சென்னை மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான டபிள்யூ. ஆர்.வரதராஜன் கொலை செய்யப்பட்டிருப்பதாக மக்கள் தொலைக்காட்சி பரபரப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.ஆனால் இந்தக் கூற்றை காவல்துறை மறுத்துள்ளது.வில்லிவாக்கம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டபிள்யூ. ஆர்.வரதராஜன் தனது வீட்டிலிருந்து மாயமானார். 2 கடிதங்களை அவர் விட்டுச் சென்றிருந்தார்.அவரை
டெல்லி: இந்திய தொலைக்காட்சி செய்தி சேனல்களில் விளம்பர வர்த்தக வருவாய் அளவு இந்தாண்டில் ரூ.ஆயிரத்து 800 கோடியை தாண்டும் என கணிக்கப்படுகிறது.டெல்லியில் உள்ள சிஎம்எஸ் (சென்டர் ஃபார் மீடியா ஸ்டடீஸ்) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் தொலைக்காட்சி செய்தி சேனல்களில் விளம்பரத் தொழில் சந்தை மதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் 16
சென்னை: சென்னைத் தொலைக்காட்சியின் முதல் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய கருப்பசாமி காலமானார். அவருக்கு வயது 70.1966ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்ற அவர், தனது செய்தி ஆர்வம் காரணமாக பின்னர் இந்திய தகவல் பணியில் சேர்ந்தார்.டெல்லி அகில இந்திய வானொலியின் செய்திப் பிரிவில் செய்தி ஆசிரியர் பணியில் சேர்ந்தார். அதன் பிறகு சென்னை வானொலியில் பணியாற்றிய அவர்,
இந்திய தொலைக்காட்சியான தூர்தர்ஷன் துவக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதன் பொன் விழா ஆண்டையொட்டி (1959-2009), சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரதகான சபாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் ஜெகத்ரட்சகன்,தூர்தர்ஷன் சேனலை தொலைக்காட்சி வைத்திருக்கும் 91 சதவீத இந்தியர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். இதன் 30 சேனல்களை 35 கோடி மக்கள் பார்த்து வருகின்றனர்.தனியார்
சென்னை: அறிஞர் அண்ணாவின் நூற்றூண்டு விழாவையொட்டி திருச்சியில் மதிமுக நடத்தும் மாநாட்டு்க்கு வருமாறு மக்களுக்கு அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு விடுக்கும் விளம்பரத்தை சன் நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்டு வருவது மதிமுகவினரிடையே மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.மதிமுக ஸ்பான்சர் செய்யும் இந்த விளம்பரத்தில் பேசும் வைகோ, அண்ணாவின் பெருமைகளை எடுத்துச் சொல்லி அவரை நினைவுகூறும்
சென்னை: சென்னையில் எம்.ஆர்.எஃப். தலைமை அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற அதன் தொழிலாளர்களை தடியால் அடித்து விரட்டினர் போலீசார். இவர்களில் 60 பேர் கைது செய்யப்பட்டனர். அரக்கோணத்தில் உள்ள எம்ஆர்எப் டயர் உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கினர். ஆனால் அதனை எம்ஆர்எப் நிர்வாகம் அங்கீகரிக்கவில்லை. எனவே தங்கள் தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என
டெல்லி: அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் பல்வகைப் பயன்பாட்டுக்குரிய அடையாள அட்டை வழங்கப்படும் என்று இந்தத் திட்டத்தின் தலைவர் நந்தன் நிலேகனி தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் குடிமக்களுக்கு தனிப்பட்ட எண்ணுடன் கூடிய பல்நோக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக, தனி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய 'கேபினட்' அமைச்சர் அந்தஸ்துள்ள இந்த ஆணையத்தின் தலைவராக இன்போஸிஸ் இணை
சென்னை: ஜூனியர் விகடன் இதழில் தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தினரைப் பற்றியும் செய்திகள், புகைப்படங்கள் வெளியிடுவதற்குத் தடை விதிக்கக் கோரி மத்திய அமைச்சர் ராசா தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், இப்படி ஒரு வழக்கை தொடர்ந்தற்காக அவருக்கு ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் நடந்ததாக கூறப்பட்ட ஸ்பெக்ட்ரம்
டெல்லி: கடந்த 10வது ஐந்தாண்டுத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 194 புதிய வானொலி நிலையங்கள் அமைக்கும் பணி 11வது ஐந்தாண்டு திட்டத்திலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார்.மக்களவையில் கேள்வியொன்றுக்கு பதிலளித்த அவர்,தனியார் ஃஎப்எம் ரேடியோ ஒலிபரப்பு விரிவாக்கம் பகுதி 3 தொடர்பான இந்திய தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்து
சென்னை:சென்னை புழல் சிறையில் ஏற்பட்ட திடீர் மோதலில் பிரபல ரவுடியும் ஆயுள் கைதியுமான வெல்டிங் குமார் (45) வெட்டிக் கொல்லப்பட்டார். சிகரெட் பிடிப்பதில் ஏற்பட்ட ததராறு மோதலாக முற்றியதே இந்தப் படுகொலைக்குக் காரணம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆசியாவின் மிகப் பெரிய சிறையான புழல் சிறை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அங்கு ஏற்பட்ட முதல் பெரிய மோதலாக இந்தச்