மும்பை: 20 ஆண்டு காலத்தை கிரிக்கெட்டில் கழித்துள்ள சச்சின் டெண்டுல்கரை, சீண்டியுள்ளது சிவசேனா. கிரிக்கெட் வாழ்க்கையில் 20 ஆண்டுகளைப் பூர்த்தி செய்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சச்சின், முதலில் நான் ஒரு இந்தியன், பிறகுதான் மராத்தி.மும்பை இந்தியாவுக்குச் சொந்தமானது. அப்படித்தான் நான் பார்க்கிறேன். நான் ஒரு மகாராஷ்டிரக்காரன், அதற்காக பெருமைப்படுகிறேன். ஆனால் முதலில் நான் ஒரு
டெல்லி: செல்போன் பேசியபடி பைக், கார் ஓட்டினால் 6 மாத சிறை ரூ.2,000 அபராதம் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மேலும் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டும்போது விபத்து ஏற்பட்டால் 6 மாத காலம் டிரைவிங் லைசென்சும் ரத்து செய்யப்படவுள்ளது.செல்போனால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது.இது தவிர
திருச்செந்தூர்: முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.திருச்செந்தூர் வ.உ.சி. திடலில் கடந்த 20ம் தேதி அதிமுக பொதுக் கூட்டம் நடந்தது. அதில் அக் கட்சியின் முன்னாள் எம்பியும் நடிகருமான எஸ்.எஸ்.சந்திரனும் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் சண்முகநாதனும் மிக ஆபாசமாகப் பேசினர். இதுகுறித்து திருச்செந்தூர் நகர திமுக செயலாளர் கோபால் போலீசில்
புதுக்கோட்டை: இலங்கை சென்ற திருமாவளவனை பிரபாகரனுடன் இருந்திருந்தால் செத்திருப்பீர்கள் என்று மிரட்டியிருக்கிறார் ராஜபக்சே. இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான் நாடுகள் உதவவில்லையென்றால் கொஞ்சம் யோசித்துப் பார் ராஜபக்சே; நீ செத்திருப்பாய் என்று ஆவேசமாக கூறியுள்ளார் இயக்குநர் சீமான்.தமிழர் இயக்கம் ஆரம்பித்து தமிழகமெங்கும் கலந்தாய்வு கூட்டம், பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார் சீமான். புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமம் தீலீபன் திடலில்
மும்பை/டெல்லி: விமானிகளின் ஸ்டிரைக் தொடர்ந்து நீடித்து வருவதால், தற்காலிகமாக 15 நாட்களுக்கு சேவையை நிறுத்தலாமா என்ற யோசனையில் ஏர் இந்தியா இருப்பதாக தெரிகிறது.ஆனால் அப்படிப்பட்ட திட்டம் ஏதும் இல்லை என்று ஏர் இந்தியா நிர்வாகம் மறுத்துள்ளது.ஏர் இந்தியா நிறுவனத்தின் எக்சிகியூட்டிவ் பைலட்டுகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏர் இந்தியா விமானங்கள் பல தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு
ஐ.நா.: இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயகே தனது நாட்டின் வீர பராக்கிரமம் குறித்து ஐ.நா. அவையில் பேசியபோது, அதைக் கேட்க அங்கு ஒரு சிலரே இருந்தனராம். பெரும்பாலான உறுப்பினர்கள் வெளியேறி விட்டனராம்.ஐ.நா. ஆண்டு சபைக் கூட்டத்தில் இலங்கை பிரதமர் விக்கிரமநாயகேவும், இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவும் கலந்து கொண்டனர். ஐ.நா. கூட்டத்தில் விக்கிரநாயகே 25ம் தேதி
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் உதவும் நோக்கத்தில் இரட்டை குழந்தை முறை அறிமுகம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் எதியூரப்பா தெரிவித்துள்ளார்.பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனா பல ஆண்டுகளாக ஒற்றை குழந்தை திட்டத்தை பயன்படுத்தி வருகிறது. இதன்படி ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை தான். இரண்டு குழந்தைகளை கொண்ட குடும்பம் அரசின் எந்த
சென்னை: தமிழக இளைஞர் காங்கிரஸார் கடுமையாகவும், தீவிரமாகவும் பாடுபட்டால் ஐந்தே ஆண்டுகளில் தமிழகத்தில் காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியும் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.தமிழகத்தில் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி நேற்று மாலை சென்னைக்கு வந்தார். நான்கு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் மாணவர்களிடையே பேசினார். பின்னர் காமராசர் அரங்கத்தி்ல நடந்த கூட்டத்தில்
திருச்சி: ரஜினி ரசிகர்களுக்கு அரசியல் தளம் அமையவில்லை. ரஜினி ரசிகர்கள், அரசியல் அனாதைகளாக உள்ளனர். அவர்களைத் தேடிப் பிடித்து, இளைஞர் காங்கிரசில் உறுப்பினர்களாகச் சேருங்கள் என்று கார்த்திக் சிதம்பரம் பேசினார். திருச்சியில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டு பேசுகையில், தமிழகத்தில் உள்ள
டெல்லி: சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கருப்புப் பணம் குறித்த விவரங்களை பெறுவது தொடர்பாக மத்திய அரசு, டிசம்பர் மாதம், சுவிட்சர்லாந்து நாட்டு அரசுடன் முதல் சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.இதுகுறித்து நிதியமைச்சக தரப்பில் கூறுகையில், இந்திய அதிகாரிகள் டிசம்பர் மாதம் சுவிட்சர்லாந்து நாட்டு அதிகாரிகளுடன் பேசவுள்ளனர். இது முதல் சுற்றுப் பேச்சுதான். கருப்புப் பணம் குறித்த