் கூட காஸ் சிலிண்டர்கள் சப்ளையில் பெரும் தாமதம் நிலவுவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.கடந்த சில மாதங்களாகவே காஸ் சிலிண்டர்களுக்குப் பதிவு செய்தால் வருவதற்கு குறைந்தது 15 நாட்களாகிறது. இதுகுறித்து காஸ் டீலர்களிடம் கேட்டால், எங்களுக்கு சப்ளையே குறைவாகத்தான்
சென்னை: தமிழகத்தில் மின்வெட்டு அதிகரிக்கும் என அஞ்ச வேண்டாம் என்று மின்வாரியம் கூறுகிறது.மின்வெட்டு அதிகரிக்கும் போதெல்லாம் தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்றும், காற்று வீசவில்லை அதனால் கொஞ்சம மின் உற்பத்தி குறைந்துள்ளதாகவும் அரசு சப்பை கட்டு கட்டுவது வழக்கமே.தமிழகத்தில் 2,000 மெகாவாட் அளவுக்கு மின்சார பற்றாக்குறை நிலவி வருகிறது. இந் நிலையில் மத்திய, மாநில அரசுகளின் சில
சென்னை: தமிழகத்தில் கேஸ் சிலிண்டர்களுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புக் செய்தால் 10 முதல் 20 நாட்கள் கழித்து சிலிண்டரைத் தருவதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.நாடு முழுவதும் சமையல் எரிவாயு சப்ளையை இந்தியன் ஆயில் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ஆகிய 3 எண்ணை நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. இதில் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்குத்தான் அதிக
தாகா: ஜன நெருக்கடி மிகுந்த வங்கதேசம் மக்கள்தொகையை கட்டுப்படுத்த ஆணுறை உட்பட போதிய கருத்தடை சாதனங்கள் இல்லாமல் திணறி வருகிறது.தமிழகத்தை விட சற்றே அதிக பரப்பளவு கொண்ட குட்டி நாடான வங்கதேசத்தின் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் வரிசையில் 7வது இடத்தில் இருக்கிறது.கடந்த 2007ல் எடுக்கப்பட்ட கணக்கின்படி மக்கள்தொகை
காந்தி நகர்: இந்தியாவிடம் போர் விமானங்கள் போதிய அளவில் இல்லை. சீனாவுடன் ஒப்பிடும்போது அவர்களிடம் உள்ளதில் மூன்றில் ஒரு பங்கே நம்மிடம் உள்ளது என்று விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் பி.வி.நாயக் தெரிவித்துள்ளார்.காந்தி நகர் வந்த அவர் அங்குள்ள தென் மத்திய ஏர் கமாண்ட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது நாயக் கூறுகையில், நம்மிடம் தற்போது உள்ள போர்
வாஷிங்டன்: பின் லேடனின் அல் கொய்தா இயக்கம் முன்பு போல இல்லையாம். ஆட்கள் கிடைப்பது பற்றாக்குறையாகி விட்டதாம். மேலும், மேற்கத்திய நாடுகளில் தாக்குதல் நடத்தக் கூடிய அளவுக்கு திறமையான ஆட்கள் இல்லாமல் போய் விட்டார்கள் என்று அரசு மற்றும் தனியார் பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இன்று நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலின் 8வது ஆண்டு நினைவு தினம்.
டெல்லி: ராணுவத்திற்கு 11,387 அதிகாரிகள் பற்றாக்குறையாக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி நேற்று லோக்சபாவில் தெரிவித்தார்.இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், கடற்படைக்கு 1512 அதிகாரிகளும், விமானப்படையில் 1400 அதிகாரிகளும் பற்றாக்குறையாக உள்ளது.இருப்பினும் முப்படைகளிலும் அதிகாரிகளுக்குக் கீழ் உள்ள வீரர்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை எதுவும் இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் ராணுவத்தில்
டெல்லி: நாட்டின் நிதிப் பற்றாக்குறை 2.7 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது உண்மையல்ல. நிதிப் பற்றாக்குறையை குறைத்துக் காட்டி மக்களை ஏமாற்றியுள்ளனர் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.அக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில்,உலகப் பொருளாதார வீழ்ச்சி இந்திய பொருளாதாரத்தின் மீதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரத்தை மீளச்
சென்னை: தமிழகத்தில் பீர் கடும் தட்டுப்பாட்டில் இருப்பதால் தவித்து வரும் 'குடிமக்களின்' தாகத்தைத் தீர்ப்பதற்காக, தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் பீரை வெளிமாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.கோடை காலம் சுட்டெரிப்பதால் டாஸ்மாக் கடைகளில் பிற மது வகைகளை விட பீர்தான் பெருமளவில் விற்பனையாகிறது. விற்பனையாகும் அளவுக்கு சப்ளை இல்லாததால், பீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக