சபரிமலை: சபரி்மலை ஐயப்பன் கோவில் பாதுகாப்புக்காக கூடுதலாக 2 கம்பெனி போலீசார் வந்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 16ம் தேதி முதல் மண்டல பூஜைகள் தொடங்கி நடந்து வருகின்றன. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அதிக அளவு பக்தர்கள் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். சபரிமலையில் பக்தர்கள் போல் தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்ற
வள்ளியூர்: தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அணுமின் நிலையத்தை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் ரஷ்யா நாட்டு உதவியுடன் சுமார் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.
திருப்பதி: அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ராகுல்காந்தி நாளை (18ம் தேதி) மதியம் 2.30 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருப்பதி வருகிறார். விமானம் ரேணிகுண்டா விமான நிலையத்தில் தரை இறங்குகிறது. அங்கிருந்து கார் மூலம் திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்துக்குச் செல்வும் ராகுல்,
சென்னை: இந்தியாவில் உள்ள முக்கிய அணு சக்தி மையங்களைத் தகர்க்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து கல்பாக்கம் அணு மின் நிலையப் பாதுகாப்பு குறித்து சென்னையில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது.பாகிஸ்தான் தீவிரவாதிகள், இந்தியாவில் உள்ள முக்கிய அணு சக்தி மையங்களைத் தாக்கித் தகர்க்க சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை மாநில அரசுகளையும், மத்திய
அகமதாபாத்: பாதுகாப்பு கருதி, இரவு நேரங்களில் கிரிக்கெட் வீரர்கள் வெளியே செல்லக் கூடாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.அகமதாபாத்தில் இந்தியா, இலங்க இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது.இரு அணி வீரர்களும் பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அணியினருக்கு மிரட்டல் இருப்பதாக கொழும்பிலிருந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தினர், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குத் தகவல்
தவாங் (அருணாச்சல் பிரதேசம்): அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் தனது பயணத்தை நாளை முதல் தொடங்குகிறார் திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா. இதையடுத்து தலாய் லாமாவை வரவேற்க தவாங் பகுதி மக்கள் பெரும் ஆவலோடு காத்துள்ளனர்.பனி படர்ந்த மலைகளுக்கு நடுவில், கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள பகுதிதான் தவாங். அருணாச்சல் பிரதேசத்தின் முக்கியப்
சென்னை: கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தொடர்ந்து இடையூறு செய்து வருவதால் அணையின் பாதுகாப்புக்கு சிஐஎஸ்எப் படையினரை நிறுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு இடையூறு செய்து வருகிறது.தமிழகத்தின் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து தற்போது
டெல்லி: தனது பாதுகாப்புப் படையினரால் ஏற்பட்ட கெடுபிடி காரணமாக ஒரு நோயாளிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் போய் அவர் உயிரிழந்தது பெரும் வருத்தம் அளிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.சண்டிகரைச் சேர்ந்த சுமித் பிரகாஷ் வர்மா என்பவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம், பிஜிமர் எனப்படும் சண்டிகர் முது நிலை மருத்துவக் கல்வி மற்றும்
டாக்கா: வங்கதேசத்தில் உள்ள இந்தியத் தூதர் பினக் ரஞ்சன் சக்ரவர்த்திக்கு இமெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.ஆகஸ்ட் 28ம் தேதி சக்ரவர்த்திக்கு ஒரு இமெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது. இதையடுத்து இந்தியத் தூதரகம், தூதர், தூதரக அதிகாரிகளுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சக்ரவர்த்தியிடம் கேட்டபோது அவர் பதிலளிக்க மறுத்து விட்டார். பாதுகாப்பு
சென்னை: சென்னையி்ல் 12 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பும், பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகன சோதனையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.சென்னையில் நேற்று ஒரே நாளில் 12 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தனியார் தொலைக்காட்சி நிலையம் மற்றும் ஆங்கில பத்திரிகை அலுவலகம், அடையார் போலீஸ் நிலையம் ஆகியவற்றுக்கு மிரட்டல் கடிதங்கள் வந்தன. அந்த