ஹைதராபாத்: சத்யம் நிறுவன முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜுவின் ஜாமீன் மனுவை ஹைதராபாத் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன மோசடி தொடர்பாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராஜு. இந்த நிலையில், அவர் 4வது கூடுதல் பெருநகர செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த ஈஸ்வர் ராவ், ராஜு மீதான
ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் ராமலிங்கராஜுவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் மருத்துவ அறிவியல் கழக (நிம்ஸ்) மருத்துவமனைக்கு நேற்று மாலை நாலே முக்கால் மணியளவில் கொண்டு வரப்பட்டார் ராஜு. பின்னர் இரவு எட்டு மணிக்கு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவர்
டெல்லி: ரூ.7800 கோடி ரூபாய் மோசடி செய்து சிறையில் உள்ள சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு மற்றும் அவரது தம்பி ராம ராஜு ஆகியோரது குடும்பத்தினருக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி சொத்துக்களை அமலாக்கப் பிரவினர் ஜப்தி செய்துவிட்டனர். இந்தியாவில் இவ்வளவு சொத்துக்களை ஒரே நேரத்தில் ஜப்திக்குக் கொண்டுவரப்படுவது இதுவே முதல்முறை. ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகம்,
ஹைதராபாத்: சத்யம் நிறுவன்தின் நிறுவனர் ராமலிங்க ராஜு மற்றும் மேலும் இருவருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படவுள்ளது. இதற்கான அனுமதியை ஹைதராபாத் கோர்ட் அளித்துள்ளது.இதற்கான அனுமதி கோரி மார்ச் 24ம் தேதி மனு செய்தது சிபிஐ. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இன்று தடயவியல் சோதனையை மேற்கொள்ள அனுமதி அளித்தது.அதன்படி ராமலிங்க ராஜு, தம்பி ராமராஜு, சத்யம்
ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்தின் பெயர் மஹிந்திரா சத்யம் என மாற்றப்பட்டுள்ளது. வர்த்தகத்தை சரியான முறையில், புதிய வேகத்துடன் எடுத்துச் செல்லவே இந்தப் பெயர் மாற்றம் என அறிவித்துள்ளது மஹிந்திரா நிறுவனம். இனி மஹிந்திரா நிறுவன அடையாளச் சின்னமே (லோகோ - logo) சத்யத்துக்கும் பயன்படுத்தப்படும். ராமலிங்க ராஜுவால் நிறுவப்பட்ட சத்யம் நிறுவனம், மோசடிப் புகார் மற்றும் நேர்மையின்மைக்காக
ஹைதராபாத்: பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜுவின் சிறைக்காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். ராமலிங்க ராஜு, அவரது சகோதரர் ராம ராஜு மற்றும் ஆறு முக்கிய முன்னாள் சத்யம் அதிகாரிகள் இன்று 15-வது மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது நீதிமன்றக் காவலை மேலும்
ஹைதராபாத்: கடந்த 2001-2009-ல் மட்டும் சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜுவும் அவரது குடும்பத்தினரும் 'புத்திசாலித்தனமாக சுருட்டிய' பணம் ரூ.715 கோடிகள் என தகவல் வெளியிட்டுள்ளது சிபிஐ. முதலீட்டாளர்களை புத்திசாலித்தனமாக ஏமாற்றி முடிந்த வரை இந்தக் குடும்பம் பணத்தைச் சுருட்டியுள்ளது என சிபிஐ ஆதாரங்களுடன் தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. இந்த ரூ.715 கோடியில் ராமலிங்க ராஜுவுக்கு ரூ.27.91 கோடியும்,
ஹைதராபாத்: சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு மீது செவ்வாய்க்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ. பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வந்த ராமலிங்க ராஜு மீது பல்வேறு பிரிவுகள் குற்றம் சுமத்தப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் செக்ஷன் 427ன்படி அவருக்கு ஆயுள் தண்டனை கூட
ஹைதராபாத்: சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு, அவரது தம்பி ராமராஜு, முன்னாள் சிஎப்ஓ சீனிவாஸ் வாட்லாமணி ஆகியோரை மேலும் இரண்டு நாள் தங்கள் கஸ்டடியில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ.7800 கோடி மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இந்த மூவரையும் மார்ச் 10-ம் தேதி முதல் 17-ம் தேதிவரை தங்கள் பொறுப்பில் எடுத்து
ஹைதராபாத்: சத்யம் மோசடி வழக்கில் சிக்கி கைதாகி சிறையில் இருக்கும் முன்னாள் தலைவர் ராமலிங்கராஜு, அவரது சகோதரர் ராமராஜு உள்ளிட்டோரை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு ஹைதராபாத் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.ராஜு சகோதரர்கள், முன்னாள் தலைமை நிதி அதிகாரி வாட்லாமணி ஸ்ரீனிவாஸ் மற்றும் சத்யம் நிறுவனத்தின் கணக்குகளை கண்துடைப்பு தணிக்கை செய்து மோசடிக்கு உடந்தையாக