சென்னை: மாத்தையாவின் துரோகத்தைவிட, கருணாவின் துரோகத்தைவிட, ராஜபக்சேயின் கொலை பாதகத்தைவிட, அவர்களுக்காக வக்காலத்து வாங்குகின்ற முதல்வர் கருணாநிதி செய்யும் துரோகம் மிகக் கொடுமையானது. இதனால் தமிழினம் அவரை ஒருபோதும் மன்னிக்காது என்று வைகோ கூறியுள்ளார்.அரசியல் கண்ணோட்டம் இல்லாமல், அவசரப்பட்டு பிரபாகரன் எடுத்த முடிவுகளால் ஏற்பட்டுள்ளதே இலங்கையில் இன்றைய விளைவுகள் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார்.இதற்கு பதிலளித்து வைகோ
ரணில் சொன்னதை இவர் எழுதுகிறார்...ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவு கொடுக்காததால்தான், இந்த அழிவு நேர்ந்தது என்கிறார். ரணில் என்ன தமிழர்களுக்கு விடியல் ஏற்படுத்தப் பாடுபடுகிறவரா? ஜப்பானில் நடந்த பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் வரவில்லை; பேச்சுவார்த்தைக்கு வராமல் புலிகள் காலத்தை இழுத்தடித்தார்கள்; தாங்களாகவே விலகிக் கொண்டார்கள் என்று ரணில் சொன்னதை இவர் எழுதுகிறார்.ரணில் விக்கிரமசிங்கேவினுடைய உள்நோக்கம் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துவது
மதுரை: விடுதலைப் புலிகள் தொடர்பாக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்களுக்குக் கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் சில பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விடுதலைப் புலிகள் இயக்கம் அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படவில்லை. அதனால்தான் இன்று நாடு நாடாக இலங்கைத் தமிழர்கள் அலையும் நிலை ஏற்பட்டு விட்டது என்று முதல்வர் கருணாநிதி, யாருக்குத் தெரியும் இந்த மெளன வலி என்ற
கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், 1000 ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ளது இலங்கை மத்திய வங்கி. இதில் ராஜபக்சே மற்றும் ராணுவத்தினர் படம் இடம் பெற்றுளளது.நான்காவது ஈழப் போர் எனப்படும் ஈழத்தில் நடந்த இறுதிக் கட்ட போரில் பல்வேறு நாட்டு உதவியுடன் விடுதலைப் புலிகளை வீழ்த்தியது இலங்கை அரசு.இதைப் பாராட்டும் வகையிலும்,
சென்னை: விடுதலைப் புலிகள் அரசியல் கண்ணோட்டம் இல்லாமல், அவசரப்பட்டு எடுத்த முடிவுகளால் ஏற்பட்டுள்ளதே இன்றைய விளைவுகள். இதைக் கண்டு நாம் மெளனமாக அழுது கொண்டிருப்பது யார் காதில் விழப் போகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.இதுகுறித்து முதல்வர் கருணாநிதி முரசொலியில் எழுதியுள்ளதாவது:ஈழத் தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து 1956 முதல்; தி.மு.க. தென்னிந்தியாவில் இலங்கை பிரச்சினைக்காக எழுப்பிய
கொழும்பு: இலங்கையின் கிழக்குப் பகுதியில் இலங்கை அரசின் ஆதரவுடன் சிங்களர்கள் குடியமர்த்தப்படுவது தொடர்ந்தால், மீண்டும் ஒரு ஆயுதக் கிளர்ச்சிக்கு ஏற்படும் என்று எச்சரித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன்.கொழும்பில் இருந்து வெளியாகும் ‘சண்டை டைம்ஸ்' இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி: வன்னியில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் விஷயத்தை இலங்கை அரசு கையாளும் விதம்
கொழும்பு: போலிப் பிரசாரங்களை நம்ப வேண்டாம். வழக்கம் போல வரும் மாவீரர் நாள் உரையின்போது எங்களது அடுத்த கட்ட நகர்வு குறித்து அறிவிப்போம் என்று விடுதலைப் புலிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.மாவீரர் நாள் உரையை பொட்டு அம்மான் படிப்பார் என்று ஒரு தகவல் நிலவுகிறது. இதனால் புலம் பெயர்ந்த தமிழர்கள் மட்டுமல்லாமல், உலகத் தமிழர்கள் அனைவர் மத்தியிலும் ஒருவித
மதுரை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய மற்றும் கேரள அரசுகளை கண்டித்து மதுரையில் ம‌திமுக பொது‌ச் செயல‌ர் வைகோ இ‌ன்று உ‌ண்ணா‌விரத‌ம் இருந்தார்.மேலமா‌சி ‌வீ‌தி- வட‌க்குமா‌சி ‌வீ‌தி ச‌ந்‌தி‌ப்‌பி‌ல் காலை 9 ம‌ணி‌க்கு இ‌ந்த உ‌ண்ணா‌விரத‌த்தை ஐ‌ந்து மாவ‌ட்ட ‌விவசாய ச‌ங்க‌த் தலைவ‌ர் கே.எ‌ம்.அ‌ப்பா‌ஸ் தொட‌ங்‌கி வை‌‌‌த்தா‌ர். இதில் ஏராளமான ம‌திமுக தொ‌ண்ட‌ர்க‌ளும் பங்கேற்றனர்.மாலை‌யி‌ல் அ‌திமுக
சென்னை: மாவீரர் தினத்துக்கு இன்னும் 14 தினங்களே உள்ள நிலையில், அந்த தினத்தின் உரையை வாசிக்கப் போவது யார் என்ற பரபரப்பான கேள்வி உலகெங்கும் உள்ள தமிழர் மத்தியில் மட்டுமல்ல, இலங்கை விவகாரங்களை கவனித்து வரும் சர்வதேசத்தினர் மனதிலும் எழுந்துள்ளது.இந்த ஆண்டு மாவீரர் தினத்தில் பொட்டு அம்மான்தான் இந்த வரலாற்றுப் புகழ்மிக்க உரையை வாசிக்கப் போகிறார் என்று
கொழும்பு: சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழமே தமிழரின் விருப்பம் என்றும் அதற்கான போராட்டத்தை இனி முன்னெடுத்து தலைமையேற்று நடத்தும் பெரும் பொறுப்பும் கடமையும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களிடமும், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.தமிழீழ விடுதலைப் புலிகள் மின்னஞ்சல் மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்,