சென்னை: தென் மேற்கு வங்கக் கடலில் தமிழகம்-இலங்கைக்கு இடையே ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் நீடித்து வருவதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக சென்னை, கள்ளக்குறிச்சி, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழையும், உத்திரமேரூர், பட்டுக்கோட்டை,
சிட்னி: இலங்கைத் தமிழர்கள் உள்ளடக்கிய அகதிகள் படகு ஒன்று ஆஸ்திரேலியக் கடலில் மூழ்கியது. இதில் 27 பேர் பலியாகியுள்ளதாக தெரிகிறது. 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.ஆஸ்தேரிலாயவின் வடமேற்கு கடற்பரப்பில் இன்று இப்படகு மூழ்கியது. மொத்தம் 40க்கும் மேற்பட்டோர் அதில் இருந்ததாக தெரிகிறது.ஆஸ்திரேலியாவை நோக்கி இந்தப் படகு வந்து கொண்டிருந்தது. இந்திப் பெருங்கடலில் காகஸ் தீவு அருகே இந்தப் படகு
விளாத்திகுளம்: விளாத்திகுளம் வேம்பர் கடற்கரை கிராமங்களில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை தயாரிக்கும் பணியும், கிராமங்களில் வழக்கமாக வசிப்பவர்களுக்கான அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் பணியும் இன்று துவங்கியது.இந்திய அரசு தேசிய மக்கள் தொகை பதிவேட்டை தயாரிக்க தீர்மானித்தது. நாட்டில் உள்ள ஒவ்வொரு தனி நபரை பற்றிய குறிப்பிட்ட புள்ளி விபரங்களுடன் 15 வயதும் அதற்கும்
மாலே: புவி வெப்பமயமாவதால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாலத் தீவில் கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.உலகில் கடல் மட்டத்துக்கு கீழ் உள்ள முக்கியமான தீவு மாலத்தீவு. புவி வெப்பமயமாதால் துருவங்களில் பனிப் பாறைகள் உருகி வருகின்றன. இதனால் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது.இதே நிலை தொடர்ந்தால் கடல் மட்டம்
ராமேஸ்வரம்: இலங்கை ராணுவத்தின் அட்டூழியம் தொடர்கிறது. நேற்று மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் சிலரை கடலில் இருந்து விரட்டியடித்துள்ளது.இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை தாக்கும் அவல நிலை தொடர்கிறது. இதை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்றும், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரியும் தமிழக மீனவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். ஆனால், எந்த பயனுமில்லை.இந்நிலையில் உண்ணாவிரத
சென்னை: சென்னை சாஸ்திரி நகர் அருகே கடல் வழியாக சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்ற கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.சென்னையில் ஓடும் அடையாறு நதி, சாஸ்திரி நகர் அருகே கடலில் கலக்கிறது. அடையாறு நதியின் கழிமுகத்துக்கும், கடற்கரைக்கும் இடையே சுமார் 1 கிமீ., பரப்புக்கு அடர்ந்த காடுகள் இருக்கிறது.இங்கு சந்தனம் போன்ற அரிய வகை மரங்கள்
தஞ்சாவூர்: அடுத்த ஆண்டு தமிழகத்தில் மேலும் 18 இடங்களில் கடலோர காவல் நிலையங்கள் துவக்கப்படும் என கடலோர பாதுகாப்பு பிரிவு ஐஜி ராஜேஸ்தாஸ் தெரிவித்துள்ளார்.தஞ்சையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக ஊடுருவுவதை தடுப்பதே கடலோர பாதுகாப்பு பிரிவின் முக்கிய நோக்கமாகும்.தமிழகத்தில் தற்போது 12 கடலோர பாதுகாப்பு காவல் நிலையங்கள் உள்ளன. இதனை அதிகப்படுத்தும் வகையில் மேலும்
தூத்துக்குடி: தூத்துக்குடி கடல் பகுதியில் திடீரென கடல் உள்வாங்கியதால் ஆயிரக்கணக்கான மீ்ன்கள் கடலோரத்தில் உள்ள சேற்றில் சிக்கி இறந்தன. இந்த மீன்களை மீனவர்கள் அள்ளிச் சென்றனர்.தூத்துக்குடி பீச்ரோட்டில் உள்ள கடல் பகுதியில் நேற்று காலை கடல்நீர் திடீரென உள்வாங்கியது. நீண்ட தூரத்துக்கு கடல் உள்வாங்கி காணப்பட்டதால் அந்த பகுதி, வற்றிய குளம் போல காட்சி அளித்தது.பச்சை வயல்வெளி
எல்லா அலைகளும் முடிந்தபின் தான்போயிருக்கவேண்டும்மணல்களோடு பேசிப்பழகியாகிவிட்டதுஇனி நீ வர தாமதமானால்கூடஎன்னை இருக்கச்செய்யும் இவை..காற்று மெல்ல ஊர்ந்து உடலெங்கும் படர்கிறதுஇதுபற்றி உன்னிடம் சொல்ல ஒன்றுமில்லைஈர மணலில் கோடுகள் வரைந்துபோகும்சிறு நண்டுகள் அனிச்சையாய் உன்தொடுகையை நியாபகப்படுத்தினஇன்றைக்கும் உன்- என் பெயரெழுதி வைத்தேன்முதல் இரண்டுக்கு தப்பினதைமூன்றாம் அலை முற்றிலுமாகஎடுத்துப்போனது -உன் பெயரை மட்டும்நட்சத்திரங்கள் அலைகளை கறுப்பாக்கியபின்னும்காத்திருக்கிறேன் -மெல்லசினுங்கினாய் அலைபேசியில்நாளை பார்போமென-சந்தோஷமாய் நகர்கிறேன்நாளையும்
தூத்துக்குடி: இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 4 இலங்கை மீனவர்களை கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான வீராவில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து 40 கடல்மைல் தொலைவில் இந்திய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு படகு நின்றுக் கொண்டிருப்பதை பார்த்தனர்.அதில் இலங்கை தேசிய கொடி காணப்பட்டதால்