புவனேஸ்வர்: ஒரிசா மாநிலம் புசந்த்பூர் என்ற இடத்தில் பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், சென்னை- ஹவுரா மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கிழக்கு கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் இந்த நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று கோரி இந்தப் போராட்டம் நடந்தது.இந்தப் போராட்டம் காரணமாக சில ரயி்ல்கள் ரத்து செய்யப்பட்டன. புவனேஸ்வர் - விசாகப்பட்டனம் - புவனேஸ்வர்
நெல்லை: தொடர் மழையால் தேங்கி கிடக்கும் நீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் வைரஸ் காய்ச்சல் நெல்லை மாவட்டத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் பல இடங்களிலும் மழை நீர் தேங்கி நிற்கிறது. பல பகுதிகளில் கழிவு
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நகர்ந்து தற்போது லட்சத்தீவுப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் படிப்படியாக மழையின் அளவு குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கன்னியாகுமரி முனைப் பகுதியில் புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று உருவாகியது. இதனால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் உட்புறப்
செங்கோட்டை: அறிவிக்கப்படாத மற்றும் கூடுதல் நேர மின்தடையால் ஆலங்குளம், செங்கோட்டை மற்றும் பாவூர்சத்திரம் வட்டாரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மரம் அறுப்பு மில்கள் மற்றும் அரிசி ஆலைகளில் பணிகள் பெரிதும் பாதிககப்பட்டுள்ளன.தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட நேரம் குறிப்பிட்ட பகுதியில் சுழற்சி முறையில் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆலங்குளம் மற்றும் சுற்று வ்ட்டார பகுதிகளில் மாலை
கோவை: மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள நேரம் தவிர, கூடுதலாக பல நேரங்களில் மின் வெட்டு ஏற்பட்டு வருவதால் கோவையில் தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.இது குறித்து கொடிசியா சங்கத் தலைவர் இளங்கோ கூறுகையில்,கோவையில் ஒரு குறிப்பிட்ட நேரம் மின் தடை என்று மின்சார வாரியம் அறித்துள்ளது. ஆனால், மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள நேரம் தவிர,
சென்னை: தென் மாவட்டமான குமரியில் தொடங்கி, தலைநகர் சென்னை வரை எங்கு பார்த்தாலும் சிக்குன் குனியா நோயாளிகள் மருத்துமனைகளில் வரிசையில் நிற்கின்றனர்.மாவட்ட அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு இந்த நோய் தாக்கப்பட்டதால் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத் துறையே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சில மாதங்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் சிக்குன்
பிரஸ்ஸல்ஸ்: இடம் பெயர்ந்த தமிழ் மக்களை தொடர்ந்து முகாம்களிலேயே வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மனித உரிமை மீறல்களில் தொடர்ந்து இலங்கை ஈடுபட்டு வந்தால் ஐரோப்பிய யூனியனின் சிறப்பு வர்த்தக உரிமைச் சலுகையை இலங்கை இழக்க நேரிடும் என்று ஐரோப்பிய யூனியன் கடுமையாக எச்சரித்துள்ளது.இடம் பெயர்ந்தோர் முகாம்களில் முடக்கப்பட்டுள்ள தமிழர்களை அவரவர் ஊர்களுக்கு திருப்பி அனுப்புங்கள் என்று இலங்கையை
அக்டோபர் 10ம் தேதி உலக மனநிலை மருத்துவ தினமாகக் கொண்டாடப்படுகிறது. உலகில் 6.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் மிதமாக 5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மனநிலை பாதிப்பு ஏற்பட்டால் பேய், பிசாசு பிடித்து விட்டது என்று ஒதிக்கித் தள்ளும் நிலை இந்த விஞ்ஞான காலத்திலும் உள்ளது என்றால் மறுக்க முடியாது. ஒரு மனிதனுக்கு மனநிலை பாதிக்கக் காரணங்கள்
சிவகாசி: சீனாவிலிருந்து கடத்தப்பட்டு இந்தியாவுக்குள் கொண்டு வரப்படும் பட்டாசுகளால் சிவகாசியில் பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சிவகாசியில் தான் நாட்டிலேயே அதிக அளவிலான பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. ஆண்டுக்கு இங்கு ரூ. 3,000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் தயாராகின்றன.இது இந்தியாவின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 90 சதவீதம் ஆகும். இதில் 5 முதல் 10 சதவீத பட்டாசுகள் ஏற்றுமதி
கோவில்பட்டி: கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என கோரி தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.கோவில்பட்டியில் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வெளியூர் பஸ்கள் இயக்கப்படுகின்றன.நகரிலிருந்து 3 கிலோ மீட்டர்