பிரஸ்ஸல்ஸ்: ஐரோப்பிய யூனியன் அமைப்பின் முழு நேரத் தலைவராக பெல்ஜியம் பிரதமர் ஹெர்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெளியுறவுக் கொள்கைத் தலைவராக கேத்தரின் ஆஷடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.27 உறுப்பினர்களைக் கொண்ட யூனியன் கூட்டத்தில் ஒரு மனதாக ஹெர்மன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டிசம்பர் 1ம் தேதி தனது பொறுப்பை அவர் ஏற்கவுள்ளார்.62 வயதாகும் ஹெரமன், இளைஞராக இருந்தது முதல் தீவிர அரசியலில்
மும்பை: எனது மகன் ராகுல் பட் உண்மையான தேசபக்தியுடன், ஹெட்லியுடனான தனது தொடர்புகளை தானே வலியச் சென்று தெரிவித்ததற்காக இப்படித்தான் எங்களை நடத்துவதா என்று வேதனையுடன் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார் தயாரிப்பாளர் மகேஷ் பட்.மகேஷ் பட்டின் மகன் ராகுல் பட்டுக்கும், இந்தியாவுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டிய ஹெட்லிக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து தெரிய
டெல்லி: குளிர்கால கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று மக்களவை தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது.கரும்பு விலை நிர்ணய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாடி கட்சி எம்பி்க்கள் அவையின் மையத்தில் கூடி அமளி செய்தனர்.அவர்களுடன் பிற எதிர் கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டதால் அவையை சபாநாயகர் மீரா குமார் ஒத்திவைத்தார்.அதே போல மாநிலங்களவையும் அமளியால் ஒத்தி வைக்கப்பட்டது.ராகுல்
விஜயவாடா: நான் வருங்கால பிரதமர் அல்ல என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார்.விஜயவாடாவில் கல்லூரி விழாவில் பங்கேற்ற ராகுல், அங்கு மாணவர்களிடம் கலந்துரையாடினார்.அப்போது நாட்டின் வருங்கால பிரதமர் என்ற தொனியில் சில மாணவர்கள் அவரை சுட்டிக் காட்டிப் பேசியபோது இடைமறித்த ராகுல்,பிரதமராக யார் வேண்டுமானாலும் வரலாம். தயவுசெய்து என்னை எதிர்கால பிரதமராக நினைக்க வேண்டாம்.
சென்னை: ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் பயணம் செய்த விமானம் எரிபொருள் நிரப்புதவற்காக சென்னையில் இறக்கப்பட்டது. விமானம் புறப்படுவதற்கு நேரம் இருந்ததால் கெவின் ரூடின் மனைவி தெரேசா ரெய்ன் தி. நகருக்கு விஜயம் செய்து பட்டுச் சேலை வாங்கினார்.விடுமுறையைக் கழிப்பதற்காக ஆப்பிரிக்க நாட்டுக்கு மனைவியுடன் கிளம்பினார் ரூட். வரும் வழியில் எரிபொருள் நிரப்புவதற்காக அவரது விமானம் சென்னையில்
டெல்லி: பிரதமரின் பாதுகாப்பு கெடுபிடியால், பலியான நோயாளியின் மனைவிக்கு ரூ.2 லட்சம் நஷ்டஈடு வழங்கப்படவுள்ளது.சண்டிகரில் உள்ள மருத்துவக் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நேற்று வந்தார். அப்போது, அதே மருத்துவமனைக்கு வர்மா என்பவர் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் அழைத்து வரப்பட்டார். பாதுகாப்பு கெடுபிடி காரணமாக, வர்மாவுக்கு தாமதமாகவே சிகிச்சை கிடைத்தது. சிகிச்சை பலனின்றி
டேராடூன்: மத்திய தகவல் ஆணையத்தின் தலைவர் பதவிக்கு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடியை நியமிக்க வேண்டுமென யோகா குரு ராம்தேவ் மற்றும் சமூக போராளி அன்னா ஹசாரே ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தியுள்ளனர்.ஊழல் தடுப்பு முயற்சிகளுக்கு பெரிதும் உதவக்கூடிய தகவல் ஆணையத்தின் தலைமை பதவிக்கு துடிப்பும், நேர்மையும் கொண்ட அதிகாரியை நியமிக்க வேண்டும்
கான்பெரா: புகலிடம் கோரி வருவோரிடம் அதீத மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட்.சிறிய படகில் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர் 78 தமிழ் அகதிகள். இவர்கள் யாரும் படகிலிருந்து இறங்க மறுத்து வருவதால், தற்போது இவர்களை தங்களது கடல் பகுதிக்குள் வைத்துப் பராமரித்து வரும் இந்தோனேசிய அரசு, அவர்களை
டெல்லி: இன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 25வது நினைவு தினத்தையோட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல்காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.நினைவுதினத்தையொட்டி நாடு முழுவதும் தேசிய ஒருமைப்பாட்டு பேரணி, ரத்த தான முகாம்கள் உள்பட
சென்னை: இலங்கை சென்று வந்த எம்பிக்கள் குழு பிரதமரை சந்திக்கச் சென்றபோது விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உடன் அழைத்துச் செல்லப்படவில்லை.டி.ஆர்.பாலு தலைமையில் இலங்கை சென்று வந்த திமுக-காங்கிரஸ் எம்பிக்கள் குழு நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து அறிக்கை அளித்ததுஇந்தக் குழுவில் டி.ஆர்.பாலு, கனிமொழி, காங்கிரஸ் எம்பிக்கள் மற்றும் திருமாவளவனும் இடம் பெற்றதாக தகவல்கள் வந்தன.ஆனால்,