மலையாள நடிகர், நடிகையர் தங்களது சம்பளத்தைக் குறைத்தது போல தமிழ் நடிகர், நடிகையரும் குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சிலர் சங்கத்தை வலியுறுத்தி வருகிறார்களாம்.சமீபத்தில் மலையாளத் திரையுலகினர் சில முக்கிய முடிவுகளை எடுத்தனர். தயாரிப்புச் செலவுகளைக் குறைக்க தயாரிப்பாளர் சங்கம் சில முக்கிய முடிவுகளை எடுத்தது.அதன்படி பெரிய சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்களுக்கான பட்ஜெட்டை ரூ. 3
தமிழ்தான் தனக்கு தேசிய விருது பெற்றுத் தந்தது, அடையாளம் கொடுத்தது என்பதை மறந்து விட்டு மலையாளத்தையும், தெலுங்கையும் பாராட்டி, தாலாட்டி வருகிறாராம் பிரியாமணி.பெங்களூரிலிருந்து பாரதிராஜாவால் தமிழுக்குக் கொண்டு வரப்பட்டவர் பிரியாமணி. முதல் படம் போணியாகவில்லை. இதனால் ராசியில்லாத நாயகிகள் வரிசையில் சேர்க்கப்பட்டார் பிரியாமணி.ஆனால் அமீரின் பருத்தி வீரன் பிரியாமணிக்கு பெயர் பெற்றுத் தந்தது. கூடவே சிறந்த நடிகைக்கான
விட்டால் விஜய் தனது 60 படத்துக்கும் இப்போதே இயக்குநரைப் பிடித்துப் போட்டுவிடுவார் போலிருக்கிறது. அவது 50 வது படம் எஸ்பி ராஜ்குமார், 51வது படம் ஜெயம் ராஜா என லைன் அப் பக்காவாக இருக்க, நடுவில் லிங்குசாமி, ரமணா, பேரரசு, செல்வராகவன் என இன்னும் சில இயக்குநர்களிடம் நாம சேர்ந்து படம் பண்ணியே ஆகணும் என்று அடம்
முன்னணி மலையாள நடிகை நவ்யா நாயருக்கு வரும் ஜனவரி மாதம் திருமணம் நடக்கிறது. மணமகன் பெயர் சந்தோஷ் மேனன், மும்பையில் தனியார் நிறுவன உயரதிகாரியாக உள்ளார். தமிழில் அழகிய தீயே படத்தில் அறிமுகமானவர் நவ்யா நாயர். கேரளாவைச் சேர்ந்தவர். தமிழிலும் மலையாளத்திலும் பல படங்களில் நடித்தவருக்கு, இப்போது தமிழில் கைவசம் பெரிதாக வாய்ப்புகள் இல்லை. தற்போது
கிட்டத்தட்ட ரூ. 150 கோடி நஷ்டத்தில் செயல்படும் மலையாளத் திரையுலகைக் காப்பாற்றுவதற்காக தங்களது சம்பளத்தைக் கணிசமாக குறைத்துக் கொள்வதாக மலையாள திரையுலக நடிகர் நடிகைகள் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக மலையாள நடிகர் சங்கமான அம்மாவுக்கும், தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே நடந்த கூட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டது. இருப்பினும், எவ்வளவு சம்பளத்தைக் குறைப்பது என்பது இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவில்லை.இக்கூட்டத்தில், நடிகர் சங்கம் சார்பில்
ராதாவின் மகள் கார்த்திகா, மலையாளப் படம் ஒன்றில் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.மகர மஞ்சு என்ற பெயரில் உருவாகும் இப்படம் பிரபல மலையாள ஓவியர் ராஜா ரவி வர்மா குறித்த கதையாகும்.இந்தப் படத்தை மலையாளத்தில் உருவாக்கி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் டப் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.அடுத்த வாரம் கொச்சியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. லெனின் ராஜேந்திரன் படத்தை
மலையாள சினிமா தயாரிப்பாளர்கள் செலவுக் குறைப்பு நடவடிக்கைளில் குதித்துள்ளனர். இதுதொடர்பான முடிவு மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு மலையாளத் திரையுலகம் ரூ. 150 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாம். அதிகரித்த செலவுகள், படங்கள் ஓடாததால் ஏற்பட்ட நஷ்டம் ஆகியவையால் ஏற்பட்ட நஷ்டம் இது.இதையடுத்து மலையாளத் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டப்பட்டு அதில் செலவுக் குறைப்பு
மீண்டும் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன். அந்தப் படம் மலையாளத்தில் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்.சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் மனம் திறந்து கமல்ஹாசனை மலையாளத்திற்கு அழைத்துள்ளார் மோகன்லால்.சமீபத்தில் கமல்ஹாசன், மோகன்லால் இணைந்து நடித்த உன்னைப் போல் ஒருவன் படம் பிரமாண்ட வெற்றியுடன் சக்கை போடு போட்டு வருகிறது. இதில்
மலையாள நடிகை கீது மோகன்தாஸ் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.பொம்முக்குட்டி அம்மாவுக்குப் படத்தில் குட்டிப் பெண்ணாக வந்தவர் கீது மோகன்தாஸ். கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான நள தமயந்தி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.தற்போது தமிழில் சுத்தமாக ஒரு படமும் இல்லை கீதுவுக்கு. ஆனால் மலையாளத்தில் அவ்வப்போது தலை காட்டிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இயக்குநராக புது அவதாரம் எடுத்துள்ளார்
தமிழ்த் திரையுலகில் உள்ள இயக்குநர்கள் திறமையற்றவர்கள். நடிகைகளை வைத்துப் படம் எடுக்கத் தெரியாதவர்கள். மலையாளத் திரையுலகைச் சேர்ந்தவர்கள் தமிழில் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார் பத்மப்ரியா.காணாக் கண்மனி என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார் பத்மப்ரியா. இந்தப் படம் குறித்து திருவனந்தபுரத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது தனது படத்தைப் பற்றி பிரஸ்தாபிக்காமல் தமிழ்த் திரையுலகினரின் திறமைகள் குறித்துப் புட்டுப்