சென்னை முதல்வர் கருணாநிதியை நடிகை சோனா இன்று அவரது இல்லத்தில் சந்தித்து நீலகிரி மாவட்ட வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ. 5 லட்சம் நிதியுதவியை அளித்தார்.குசேலன் மூலம் பிரபலமானவர் நடிகை சோனா. கதீட்ரல் சாலையில் ஒரு அழகுசாதன விற்பனைக் கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.ஆங்கிலோ இந்தியப் பெண்ணான சோனா சமீபத்தில் ஆஸ்திரேலியா
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு காரணமாக வீடுகளை இழந்த 1,869 குடும்பங்களுக்கு தற்காலிக குடியிருப்புகள் 15 நாட்களுக்குள் கட்டித் தரப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு ஏராளமான வீடுகள் புதையுண்டன. சுமார் 53 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந் நிலையில் மழைச்
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுவரை ரூ. 20 லட்சம் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரால், எதை வேண்டுமானாலும் எழுதலாம் - எப்படி வேண்டுமானாலும் படம் போடலாம் - யாரை வேண்டுமானாலும் அவர்களுக்குரிய மானம், மரியாதைக்கு
ஹைதராபாத்: ஒருநாள் நான் ஆந்திர முதல்வராவது உறுதி. அதை யாராலும் தடுக்க முடியாது என்று மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி மறைவுக்கு பிறகு, அவரின் மகனும், எம்.பியுமான ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக முயனறார். ஆனால் காங்கிரஸ் மேலிடம், அதை நிராகரித்து ரோசையாவை முதல்வராக நியமித்தது.
பெங்களூர்: ரெட்டி சகோதரர்கள் விதித்த அடுத்த நிபந்தனையையும் கர்நாடக முதல்வர் எதியூரப்பா நிறைவேற்றிவிட்டார்.அவர்கள் உத்தரவிட்டது போல பெல்லாரி மாவட்ட கலெக்டர், எஸ்பி ஆகியோருக்கு மீண்டும் அதே பதவி வழங்கப்பட்டு உள்ளது.ரெட்டிகளின் உத்தரவுகளுக்குப் பணிவதாக பாஜக டெல்லி தலைவர்கள் தலையை ஆட்டியதையடுத்து எதியூரப்பாவை முதல்வர் பதவியில் நீடிக்க அனுமதிப்பதாக ரெட்டிகள் அறிவித்தனர்.இதையடுத்து முதலில் எதியூரப்பாவுக்கு மிக நெருக்கமான அமைச்சர்
சென்னை: தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களின் நிலை குறி்த்த ஆய்வறிக்கையை இன்று முதல்வர் கருணாநிதியிடம் அமைமைச்சர்கள் தாக்கல் செய்தனர்.இந்த அறி்க்கை குறித்து வரும் 12ம் தேதி கருணாநிதி ஆய்வு மேற்கொள்கிறார்.தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்காக ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்ய முதல்வர் கருணாநிதி தலைமையில் கடந்த 2ம் தேதி நடந்த
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் (நீதிபதி பி.டி. தினகரன் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படும்) நிலத்தை மீட்க இன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்தப் போவதாக அறிவித்திருக்கும் போராட்டம் தேவையற்ற வன்முறைக்கு வழி வகுக்கும் என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.மேலும் இந்த விஷயத்தில் அரசு அவசர அவசரமாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும், சட்ட ரீதியாக முறையாகத்தான் செயல்பட முடியும்
மும்பை: பெரும் இழுபறிக்குப் பின்னர் ஒரு வழியாக இன்று மகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. முதல்வராக அசோக் சவான் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.முதல்வராக மீண்டும் அசோக் சவானே பொறுப்பேற்பார் என காங்கிரஸ் அறிவித்தது. ஆனால் முக்கிய அமைச்சர் பதவிகளைப் பங்கிட்டுக்
ஆங்கிலப் புத்தாண்டுக்கு இணையாக தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்! - சினிமா இயக்குநர்கள் வேண்டுகோள்ஆங்கிலப் புத்தாண்டுக்கு இணையாக தமிழ்ப் புத்தாண்டையும் சர்வதேசத் தரத்துடன் கொண்டாட வேண்டும் என தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் முதல்வர் கருணாநிதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் முதல்வர் கருணாநிதியை, சங்கத்தின் பொதுச்செயலாளர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, துணைத் தலைவர் விக்ரமன், இணைச்செயலாளர்கள்
சென்னை: மெரீனா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடக் கூடாது. அதற்குப் பதிலாக மாற்று ஏற்பாடு செய்து தரப்படும் என சென்னை மேயர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.திருவல்லிக்கேணியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மெரினா கடற்கரை மணற்பரப்பு உலகிலேயே 2-வது அதிக மணற்பரப்பை கொண்ட கடற்கரையாகும். கடற்கரையை அழகு படுத்தும் பணிகள் சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு