ஹைதராபாத்: மகிந்திரா சத்யம் நிறுவனம் 6500 பேரை திடீரென்று நீக்குவதாக அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இதுகுறித்து நேற்று முன்தினம் இமெயில் அனுப்பியுள்ளது சத்யம். சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜுவின் ரூ.7800 கோடி மோசடியால் பெரும் சரிவுக்குள்ளான சத்யம் இப்போது மகிந்திரா நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் 40 ஆயிரம் ஊழியர்கள் இருந்தனர். சத்யம் சரிவுக்குப் பின்னர்
ஹைதராபாத்: சத்யம் நிறுவன முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜுவின் ஜாமீன் மனுவை ஹைதராபாத் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன மோசடி தொடர்பாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராஜு. இந்த நிலையில், அவர் 4வது கூடுதல் பெருநகர செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த ஈஸ்வர் ராவ், ராஜு மீதான
மும்பை: சத்யம் நிறுவனத்தின் நிறுவனர் ராமலிங்க ராஜு செய்த ரூ.7800 கோடி மோசடியில் அந்நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகள் இருவருக்கும் தணிக்கை நிறுவனமான பிரைஸ்வாட்டர் ஹவுஸுக்கும் பெரும் பங்கிருப்பதாக இந்திய தணிக்கை நிறுவனம் (ICAI) அறிவித்துள்ளது. இந்திய தணிக்கையாளர்களின் தலைமை மையமான ஐசிஏஐவின் இயக்குநர் (ஒழுங்கு நடவடிக்கை) அகர்வால் இதுகுறித்துக் கூறியிருப்பதாவது: சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு செய்த
ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் ராமலிங்கராஜுவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் மருத்துவ அறிவியல் கழக (நிம்ஸ்) மருத்துவமனைக்கு நேற்று மாலை நாலே முக்கால் மணியளவில் கொண்டு வரப்பட்டார் ராஜு. பின்னர் இரவு எட்டு மணிக்கு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவர்
டெல்லி: ரூ.7800 கோடி ரூபாய் மோசடி செய்து சிறையில் உள்ள சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு மற்றும் அவரது தம்பி ராம ராஜு ஆகியோரது குடும்பத்தினருக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி சொத்துக்களை அமலாக்கப் பிரவினர் ஜப்தி செய்துவிட்டனர். இந்தியாவில் இவ்வளவு சொத்துக்களை ஒரே நேரத்தில் ஜப்திக்குக் கொண்டுவரப்படுவது இதுவே முதல்முறை. ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகம்,
ஹைதராபாத்: ரூ.7800 கோடி மோசடி வழக்கில் கைதாகி சஞ்சலகுடா சிறையில் உள்ள சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு இப்போது இரட்டை சதம் அடிக்கிறார்.ஆம்... சிறையில் தனது 200வது நாளை வெற்றிகரமாகக் கழித்த ராஜுவுக்கு, சிறைக் காவலர்கள் ராஜ உபசாரம் செய்து வருகின்றனர். தங்களது பல வேலைகளை சிறையிலிருந்தபடியே வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்களாம் ராஜுவும் அவர் சகோதரரும். சிறையில்
ஹைதராபாத்: சத்யம் நிறுவன்தின் நிறுவனர் ராமலிங்க ராஜு மற்றும் மேலும் இருவருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படவுள்ளது. இதற்கான அனுமதியை ஹைதராபாத் கோர்ட் அளித்துள்ளது.இதற்கான அனுமதி கோரி மார்ச் 24ம் தேதி மனு செய்தது சிபிஐ. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இன்று தடயவியல் சோதனையை மேற்கொள்ள அனுமதி அளித்தது.அதன்படி ராமலிங்க ராஜு, தம்பி ராமராஜு, சத்யம்
மும்பை: சத்யம் நிறுவனம், மஹிந்திரா சத்யம் ஆன பிறகு, அங்கு பெரிய அளவில் மாறுதல்கள் நிகழ்ந்து வருகின்றன. நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அலுவலராக சி.பி.குர்னானி நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைமை நிதி அலுவலராக துர்க்கா ஷங்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக மகிந்திரா குழுமம் அறிவித்துள்ளது. இருவரும் உடனடியாக பொறுப்பேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிய மோசடிகள் செய்து சத்யம் நிறுவனத்தை இந்த
டெல்லி: ரூ.12000 கோடி மதிப்பீட்டில் உருவாகவிருந்த ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்திலிருந்து மேடஸ் நிறுவனம் விலக்கப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி தெரிவித்துள்ளார். சத்யம் நிறுவனரும், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் சிக்கி சிறையில் இருப்பவருமான ராமலிங்க ராஜூவின் மகன்கள் நிர்வாகத்தில் உள்ளதுதான் மேடாஸ் நிறுவனம். சத்யம் நிறுவனம் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டதற்கு இந்த
ஹைதராபாத்: ராமலிங்க ராஜூவின் மோசடி ஊழல் காரணமாக சத்யம் நிறுவனம் படுவீழ்ச்சியை கண்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் சத்யம் நிறுவனத்தை, டெக் மஹிந்திரா ஏலத்தில் எடுத்தது. இதையடுத்து சத்யத்தில் சுமார் 10,000 ஊழியர்கள் வரை கூடுதலாக இருப்பதாகவும் அவர்களில் சுமார் 8,000 பேரை நீக்கப் போவதாகவும் டெக் மஹிந்திரா தெரிவித்தது.இதற்கு பதிலளிக்கும் விதமாக