இந்திய தொலைக்காட்சியான தூர்தர்ஷன் துவக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதன் பொன் விழா ஆண்டையொட்டி (1959-2009), சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரதகான சபாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் ஜெகத்ரட்சகன்,தூர்தர்ஷன் சேனலை தொலைக்காட்சி வைத்திருக்கும் 91 சதவீத இந்தியர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். இதன் 30 சேனல்களை 35 கோடி மக்கள் பார்த்து வருகின்றனர்.தனியார்
சென்னை: அறிஞர் அண்ணாவின் நூற்றூண்டு விழாவையொட்டி திருச்சியில் மதிமுக நடத்தும் மாநாட்டு்க்கு வருமாறு மக்களுக்கு அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு விடுக்கும் விளம்பரத்தை சன் நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்டு வருவது மதிமுகவினரிடையே மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.மதிமுக ஸ்பான்சர் செய்யும் இந்த விளம்பரத்தில் பேசும் வைகோ, அண்ணாவின் பெருமைகளை எடுத்துச் சொல்லி அவரை நினைவுகூறும்
சென்னை: சென்னையில் எம்.ஆர்.எஃப். தலைமை அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற அதன் தொழிலாளர்களை தடியால் அடித்து விரட்டினர் போலீசார். இவர்களில் 60 பேர் கைது செய்யப்பட்டனர். அரக்கோணத்தில் உள்ள எம்ஆர்எப் டயர் உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கினர். ஆனால் அதனை எம்ஆர்எப் நிர்வாகம் அங்கீகரிக்கவில்லை. எனவே தங்கள் தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என
டெல்லி: அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் பல்வகைப் பயன்பாட்டுக்குரிய அடையாள அட்டை வழங்கப்படும் என்று இந்தத் திட்டத்தின் தலைவர் நந்தன் நிலேகனி தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் குடிமக்களுக்கு தனிப்பட்ட எண்ணுடன் கூடிய பல்நோக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக, தனி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய 'கேபினட்' அமைச்சர் அந்தஸ்துள்ள இந்த ஆணையத்தின் தலைவராக இன்போஸிஸ் இணை
சென்னை: ஜூனியர் விகடன் இதழில் தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தினரைப் பற்றியும் செய்திகள், புகைப்படங்கள் வெளியிடுவதற்குத் தடை விதிக்கக் கோரி மத்திய அமைச்சர் ராசா தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், இப்படி ஒரு வழக்கை தொடர்ந்தற்காக அவருக்கு ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் நடந்ததாக கூறப்பட்ட ஸ்பெக்ட்ரம்
டெல்லி: கடந்த 10வது ஐந்தாண்டுத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 194 புதிய வானொலி நிலையங்கள் அமைக்கும் பணி 11வது ஐந்தாண்டு திட்டத்திலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார்.மக்களவையில் கேள்வியொன்றுக்கு பதிலளித்த அவர்,தனியார் ஃஎப்எம் ரேடியோ ஒலிபரப்பு விரிவாக்கம் பகுதி 3 தொடர்பான இந்திய தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்து
சென்னை:சென்னை புழல் சிறையில் ஏற்பட்ட திடீர் மோதலில் பிரபல ரவுடியும் ஆயுள் கைதியுமான வெல்டிங் குமார் (45) வெட்டிக் கொல்லப்பட்டார். சிகரெட் பிடிப்பதில் ஏற்பட்ட ததராறு மோதலாக முற்றியதே இந்தப் படுகொலைக்குக் காரணம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆசியாவின் மிகப் பெரிய சிறையான புழல் சிறை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அங்கு ஏற்பட்ட முதல் பெரிய மோதலாக இந்தச்
சென்னை: "தமிழகம் உள்ளிட்ட உலகத் தமிழர்கள் எந்த சேனலைத் திருப்பினாலும், இணையத்தைத் திறந்தாலும் பிரபாகரன் மரணம் குறித்து, சிங்கள ஆதிக்க வெறியர்கள் தயாரித்துக் கொடுத்த செய்திகளே ஆக்கிரமித்திருக்க, அனைவரது கவனமும் வேடிக்கை மனப்பான்மையில் திளைத்திருக்க, வன்னியிலே ஓசையின்றி ஒரு பெரும் மனித அவலத்தை, இனப் படுகொலையை நடத்திக் கொண்டிருக்கிறது சிங்கள ராணுவம்", என புலம்பெயர் தமிழர் அமைப்புகள்
டெல்லி: தமிழகத்தில் ஸ்டார் நியூஸ் சேனல் நடத்திய 'எக்ஸிட் போல்' கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 25 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு 14 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன் விவரம்:திமுகவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 25 இடங்களைக் கைப்பற்றுவார்கள்.அதிமுகவுக்கு 9 இடங்களே கிடைக்கும். பாமக-மதிமுக இரண்டுக்கும் சேர்த்தே 3 இடங்களே
லண்டன்: இலங்கை நிலவரம், இந்திய மக்களவைத் தேர்தல் ஆகியவை குறித்து கூடுதல் செய்திகளை வழங்கும் வகையில் 10 நாட்களுக்கு தினமும் காலையிலும் சிறப்பு செய்திகளை ஒலிபரப்பவுள்ளது பிபிசி தமிழோசை வானொலி.இன்று முதல் வரும் 20ம் தேதி வரை இந்திய நேரப்படி தினமும் காலை 7 மணிக்கு 15 நிமிடம் இந்த சிறப்புச் செய்தித் தொகுப்பு ஒலிபரப்பாகும். இந்த