திருச்செந்தூர்: திருச்செந்தூரில் அதிமுக பொதுக்கூட்ட மேடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.அதிமுகவின் 38வது ஆண்டு விழாவையொட்டி நேற்றிரவு திருச்செந்தூர் வ.ஊ.சி. திடலில் அக் கட்சியின் பொதுக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.ஆர்.ரமேஷ் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.வழியில் அவரது கார் மீது சிலர் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினர். இதில் காரின் முன்பக்க
சிதம்பரம்: சிதம்பரம் அருகே பெட்ரோல் குண்டு வீசி பெரும் ரகளையில் ஈடுபட்ட 11 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். சிதம்பரம் அருகே உள்ள வடக்கு மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் முருகன். இவர் ஆயுத பூஜை தினத்தன்று கொள்ளிடம் ஆற்றில் தனது டிராக்டரைக் கழுவிக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு தனது பொக்லைனுடன் ஆச்சாள்புரத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் வந்தார்.
ஈரோடு: ஈரோட்டில் உள்ள தினமலர் நாளிதழ் அலுவலகத்தின் மீது சில விஷமிகள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.ஈரோடு எஸ்.கே.சி. சாலையில் தினமலர் அலுவலகம் உள்ளது. இன்று காலை அங்கு ஒரு மர்ம கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்கியது.இதுகுறித்து போலீஸாருக்குத் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் பெட்ரோல் குண்டு வீசியது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
நெல்லை: விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் மரணமடைந்ததாக இலங்கை ராணுவம் செய்தி வெளியிட்டதையடுத்து நெல்லையில் நீதிமன்றம் மற்றும் பிஎஸ்என்எல் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதையடுத்து அங்கு பெரும் பதட்டம் நிலவி வருகிறது.விடுதலை புலிகள் இயக்க தலைவர் படுகொலை செய்யப்பட்டதாக இலங்கை ராணுவம் வெளியிட்டது. இதையடுத்து உலகம் முழுவதும் தமிழர்கள் கொந்தளித்துள்ளனர்.இந்நிலையில் தமிழகத்தில் அசம்பாவிதம்
சென்னை: தமிழ்நாடு மாநில காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினர் பிரகாஷ் வீட்டில் குண்டுவீசயவர்களில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.தமிழ்நாடு மாநில காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினராக இருப்பவர் பிரகாஷ். நேற்று முன்தினம் இரவு அவர் தனது வீ்ட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று அவர் வீட்டில் பெட்ரோல்
சென்னை: தமிழ்நாடு மாநில் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் வீட்டில் நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தலைமறைவானது. இதில் அவரது குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.தமிழ்நாடு மாநில காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினராக இருப்பவர் பிரகாஷ். இவரது வீடு சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஜெகநாதபுரத்தில் இருக்கிறது. நேற்று இரவு அவர் தனது
தக்கலை: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நடந்த விநாயகர் ஊர்வலத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
துறையூர்: துறையூரில் கொள்ளையடிக்க முயன்ற திருடர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை:அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் கேபிள் டிவி அலுவலகத்தின் மீது அடையாளம் தெரியாத சிலர் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.