டெல்லி: குளிர்கால கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று மக்களவை தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது.கரும்பு விலை நிர்ணய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாடி கட்சி எம்பி்க்கள் அவையின் மையத்தில் கூடி அமளி செய்தனர்.அவர்களுடன் பிற எதிர் கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டதால் அவையை சபாநாயகர் மீரா குமார் ஒத்திவைத்தார்.அதே போல மாநிலங்களவையும் அமளியால் ஒத்தி வைக்கப்பட்டது.ராகுல்
விஜயவாடா: நான் வருங்கால பிரதமர் அல்ல என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார்.விஜயவாடாவில் கல்லூரி விழாவில் பங்கேற்ற ராகுல், அங்கு மாணவர்களிடம் கலந்துரையாடினார்.அப்போது நாட்டின் வருங்கால பிரதமர் என்ற தொனியில் சில மாணவர்கள் அவரை சுட்டிக் காட்டிப் பேசியபோது இடைமறித்த ராகுல்,பிரதமராக யார் வேண்டுமானாலும் வரலாம். தயவுசெய்து என்னை எதிர்கால பிரதமராக நினைக்க வேண்டாம்.
சென்னை: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்துள்ளதாகக் கூறப்படும் ஊழல் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் கிளப்ப அதிமுக, பாஜக, இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளன.நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதையொட்டி நாடாளுமன்றத்தில் அதிமுகவின் செயல்பாடுகள் குறித்து தீர்மானிப்பதற்காக அக்கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் ஜெயலலிதா தலைமையில் நடந்தது.இக்கூட்டத்தில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு, முல்லைப் பெரியாறு விவகாரம், இலங்கைப்
டெல்லி: பல்வேறு பரபரப்பான பிரச்சனைகளுக்கு மத்தியில், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.கரும்புக்கு விலை நிர்ணயிப்பது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டம் தொடர்பாக எதிர்க் கட்சிகள் பிரச்சனை செய்து கூச்சல், குழப்பம் ஏற்படுத்தியதால் மக்களவையை சபாநாயகர் மீரா குமார் 12 மணி வரை ஒத்தித்தார்.ஆனால், மீண்டும் அவை மீண்டும் கூடிய போதும் கூச்சல்
டெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.3 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்று எதி்ர்க் கட்சிகளான பாஜகவும், இடதுசாரிகளும் மண்ணைக் கவ்வியுள்ள சூழலில் இந்தக் கூட்டத் தொடர் ஆரம்பிக்கிறது.இந்தியாவை தாக்க அமெரிக்க தீவிரவாதியின் சதித் திட்டம் குறித்த புதுப்புதுத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த விவகாரத்தை எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத்தில் கிளப்பவுள்ளன.மேலும்
திருப்பதி: அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ராகுல்காந்தி நாளை (18ம் தேதி) மதியம் 2.30 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருப்பதி வருகிறார். விமானம் ரேணிகுண்டா விமான நிலையத்தில் தரை இறங்குகிறது. அங்கிருந்து கார் மூலம் திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்துக்குச் செல்வும் ராகுல்,
சென்னை: ஈரோடு மாவட்டம் பள்ளிக்கரணை பஞ்சாயத்து தலைவருக்கு எதிராக திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மற்ற பகுதிகளுக்கும் தொடருமேயானால், சென்னை கோட்டைக்கும் அது கொண்டு வரப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரித்துள்ளார்.நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் பிறந்த நாள் விழா சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது. அதில் பேசிய இளங்கோவன்,காங்கிரஸ், திமுக
சென்னை: பாஜகவிலிருந்து வருத்தத்தோடு விலகுகிறேன். அதே நேரத்தில் காங்கிரஸில் மகிழ்ச்சியோடு இணைகிறேன் என்றார் முன்னாள் மத்திய இணையமைச்சர் திருநாவுக்கரசர்.டெல்லியில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர் முதன்முறையாக தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார்.அவரை நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் காங்கிரசார் அவரை பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.காங்கிரஸ்
சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைப்போம் என்று கூறுவது முடிவில்லாத 'விக்ரமாதித்தன் கதை' போல ஒரு தொடர் கதையாகவே இருக்கிறது. இந்த கதைக்கு ஒரு புதிய திருப்பம் வந்திருக்கிறது. அதுதான் ராகுல் காந்தி என்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.தமிழக காங்கிரஸ் சிறப்பு உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் சத்தியமூர்த்தி பவனில் தொடங்கப்பட்டது. அதில் இளங்கோவன் பேசுகையி்ல்,தமிழகத்தில்
டெல்லி: கேரளா, மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் காங்கிரஸ், மற்றும் கூட்டணிக் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் பெறும் வெற்றி பெற்றுள்ளன. கேரளம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேச, அஸ்ஸாம், சட்டீஸ்கர், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் 31 சட்டசபை தொகுதிகளுக்கும் உத்தரப் பிரதேசத்தில் பெரோசாபாத் மக்களவைத் தொகுதிக்கும் கடந்த 7ம்